என் மலர்

    உலகம்

    ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு உடனான ஒத்துழைப்பை சஸ்பெண்ட் செய்து ஈரான் அதிபர் உத்தரவு..!
    X

    ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு உடனான ஒத்துழைப்பை சஸ்பெண்ட் செய்து ஈரான் அதிபர் உத்தரவு..!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரான் அணுசக்தி திட்டங்களை தாக்கி அழித்ததாக அமெரிக்கா தெரிவித்தது.
    • மீண்டும் சீரமைத்து வருவதாக ஈரான் கூறிய நிலையில் ஒத்துழைப்புக்கு தடைவிதித்துள்ளது.

    ஈரான் அணுசக்தி திட்டங்களை மேம்படுத்தி வருவதாக அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அணு ஆயுதம் தயாரிப்பதற்கான யூரேனியத்தை செறிவூட்டும் பணியை அதிவேகமாக மேற்கொண்டு வருகிறது எனக் குற்றம்சாட்டியது.

    இதனால் ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஈரானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த நிலையில்தான் தங்கள் நாட்டிற்கு ஈரானால் அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேல் அறிவித்து, ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக, அமெரிக்கா ஈரானில் உள்ள அணுஆயுத திட்டங்களை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஆணுஆயுத திட்டங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக தெரிவித்தது.

    சுமார் 12 நாட்களுக்குப் பின் போர் நிறுத்தம் ஏற்பட்டது. தற்போது ஈரான் அணுஆயுத திட்டங்களை சீரமைப்பு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பு சஸ்பெண்ட் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார். ஈரான் பாராளுமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    Next Story
    ×