தமிழ்நாடு செய்திகள்

நமது ஆட்சி மலரும்போது ஊழல் இருக்காது, ஊழல் வாதிகள் இருக்க மாட்டார்கள்- த.வெ.க. தலைவர் விஜய்
- மக்கள் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம்.
- நமது ஆட்சி சிறுவாணி தண்ணீர் போல தூய்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும்.
கோவை தனியார் கல்லூரியில் நடைபெறும் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் 2ம் நாள் கருத்தரங்கில் விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழகம் அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல.
நமது ஆட்சி மலரும்போது ஊழல் இருக்காது, ஊழல் வாதிகள் இருக்க மாட்டார்கள்.
மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள், மக்களுக்கா வாழு என்று அண்ணா கூறினார்.
அண்ணா கூறியது போன்று மக்களிடம் சென்று நம் கொள்கைகளை எடுத்துக் கூற வேண்டும்.
மக்கள் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டோம்.
நமது ஆட்சி சிறுவாணி தண்ணீர் போல தூய்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும்.
வாக்குச்சாவடி வரும் மக்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story