என் மலர்

    துபாய்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துபாய் விமான நிலையத்துக்கு அருகே எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஈரான் டிரோன் தாக்குதல்
    • மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.

    ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் உள்ளிட்ட இடங்களிலும், இஸ்ரேல் மீதும் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.

    இந்த நிலையில் துபாய் விமான நிலையத்துக்கு அருகே எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஈரான் இன்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் எண்ணெய் கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

    இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சம்பவ இடத்திற்கு அவசர கால மீட்பு குழுக்கள் விரைந்தன. தற்போது நிலைமை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து எமிரெட்ஸ் விமான நிறுவனம் துபாயில் இருந்து புறப்படும் மற்றும் துபாயில் இருந்து வந்து சேரும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்து உள்ளது.

    துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சில விமானங்கள் அல்மக்தூ சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். துபாய் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் இருந்து சென்ற சில விமானங்கள் மீண்டும் திரும்பி வந்தன.

    இதே போல ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலைய வளாகத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தியது. டிரோன், ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் வீடுகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 40 நாட்களாக ஐசியுவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • போர் பதற்றத்தால் அதன் கட்டணம் 7 மடங்கு உயர்ந்துள்ளது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த திலக் குமார் மற்றும் அவரது மனைவி ஷாமினி ரமேஷ் ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வருகின்றனர். 

    சமீபத்தில் அவர்களை பார்ப்பதற்காக துபாய் சென்ற திலக் குமாரின் தாயார், அங்கு கடுமையான பாக்டீரியா தொற்றுக்கு உள்ளானார்.

    கடந்த 40 நாட்களாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் ஐசியு பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 3 லட்சம் ரூபாய் மருத்துவக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவரை மொத்தப் மருத்துவ கட்டணம் 1.25 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

    இன்னும் இரண்டு மாதங்களுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    செலவைக் குறைக்கத் தாயாரை இந்தியாவிற்கு அழைத்து வரத் திலக் குமார் திட்டமிட்டார்.

    மார்ச் 4-ம் தேதி 7 லட்சம் ரூபாய் செலவில் வணிக ரீதியான மருத்துவ விமானத்தில் செல்ல அனுமதி கிடைத்தது. ஆனால், போர் பதற்றம் காரணமாக அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.

    தற்போது தனியார் ஏர் ஆம்புலன்ஸ் மட்டுமே ஒரே வழி. போர் பதற்றத்தால் அதன் கட்டணம் 7 மடங்கு உயர்ந்து, 50 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

    ஆனால் திலக் குமாரால் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடியவில்லை.

    "நேரம் கடந்து கொண்டே செல்கிறது, எனது தாயை காப்பாற்றத் உதவ வேண்டும்" என்று திலக்குமார் NDTV வாயிலாக கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாம்பியன்ஸ் டிராபியில் 188 ரன்கள் உள்பட மொத்தமாக 490 ரன்கள் குவித்திருந்தார்.
    • ஒரே ஆண்டில் 7 சதம், 3 அரைசதத்துடன் 1,764 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

    துபாய்:

    இந்திய அணி மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு பிசிசிஐ சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டுக்கான விருதுகள் மார்ச் 15-ம் தேதி புதுடெல்லியில் நடைபெறவுள்ளது.

    நமன் விருதுகள் எனப் பெரியடப்பட்டுள்ள இந்த நிகழ்வில் இந்திய அணிக்காக 5 ஐசிசி கோப்பைகளை வென்ற அணி வீரர்களும் கவுரவிக்கப்படவுள்ளனர். சிறப்பாக விளையாடி வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    இந்நிலையில், சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வுக்கு பின் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பு சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. அவரின் தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடரை சமன் செய்த இந்திய அணி கேப்டன் கில், 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு இரட்டை சதம் உள்பட 754 ரன்கள் குவித்து மொத்தமாக 983 ரன்கள் குவித்திருந்தார்.

    சாம்பியன்ஸ் டிராபியில் 188 ரன்கள் உள்பட மொத்தமாக 490 ரன்கள் குவித்திருந்தார். ஒரே ஆண்டில் 7 சதம், 3 அரைசதத்துடன் 1,764 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். ஐ.பி.எல். போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் 650 ரன்கள் குவித்து அசத்தினார்.

    சர்வதேச டி20 போட்டிகளில் சரியாக விளையாடாததால் துணை கேப்டனான சுப்மன் கில் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வளைகுடா நாடுகளில் போர் வெடித்துள்ளது.
    • இதனால் இந்தப் போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

    துபாய்:

    ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையே துபாயில் கிரிக்கெட் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் டி20 தொடரும், அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடத்த முடிவானது.

    இரு அணிகள் இடையிலான டி20 போட்டிகள் மார்ச் 13, 15, 17 ஆகிய தேதிகளில் ஷார்ஜாவிலும், தொடர்ந்து, மார்ச் 20, 22, 25 ஆகிய தேதிகளில் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒருநாள் போட்டிகளை நடத்தவும் முடிவுசெய்யப்பட்டது.

    இந்நிலையில், வளைகுடா நாடுகளில் போர் வெடித்துள்ளதால், ஆப்கன், இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போட்டிகளை தள்ளிவைப்பது என முடிவானது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயணிகள் பாதுகாப்பு கருதி ரெயில் சுரங்கப்பாதைகளுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு மன்னிப்பு கேட்டார்.

    மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் எட்டாவது நாளை எட்டியுள்ளது.

    ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து வரும் சூழலில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் தூரகங்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இன்று துபாயில் பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. குறிப்பாக உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையமும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

    துபாய் விமான நிலையத்தின் மேல் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து கரும்புகை சூழ்ந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    விமான நிலையத்தில் எச்சரிக்கை ஒலி கேட்டவுடன், அங்கிருந்த பயணிகள் பாதுகாப்பு கருதி ரெயில் சுரங்கப்பாதைகளுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    துபாய் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் சில மணி நேரங்களுக்கு பின் பகுதி அளவு செயல்பட தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எமிரேட்ஸ் நிறுவனம் தனது அனைத்து விமானங்களையும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்துள்ளது.

    இதற்கிடையே துபாய் அரசு தனது வான் பாதுகாப்பு அமைப்பை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    நகரில் விழுந்த ஏவுகணைச் சிதறல்களால் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், ஆனால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

    முன்னதாக சில தினங்கள் முன் ஈரான் நடத்திய தாக்குதலில் பாம் ஜுமேராவில் உள்ள சொகுசு குடியிருப்புப் பகுதி புர்ஜ் அல் அரப் ஹோட்டல் அமெரிக்கத் தூதரகம் ஆகியவை பாதிப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

    மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், அந்த நாடுகள் ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தாதவரை அந்த நாடுகள் மீது இனி நேரடி தாக்குதல் நடத்த மாட்டோம் என இன்று உறுதி அளித்துள்ளார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூதரக கட்டிடத்தில் தீப்பிடித்து கரும்புகை எழும்பியது.
    • அமெரிக்காவின் உளவுத்துறை நிலையம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகம் மீதும்-இஸ்ரேல் மீதும் டிரோன், ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் தொடுத்து வருகிறது. சவுதி அரேபியா, குவைத்தில் அமெரிக்க தூதரகங்கள் மீது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தூதரக கட்டிடத்தில் தீப்பிடித்து கரும்புகை எழும்பியது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறும்போது,"துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அனைத்து அமெரிக்க ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்" என்றார்.

    சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் உள்ள அமெரிக்காவின் உளவுத்துறை நிலையம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

    மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவின் தென்மேற்கே அமைந்து உள்ளது. இந்த விமானப்படை தளம் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

    கத்தாரின் ராஸ் லபான், மசயீத்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டன. பக்ரைன் முழுவதும் இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன.

    வளைகுடா நாடுகள் மீதான தனது தாக்குதலை ஈரான் தொடர்ந்து நடத்தி வருகிறது. இன்று துபாய், அபுதாபி, கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டன. இதற்கிடையே சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படைகள் 9 டிரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவித்தது.

    இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர் தாக்குதல் நடத்தியது. ஈரானில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலின் ஜெருசலேமில் விழுந்து வெடித்தன. டெல் அவிவ் நகரின் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன.

    இதில் சில பகுதிகளில் வெடிமருந்துகளின் குப்பைகள் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதேபோல் இஸ்ரேல் முழுவதும் ஈரான் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குவைத்தில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நேற்று முன்தினம் டிரோன் தாக்குதல் நடத்தியது.
    • தேவைப்பட்டால் ஈரானில் தரைவழியாக தாக்குதல் நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்றார் டிரம்ப்.

    துபாய்:

    ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்நாடு அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    நான்காவது நாளாக நேற்றும் இந்தப் போர் உக்கிரமாக நடந்தது. இரவு முழுவதும் ஈரான்மீது இஸ்ரேல்-அமெரிக்க படைகள் ஏவுகணைகள் ஏவி தாக்குதல் நடத்தின. குவைத்தில் அமெரிக்க தூதரம் மீது ஈரான் நேற்று முன்தினம் டிரோன் தாக்குதல் நடத்தியது.

    இந்நிலையில், நேற்று சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானின் 2 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் தூதரக வளாகத்தில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சக அறிக்கை கூறி உள்ளது.

    அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலை கண்டித்து அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ஈரானின் ஏவுகணை பலத்தை முற்றிலும் அழிப்பது, இனி எப்போதும் அவர்களால் அணு ஆயுதம் தயாரிக்க முடியாமல் செய்வது, அதற்கான உள்கட்டமைப்புகளை முழுவதுமாக அழிப்பதற்காக இந்த போர் நடக்கிறது. எங்கள் இலக்குகள் எட்டப்படும் வரை இப்போர் ஓயாது. இந்தப் போர் 4 அல்லது 5 வாரங்கள் வரை நீடிக்கலாம். அதற்கான ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருக்கிறோம் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்துள்ளனர்.
    • 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் என ஈரான் தெரிவித்துள்ளது.

    அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்துள்ளனர்.

    இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.

    மேலும், அந்த நாடுகளின் முக்கிய இடங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 14 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் என ஈரான் தெரிவித்துள்ளது.

    ஈரான் தாக்குதலால் துபாய் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. புர்ஜ் கலிபாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    துபாயின் அபுதாபி சயீத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். விமான நிலையத்திற்கு அருகில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டன. 

    மேலும் துபாயின் பாம் ஜுமேராவில் உள்ள பாம் ஹோட்டல் கட்டிடத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    அதேபோல துபாய் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டது. இதில் நான்கு ஊழியர்கள் காயமடைந்தனர்.

    துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரப் ஹோட்டல் மற்றும் பிற முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
    • இறுதிப்போட்டி ஜூலை 5-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    துபாய்:

    நடப்பாண்டு ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    இந்தத் தொடர் ஜூன் 12-ம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துடன் தொடங்குகிறது. இறுதிப்போட்டி ஜூலை 5-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    குழு 1-ல் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகளும், குழு 2-ல் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    இந்தத் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. சமீபத்தில் நேபாளத்தில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டிகள் மூலம் வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன.

    ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ஜூன் 14-ம் தேதி நடைபெற உள்ளது. மகளிர் உலகக் கோப்பையில் இரு அணிகளும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன.இந்திய மகளிர் அணி முதல் ஆட்டத்தில் ஜூன் 14-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துடன் தொடங்குகிறது. ஜூன் 17-ம் தேதி ஹெட்டிங்லியில் நெதர்லாந்து அணியையும், ஜூன் 21-ம் தேதி ஓல்ட் டிராபோர்டில் தென் ஆப்பிரிக்க அணியையும் எதிர்கொள்கிறது. ஜூன் 25-ம் தேதி வங்கதேசத்துடனும், ஜூன் 28-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடனும் இந்தியா மோதவுள்ளது.

    தொடரின் அரையிறுதிப் போட்டிகள் ஜூன் 30 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி ஜூலை 5-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐசிசி டி20 பெண்களுக்கான பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலை வெளியிட்டது.
    • பாகிஸ்தான் வீராங்கனை சாதியா இக்பால் இடதுகை சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார்.

    துபாய்:

    ஐசிசி டி20 பெண்களுக்கான பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில், பாகிஸ்தான் வீராங்கனை சாதியா இக்பால் ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியா வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட், இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவை முந்தி முதலிடம் பிடித்துள்ளார்.

    சாதியா இக்பால் இடதுகை சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார். தென் ஆப்பிரிக்கா உடனான டி20 தொடரில் அசத்திய சாதியா இக்பால் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். இதனால் 2 இடம் முன்னேறி முதலிடம் பிடித்தார். கடைசி போட்டியில் 3 விக்கெட் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

    கடந்த 2024-ல் முதலிடம் பிடித்த இவர், சதர்லேண்ட் 2025-ல் முதலிடத்துக்கு வந்த பிறகு தரவரிசையில் கீழிறங்கினார்.

    பாகிஸ்தானின் சாதியா இக்பால் 743 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், இந்தியாவின் தீப்தி சர்மா 729 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் 727 புள்ளிகள் பெற்று மூன்றாமிடத்தையும், ஆஸ்திரேலியாவின் அன்னாபெல் சதர்லேண்ட் 721 புள்ளிகள் பெற்று நான்காமிடத்தையும் பெற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐசிசி டி20 ஆண்களுக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
    • ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா முதலிடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஐசிசி டி20 ஆண்களுக்கான ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா முதலிடம் பிடித்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் 2வது இடத்திலும், இந்தியாவின் ஹர்திக் பாண்டியா 3வது இடத்திலும் உள்ளனர்.

    சமீபத்தில் டி20 உலகக் கோப்பை தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில் சிக்கந்தர் ராசா பந்துவீச்சில் 1 விக்கெட்டும், பேட்டிங்கில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சிக்கந்தர் ராசா ஒருநாள் போட்டியின் ஆல் ரவுண்டருக்கான ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடம் வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
    • அஜித் குமார் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

    துபாயில் நடைபெற்று வரும் ஆசிய லீ மேன்ஸ் கார் ரேசிங் தொடருக்காக ரேசர் அஜித் குமார் துபாயில் இருக்கிறார். அஜித் குமாரின் ரேசிங்கை நேரில் காணவும், அவரை வாழ்த்தவும், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் துபாய் சென்று வருகின்றனர். இந்த வரிசையில், இயக்குநர் வெங்கட் பிரபு, ரேசர் அஜித் குமாரை சந்தித்துள்ளார்.

    ரேசிங் டி-ஷர்ட் மற்றும் சாம்பல் நிற தொப்பி அணிந்தபடி அஜித் குமாரை சந்தித்த வெங்கட் பிரபு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இயக்குநர் வெங்கட் பிரபு, அஜித் குமார் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில், அஜித் குமாரை சந்தித்தது, பந்தய களத்தில் கிடைத்த அனுபவம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "ரீடேக் இல்லை. ஸ்டன்ட் டபுள்ஸ் இல்லை. ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் இல்லை. உண்மையான வேகம், அபாயம் மற்றும் அர்ப்பணிப்பு. யாஸ் மெரினா சர்்க்யூட்டில் நம்ம அண்ணனை நேரில் பார்ப்பது உண்மயில் மெய்சிலிர்க்கும் அனுபவம், அது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இது சினிமா இல்லை, இதுதான் அஜித் குமார்," என குறிப்பிட்டுள்ளார்.



    ×