உலகம்

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் 22 குடியிறுப்புகளை நிறுவும் இஸ்ரேல்
- 1967ஆம் ஆண்டு போரின்போது மேற்குக் கரையை கைப்பற்றியது.
- யூத மக்களுக்கான மேற்குக் கரையில் இஸ்ரேல் 100-க்கும் அதிகமான குடியிறுப்புகளை நிறுவியுள்ளது.
ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் யூதர்களுக்காக 22 புதிய குடியிறுப்புகளை நிறுவ இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. அரசு அனுமதியின்றி ஏற்கனவே கட்டப்பட்டுள்ள புறக்காவல் நிலையங்களை சட்டப்பூர்வமாக்கவும் முடிவு செய்துள்ளது.
1967ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது இஸ்ரேல், காசா முனையுடன் மேற்குக் கரையை கைப்பற்றியது. கிழக்கு ஜெருசலேம் பகுதியையும் கைப்பற்றியது. இந்த மூன்று பிராந்தியங்களையும் தங்களுடைய எதிர்கால நாட்டிற்கான மாநிலங்களாக பாலஸ்தீனர்கள் விரும்புகிறார்கள்.
இஸ்ரேல் நிலத்தில் எங்களது வரலாற்று உரிமையை வலுவாக நிலைநிறுத்தவும், பயங்கரவாதத்தை நொறுக்கும் பதிலடியாகவும் இந்த குடியிறுப்பு முடிவுகள் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் "இஸ்ரேலுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு பாலஸ்தீன அரசை நிறுவுவதைத் தடுக்கும் ஒரு மூலோபாய நடவடிக்கையாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மேற்கு கரையில் இஸ்ரேல் 100-க்கும் மேற்பட்ட குடியிறுப்புகளை கட்டியுள்ளது. இதில் சுமார் 5 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். ஷாப்பிங் மால், தொழிற்சாலைகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த குடியிறுப்புகள் கட்டப்பட்டுள்ளன.
மேற்குக் கரையில் 3 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் இஸ்ரேலிய ராணுவ ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர். மேற்கத்திய ஆதரவு பெற்ற பாலஸ்தீன ஆணையம் மக்கள் தொகை மையங்களை நிர்வகிக்கிறது. குடியேறியவர்களுக்கு இஸ்ரேலிய குடியுரிமை உள்ளது.