என் மலர்

    பிரான்ஸ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடல் நாளை காலை வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் ஆலயத்துக்கு எடுத்து செல்லப்படும்.
    • 75-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் நல்லடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

    வாடிகன்சிட்டி:

    உலகம் முழுக்க சுமார் 250 கோடி கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் சுமார் 140 கோடி கிறிஸ்தவர்கள் கத்தோ லிக்க திருச்சபையை பின்பற்றுபவர்கள்.

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் ஆண்டவர் இருந்து வருகிறார். 266-வது போப் ஆண்டவராக அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த போப் பிரான்சிஸ் இருந்து வந்தார்.

    88 வயதான போப் பிரான்சிஸ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். சிறு வயதிலேயே அவருக்கு நிமோனியா தாக்குதல் ஏற்பட்டு கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சிறு வயதில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது.

    போப் ஆண்டவராக பதவி ஏற்ற பிறகு அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அவரது மூச்சு குழாயில் அலர்ஜி உருவானது. இதையடுத்து அவர் ரோம் நகரில் ஜெமிலி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.

    சிகிச்சைக்கு பிறகு அவர் உடல்நிலை சற்று தேறியதால் வீடு திரும்பி இருந்தார். நேற்று முன்தினம் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வாடிகன் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் தோன்றி சுமார் 40 ஆயிரம் பேருக்கு ஆசியும், வாழ்த்தும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை அவரது உடல்நிலை மோசமானது. காலை 7.35 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.

    போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு நேற்று அதிகாலை திடீர் பக்கவாதம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரது இதயம் செயலிழந்தது. அந்த செயலிழப்பு மீட்கப்பட முடி யாத அளவுக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அவ ருக்கு கோமா ஏற்பட்டது. கோமாவில் இருந்தபடியே அவர் உயிர் பிரிந்ததாக கத்தோலிக்க மத குருக்கள் தெரிவித்து உள்ளனர்.

    போப் ஆண்டவர் மரணம் குறித்து தகவல் அறிந்ததும் உலகம் முழுக்க வாழும் தலைவர்கள், மத தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இரங்கல் செய்தி வெளியிட்டன. கத்தோலிக்க திருச்சபை அமைப்பில் 252 கார்டி னல்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வாடிகன் நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள்.

    அதுபோல கத்தோலிக்க மதத்தின் மூத்த நிர்வாகிகள் உலகம் முழுவதும் இருந்து ரோமுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால் ரோம் நகரில் கட்டுக் கடங்காத கூட்டம் ஏற்பட்டு உள்ளது. வாடிகனில் திரண்டு உள்ள மத குருக்கள், பொதுமக்கள் போப் ஆண்டவருக்கு இறுதி விடை கொடுக்கத் தயாராகி வருகிறார்கள்.

    போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல் நேற்று பதப்படுத்தப்பட்டது. நேற்று இரவு அவரது உடல் காசா சந்தாமர்தா ஆலயத்தில் பெட்டிக்குள் வைக்கப்பட்டது. அப்போது சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. பெண் கத்தோலிக்க மத குரு இந்த ஆராதனையை தலைமையேற்று நடத்தினார்.

    போப் ஆண்டவரின் உடல் நாளை (புதன்கிழமை) காலை வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் ஆலயத்துக்கு எடுத்து செல்லப்படும். அங்கு போப் ஆண்டவருக்கு பொதுமக்கள் மற்றும் கத்தோலிக்க மத குருக்கள் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

    அதன் பிறகு போப் ஆண்டவர் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

    போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடலை அவரது விருப்பப்படி மிக மிக எளிய முறையில் வாடிகன் நகருக்கு வெளியே நல்லடக்கம் செய்ய கத்தோலிக்க மூத்த மத குருக்கள் முடிவு செய்து உள்ளனர். இந்த நல்லடக்கத்தை எப்போது எப்படி, எந்த நேரத்தில் நடத்துவது என்று முடிவு செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் போப் ஆண்டவர் இறுதி ஊர்வலம் தேதி முடிவு செய்து அறிவிக்கப்படும். அதன் பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி சடங்கு ஏற்பாடுகள் தொடங்கும்.

    போப் ஆண்டவர் பிரான்சிஸ் இறுதி ஊர்வலத்தில் உலகத் தலைவர்கள் பெரும்பாலானவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் ரோம் நகருக்கு சென்று போப் ஆண்டவர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

    75-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் போப் ஆண்டவர் இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இதை கருத்தில் கொண்டு ரோம் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    பொதுவாக போப் ஆண்டவர் மரணம் அடைந்து விட்டால் 4 முதல் 6 நாட்களுக்குள் நல்லடக்கம் செய்வது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அதன்படி போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடலும் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    அடக்கம் முடிந்த பிறகு 9 நாட்கள் அரசு துக்கம் கடைபிடிக்கப்படும். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கும்.

    15 முதல் 20 நாட்கள் கழித்து புதிய போப் ஆண்ட வரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
    • சவுதி அரேபியா, பிரான்சில் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் 3 வருடங்களை தாண்டி 4ஆவது வருடமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்டு டிரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் என்றார்.

    ஜனவரி 19ஆம் தேதி அதிபராக பதவி ஏற்றதும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும், ரஷிய அதிபர் புதின் உடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அமெரிக்கா ஒரு பரிந்துரையை வழங்கியது. அதேபோல் உக்ரைனும், ரஷியாவும் பரிந்துரைகள் வழங்கினது. ஆனால் அமெரிக்கா மற்றும் உக்ரைன் பரிந்துரைகளை ரஷியா ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல் அணிதிரட்டல் முயற்சிகள் மற்றும் மேற்கத்திய ஆயுத விநியோகங்களை நிறுத்துதல் போன்ற ரஷியாவின் பரிந்துரைகளை உக்ரைன் ஏற்கவில்லை.

    இதனால் அமெரிக்காவின் ஒருமாத கால போர் நிறுத்தம் எண்ணம் நிறைவேறாமல் உள்ளது. இருந்த போதிலும் உக்ரைன், ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    சவுதி அரேபியால் முதற்கட்ட பேச்சுவார்தை நடைபெற்றது. அமெரிக்காவின் விட்காஃப் 3 முறை புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    இந்த நிலையில்தான் பிரான்ஸ் தலைவர் பாரீசில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அமெரிக்கா, உக்ரைன், ஐரோப்பிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்திற்குப் பிறகு, இன்னும் சில நாட்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால், உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நிறுத்த முயற்சியை அமெரிக்கா கைவிடும் என அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

    அடுத்த வாரம் லண்டனில் அடுத்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

    பாரீஸ் ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு பேசிய ரூபியோ "போர் நிறுத்தம் சாத்தியமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலையை நாங்கள் எட்டவில்லை. அமெரிக்க நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நிறுத்தம் சாத்தியமா? இல்லையா? என்பதை இன்னும் சில நாட்களில் முடிவு செய்ய விரும்புகிறது" என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இங்கிலாந்து எம்.பி.க்கள் யுவான் யாங், அப்திசம் முகமது நுழைய தடை.
    • இஸ்ரேலுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்தை பரப்ப விரும்பியதால் தடை.

    இங்கிலாந்து எம்.பிக்களை கொண்ட பாராளுமன்ற குழுவினர் இஸ்ரேல் நாட்டுக்கு சென்றனர். இக்குழுவில் இடம்பெற்றிருந்த ஆளும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த 2 பெண் எம்.பி.க்களான யுவான் யாங், அப்திசம் முகமது ஆகியோரை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. அவர்களை நாட்டுக்குள் நுழைய தடை விதித்து திருப்பி அனுப்பியது.

    இதுதொடர்பாக இஸ்ரேலிய மக்கள் தொகை மற்றும் குடியேற்ற ஆணையம் கூறும்போது, இங்கிலாந்து எம்.பி.க்கள் யுவான் யாங், அப்திசம் முகமது ஆகியோர் பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தவும் இஸ்ரேல் எதிர்ப்பு வெறுப்பைப் பரப்பவும் திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டனர்.

    இஸ்ரேலுக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்தை பரப்ப விரும்பியதால் அவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்தது.


    எம்.பிக்களுக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இஸ்ரேலுக்கு இங்கிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டேவிட் லாமி கூறும்போது, இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களை இதுபோன்று நடத்துவது சரியல்ல என்பதை இஸ்ரேல் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளேன்.

    இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது, எதிர்மறையானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது. 2 எம்.பி.க்களை தொடர்பு கொண்டு ஆதரவை தெரிவித்துள்ளேன்.

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு திரும்புவதையும், ரத்தக்களரியை நிறுத்துவதற்கும், பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கும், காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் இங்கிலாந்து அரசு கவனம் செலுத்துகிறது என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரண்டு விமானிகளும் பாராசூட்டுடன் கீழே குதித்து உயிர்தப்பினர்.
    • இரண்டும் விழுந்து வெடித்ததில் அருகில் இருந்த தொழிற்சாலையிலும் தீவிபத்து ஏற்பட்டது.

    பிரான்ஸ் விமானப்படையின் 2 ஜெட் ரக விமானங்கள் நேற்றைய தினம் பயிற்சியின்போது நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகி உள்ளது.

    கிழக்கு பிரான்சின் ஹாட்-மார்னேவில் உள்ள செயிண்ட்-டிசியர் அருகே நேற்று பயிற்சியின்போது  பிரான்ஸ் விமானப்படை ஆல்பா ஜெட் விமானங்கள் இரன்டு நடுவானில் மோதிக்கொண்டன.

    மோதலுக்கு முன்னர் இரண்டு விமானிகளும் பாராசூட்டுடன் கீழே குதித்து உயிர்தப்பினர். அவர்கள் நலமுடன் இருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

    விபத்துக்கு பின் விமானங்கள் இரண்டும் விழுந்து வெடித்ததில் அருகில் இருந்த தொழிற்சாலையிலும் தீவிபத்து ஏற்பட்டது. எனினும் பெரிய சேதங்கள் ஏதுமில்லை என்று கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

     

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைன்- ரஷியா இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
    • ஒருவேளை போர் நிறுத்தம் ஏற்பட்டால் அதன்பின் ரஷியா மீண்டும் படையெடுத்தால் என்ன செய்வது என்ற அச்சம் உள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. தொடக்கத்தில் ரஷியா எல்லையில் உள்ள பகுதிகளை பிடித்தது. பின்னர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன பதிலடி கொடுத்தது. இதனால் பெரும்பாலான பகுதியில் இருந்து ரஷிய ராணுவம் பின்வாங்கியது.

    கடந்த 4 ஆண்டுகளாக இரு நாடுளுக்கும் இடையில் இந்த சண்டை நீடித்து வருகிறது. இரு நாடுகளும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்த நிலையில், மிகப்பெரிய அளவில் பொருட்சேதத்தையும் எதிர்கொண்டுள்ளன. உலகப் பொருளாதாரத்திற்கு ரஷியா-உக்ரைன் சண்டை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பதிவி ஏற்றார். அதன்பின் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறார். விரைவில் உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் எனத் தெரிகிறது.

    இதற்கிடையே வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது டொனால்டு டிரம்ப்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து உக்ரைனுக்கு வழங்கும் உதவியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார்.

    அதேவேளையில் பிரான்ஸ் ராணுவ உதவியை அதிகரிக்க முடிவு செய்தது. தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், பிற்காலத்தில் ரஷியா மீண்டும் படையெடுக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது தொடர்பான அச்சம் உக்ரைன் மற்றும் உலக நாடுகளுக்கு உள்ளது.

    இதனால் ரஷியா போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஒருவேளை படையெடுத்தால், உக்ரைனுக்கு உதவுவதற்காக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

    இது தொடர்பாக நாளை பாரீஸ் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதில் 30 நாட்டிற்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என பிரான்ஸ் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்த கூட்டத்தின் முதற்பகுதியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் திட்டம் குறித்து விவரிக்கப்படும். அதன்பின் மற்ற நாடுகளின் பாதுகாப்புப்டையில் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

    திடீரென ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் ஒரு சில மணி நேரத்திற்குள் அல்லது ஓரிடு நாட்களில் உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை அனுப்புவதுதான் பாதுகாப்புப் படையின் முதன்மையான நோக்கமாகும்.

    இந்தப் படையில் நாடுகள் பங்கேற்குமா? என்பது குறித்த இறுதி முடிவு அரசியல் மட்டத்தில், அரசாங்கத் தலைவர்களால் எடுக்கப்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, தைவான் வீரர் லின் சுன் யீ உடன் மோதினார்.

    இதில் ஆயுஷ் ஷெட்டி 13-21, 15-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
    • காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, டானிஷின் கெம்கே உடன் மோதினார்.

    இதில் ஆயுஷ் ஷெட்டி 21-16, 21-23, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதியில் ஆயுஷ் ஷெட்டி தைவான் வீரர் லின் சுன் யீயை சந்திக்க உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
    • 3வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, ஹாங்காங்கின் ஜேசன் குணாவன் உடன் மோதினார்.

    இதில் ஆயுஷ் ஷெட்டி 21-17, 21-17 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரவிந்த் சிதம்பரம் 7-வது சுற்றிலும் முன்னிலை வகிக்கிறார்.
    • பிரக்ஞானந்தா 2வது இடத்தில் நீடிக்கிறார்.

    பிராக்:

    பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதன் 7வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, சீனாவின் வெய் யூ உடன் மோதினார்.

    வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 61-வது நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்தார்.

    இதேபோல், கறுப்பு நிற காய்களுடன் ஆடிய அரவிந்த் சிதம்பரம் 39-வது நகர்த்தலில் ரஷியாவின் அனிஷ் கிரியுடன் மோதி வெற்றி பெற்றார்.

    இதையடுத்து,76-வது சுற்று முடிவில் அரவிந்த் சிதம்பரம் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பிரக்ஞானந்தா 4.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
    • இதனால் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுசெய்யும் அளவில் உதவிகளை விரைவுப்படுத்த மேக்ரான் உத்தரவு.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் போர் முடிவுக்கு வரவில்லை. ரஷியா, தனது எல்லைப் பகுதியில் உள்ள உக்ரைன் நகரங்களை போரின் தொடக்கத்தில் கைப்பற்றியது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து இழந்த பெரும்பாலான பகுதிகளை மீட்டது.

    தற்போது உக்ரைன் மீது ரஷியா அடிக்கடி டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவின் டிரோன் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.

    உக்ரைனுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி செய்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமங்களை எடுப்பதற்கு அமெரிக்கா உக்ரைனுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பியது. இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார்.

    அப்போது டொனால்டு டிரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி பத்திரிகையாளர்களை சந்தித்தனர். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படடது. போர் நிறுத்தம் ஏற்பட்டால் ரஷியா அதை மீறாமல் இருப்பதற்கு என்ன உத்தரவாதம்? என ஜெலன்ஸ்கி கேள்வி எழுப்பினார். அதேவேளையில் அமெரிக்கா உக்ரைனுக்கு எவ்வளவு உதவி செய்துள்ளது. இதற்கான அமெரிக்காகவுக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. உக்ரைன் வீரர்கள் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்துவதாக ஜெலன்ஸ்சியை டிரம்ப் சாடினார்.

    இதனால் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இதற்கிடையே உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ உதவியை அமெரிக்கா தடாலடியாக நிறுத்தியது.

    குறிப்பாக ராணுவ புலனாய்வு உதவியை நிறுத்தியது. இது ரஷியா ராணுவத்தின் நகர்வு மற்றும் அதன் மீதான இலக்கு ஆகிவற்றிற்கு உதவி செய்து வந்தது.

    இந்த நிலையில் நாங்கள் உக்ரைனுக்கு உதவி செய்வோம் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் செபஸடியன் லெகோர்னு கூறுகையில் "எங்களுடைய புலனாய்வு இறையாண்மை கொண்டது. நாங்கள் புலானாய்வை கொண்டுள்ளோம். அதை உக்ரைன் பயனடைய நாங்கள் அனுமதிக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா உதவியை நிறுத்தியதால், அதை ஈடுசெய்யும் அளவிற்கு பல்வேறு உதவி தொகுப்புகளை விரைவுப்படுத்துங்கள் என அதிபர் இமானுவேல் மேக்ரான் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். அத்துடன், அமெரிக்காவின் முடிவால் போலந்தில் இருந்து உக்ரைனுக்கு கப்பலில் செல்லக்கூடிய உதவிப் பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    துரதிருஷ்டவசமாக மூன்று வருடங்களுக்கு மேலாக இந்த போரில் எவ்வாறு போரிட வேண்டும் என்று உக்ரைன் மக்கள் கற்றுக்கொண்டுள்ளனர். மேலும், பொருட்களை எப்படி சேமித்து வைக்க வேண்டும் எனவும் தெரிந்து கொண்டனர் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கார் முன்பு ஆவேசமாக கோஷமிட்டப்படி தேசிய கொடியை கிழித்தார்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்.

    லண்டன்:

    இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    லண்டனில் உள்ள சாட்தம் ஹவுஸ் கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய் சங்கர் கலந்து கொண்டார். அப்போது அந்த கட்டிடத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் காலிஸ்தான் கொடிகளை ஏந்தியப்படி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். போராட்டம் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே வந்த ஜெய்சங்கர் காரில் ஏறினார். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். திடீரென்று ஒரு நபர், ஜெய்சங்கரின் காரை நோக்கி ஓடினார். அவர் தனது கையில் தேசிய கொடியை வைத்திருந்தார்.


    கார் முன்பு ஆவேசமாக கோஷமிட்டப்படி தேசிய கொடியை கிழித்தார். உடனே அந்த நபரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    பின்னர் ஜெய்சங்கர் காரில் புறப்பட்டுச் சென்றார். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

    ஜெய்சங்கரின் கார் மறிக்கப்பட்ட மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
    • 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    பிரான்சில் ஆர்லியன் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரர் டகாஹஷி உடன் மோதினார்.

    இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், தைவான் வீரர் வாங் உடன் மோதினார். இதில் பிரனாய் 21-11, 20-22, 21-9 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    ×