என் மலர்

    பிரான்ஸ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரான்சில் 2007 முதல் 2012 வரை பிரான்ஸ் அதிபராக பதவி வகித்தவர் சர்கோசி.
    • சர்கோசி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்தார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருந்தவர் நிகோலஸ் சர்கோசி. இவர் 2007 முதல் 2012 வரை பிரான்ஸ் அதிபராக பதவி வகித்தவர்.

    லிபியாவின் முன்னாள் அதிபர் மம்மர் கடாபிக்கு ஆதரவாக பேச நிகோலஸ் சர்கோசி முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஈடாக , சர்கோசியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு கடாபி நிதி உதவி செய்வதற்கான ஒப்பந்தம் இருதரப்புக்கு இடையே மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு பாரீஸ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி சர்கோசிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து இன்று பாரீஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், ஒரு லட்சம் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து சர்கோசி மேல்முறையீடு செய்தாலும், அவர் சிறைக்குச் செல்வது உறுதி என கூறப்படுகிறது.

    தன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வரும் சர்கோசி, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சர்கோசி கூறுகையில், நான் சிறையில் தூங்க வேண்டும் என அவர்கள் விரும்பினால் சிறையில் தூங்குவேன். ஆனால், தலைகுனிய மாட்டேன். தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தான் அதிபராக பதவி ஏற்ற பிறகு 7 போர்களை நிறுத்தி உள்ளேன் என்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
    • இந்தியா-பாகிஸ்தான் சண்டையும் என்னால் தான் தீர்க்கப்பட்டது என தொடர்ந்து சொல்லி வருகிறார்.

    பாரிஸ்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தான் அதிபராக பதவி ஏற்ற பிறகு 7 போர்களை நிறுத்தி உள்ளேன். இந்தியா-பாகிஸ்தான் சண்டையும் என்னால் தான் தீர்க்கப்பட்டது என தொடர்ந்து சொல்லி வருகிறார். நேற்று நடந்த ஐ.நா.சபை கூட்டத்திலும் அவர் இதே கருத்தை வலியுறுத்தினார். ஆனால் இந்தியா இதனை நிராகரித்துள்ளது.

    இதற்கிடையே, 7 போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என அதிபர் டிரம்ப் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

    இந்நிலையில், பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியதாவது:

    காசா போரை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல முடியும்.

    இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு மட்டுமே உள்ளது.

    தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது செய்யக்கூடிய நபராக டிரம்ப் இருக்கிறார்.

    காசாவில் இஸ்ரேல் அரசு தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    அமெரிக்கா இஸ்ரேல் மீது அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது.

    காசா மோதலை நடத்த அனுமதிக்கும் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு நாங்கள் வழங்குவதில்லை.

    நாங்கள் ஒருபோதும் செயலற்றவர்களாக இருக்கமாட்டோம். எப்போதும் பிரான்சின் நலன்களைப் பாதுகாப்போம் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாரிஸ் மற்றும் பிரான்சின் பிற பகுதிகளில் மக்கள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பிரதமராக செபாஸ்டின் லெகர்னுவை, அதிபர் மேக்ரான் நியமித்தார்.

    பிரான்சில் அதிபர் மேக்ரானின் 'ரினைசன்ஸ்' கட்சி பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி தயவை நம்பி ஆட்சியில் உள்ளது. இதனால் கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு பிரதமர்கள் மாறியுள்ளனர்.

    இதற்கிடையே பொது விடுமுறை நாட்களை குறைத்தல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தாதது, மருத்துவம், கல்வி, வீட்டு வசதி, மானியங்கள் போன்ற மக்களுக்கு அரசு வழங்கும் நலத் திட்டங்களுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய மசோதாவை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    அண்மையில் பட்ஜெட் குறைப்பு மசோதாவை தாக்கல் செய்ய, பிரதமராக இருந்த பிராங்காய்ஸ் பாய்ரு முயற்சித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா நிறைவேறவில்லை. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பிராங்காய்ஸ் பாய்ரு கோரினார். அதில் தோல்வியடைந்ததால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதற்கிடையே கடந்த திங்களன்று புதிய பிரதமராக செபாஸ்டின் லெகர்னுவை, அதிபர் மேக்ரான் நியமித்தார். இவ்வாறு பிரதமர்கள் தொடந்து மாறுவதும் பட்ஜெட் குறைப்பும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், நேற்று பாரிஸ் மற்றும் பிரான்சின் பிற பகுதிகளில் மக்கள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து, வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். மேலும் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

     போராட்டத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுதும் 80,000 போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

     இதற்கிடையே பட்ஜெட் குறைப்புக்கு எதிராக வரும் 18ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும், வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.

    பாரிஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, சீனாவின் லியு யீ- சென் போயாங் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய சீன ஜோடி முதல் செட்டை 21-19 என கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2வது செட்டை சாத்விக் சிராக் ஜோடி 21-18 என வென்றது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சீன ஜோடி 21-12 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தாலும் வெண்கல பதக்கத்தைப் பெற்று அசத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றது.

    பாரிஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யீக் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-12, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சாதவிக் சிராக் ஜோடி 2வது சுற்றிலும் வெற்றி பெற்றது.

    பாரிஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி, சீனாவின் லியனக் வெய் காங்-வாங் சாங் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 19-21 என முதல் செட்டை இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட சாத்விக் சிராக் ஜோடி அடுத்த இரு செட்களை 21-15, 21-17 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, மலேசியாவின் லெச்சனா கருப்பதேவன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மூன்று ரஃபேல் போர் விமானங்கள் உட்பட மொத்தம் ஐந்து இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
    • டசால்ட் ஏவியேஷன் எங்கள் விமானத்தின் இழப்புகளை ஒருபோதும் மறைக்கவில்லை" என்று அவர் எரிக் டிராப்பியர் தெரிவித்தார்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மே 7 அன்று இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தைத் தொடங்கியத. இந்த நடவடிக்கையில் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் உட்பட மொத்தம் ஐந்து இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.

    இந்நிலையில் பாகிஸ்தான் கூறியதை ரஃபேல் தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் மறுத்துள்ளது.

    இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், இந்தியா ஒரே ஒரு ரஃபேல் விமானத்தை மட்டுமே இழந்தது என்றும், அதுவும் பாகிஸ்தான் தாக்குதலால் அல்ல என்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராப்பியர் தெளிவுபடுத்தியுள்ளார்.

    "ஒரு ரஃபேல் விமானம் அதிக உயரத்தில் பறக்கும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. எங்கள் ஸ்பெக்ட்ரா மின்னணு போர் அமைப்பு தரவு பாகிஸ்தான் நடவடிக்கையால் விபத்து நிகழவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. டசால்ட் ஏவியேஷன் எங்கள் விமானத்தின் இழப்புகளை ஒருபோதும் மறைக்கவில்லை" என்று அவர் எரிக் டிராப்பியர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • பல்வேறு நாடுகளுக்கு செல்லும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவர் என தெரிவித்தது.

    பாரீஸ்:

    பிரான்சில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமான சேவைகளை 40 சதவீதம் அளவுக்கு குறைக்கும்படி பிரான்ஸ் விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.

    இந்நிலையில், ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ரியான் ஏர் 170 விமானங்களை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ரியான் ஏர் விமான போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதனால் இங்கிலாந்து, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் செல்லும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2020 ஆம் ஆண்டில் போலந்து 4.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 32 F-35 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
    • அமெரிக்க நிர்வாகமே F 35 தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்த ஆர்டரை பாதியாக குறைத்ததாக கூறப்பட்டது.

    ரஃபேல் போர் விமானம் குறித்து பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட சமூக வலைதள பதிவு வைரலாகி வருகிறது.

    "ரஃபேல் இஸ் காலிங்" என்று அதன் படத்துடன் மேக்ரான் தனது எக்ஸ் பக்கத்தில் "நமது ஐரோப்பாவைப் பாதுகாப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், இராணுவ தளவாடங்களுக்கு அமெரிக்க உற்பத்தியை சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்று மேக்ரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே இந்த அமெரிக்க போர் விமானங்களை வாங்கி பயன்படுத்துகின்றன. 2020 ஆம் ஆண்டில் போலந்து 4.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 32 F-35 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2021 ஆம் ஆண்டில் பின்லாந்து 64 விமானங்களுக்கான ஆர்டரை வழங்கியது.

    இதற்கிடையே சமீபத்தில் இஸ்ரேலுடனான மோதலில் ஈரான், F35 போர் விமானங்களை வீழ்த்தியதாக தகவல் வெளியானது. இதனால் அமெரிக்க நிர்வாகமே F 35 தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்த ஆர்டரை பாதியாக குறைத்ததாக கூறப்பட்டது.

    இந்த நிலையில்தான் பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ரஃபேல் விமானங்களை மேக்ரான் ஐரோப்பிய நாடுகளிடம் விளம்பரப்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது. அண்மையில் நடந்த மோதலின்போது இந்தியாவின் 4 ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீரஜ் சோப்ரா 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பாரிஸ் டயமண்ட் லீக்கை வென்றார்.
    • நீரஜ் சோப்ரா கிளாசிக் அடுத்த மாதம் 5-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

    பாரிஸ்:

    பாரிசில் டயமண்ட் லீக் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா நேற்று இரவு பட்டத்தை வென்றதன் மூலம் உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தார்.

    நேற்று நடந்த போட்டியின் முதல் சுற்றிலேயே 88.16 மீட்டர் தூரம் எறிந்தார். நடு சுற்றுகளில் 3 புள்ளிகள் இல்லாதபோதும், அவரது தொடக்க முயற்சியே போட்டி முழுவதும் அவரை முதலிடத்தில் வைத்திருந்தது.

    ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.88 மீட்டர் தூரம் எறிந்தார். பிரேசிலின் மௌரிசியோ லூயிஸ் டா சில்வா 86.62 மீட்டர் தூரம் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

    இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெறும் நீரஜ் சோப்ரா கிளாசிக்கின் தொடக்கப்பதிப்பில் விளையாடுகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இளைஞர்களிடையே வன்முறைப் போக்குகள் அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம்.
    • கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது.

    சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் மீது ஏற்படுத்தும் எதிர்மறைத் தாக்கம் குறித்து கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் பிரான்ஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

    15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க விரைவில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்படும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

    மேக்ரான் கூறுகையில், "15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) கூட்டு முடிவு எடுக்குமா என்பதைப் பார்க்க சில மாதங்கள் காத்திருப்போம். EU-விடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றால், பிரெஞ்சு அரசாங்கமே இந்தத் தடையை அமல்படுத்தும்" என்றார்.

    இளைஞர்களிடையே வன்முறைப் போக்குகள் அதிகரித்து வருவதற்கும், குழந்தைகள் மேற்பார்வையின்றி டிஜிட்டல் தளங்களை அணுகுவதற்கும் சமூக ஊடகங்களே முக்கிய காரணம் என்று மேக்ரான் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியா 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.  

    ×