என் மலர்

    இஸ்ரேல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேதமடைந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு குறித்து ரஷியா கவலை தெரிவித்துள்ளது
    • ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைகளை ஏவியது.

    ஈரான் அணுசக்தி திட்டங்கள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் நேற்று காலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.

    ஈரானின் நடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் வசதி, ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் அணு ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய தளங்கள் தாக்கப்பட்டது. நடான்ஸ் 60% யுரேனியத்தை வளப்படுத்தும் திறன் கொண்டது. சேதமடைந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு குறித்து ரஷியா கவலை தெரிவித்துள்ளது

    இந்நிலையில் இதற்கு பதிலடியாக இன்று காலை வரை, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்" என்ற பெயரில் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டு, 34 பேர் காயமடைந்தனர். ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு 19 பேர் காயமடைந்தனர்.

    டெல் அவிவ் மீது பாயும் ஈரான் ஏவுகணைகள்

    இன்று அதிகாலை வரையிலும் இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின. ஈரானின், தெஹ்ரான், இஸ்ஃபஹான், இஸ்ரேலின், டெல் அவிவ், ஜெருசலேம், ராமத் கான், ரிஷோன் லெசியோன் உள்ளிட்ட நகரங்களில் வெடிச்சத்தங்களும் சைரன்களும் ஒலித்தவண்ணம் இருந்தன.

    இஸ்ரேலின் டெல் அவிவில் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்தனர். இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான IRON DOME ஐ ஊடுருவி ஈரான் ஏவுகணைகள் டெல் அவிவில் கட்டிடங்களை சேதப்படுத்திய காட்சிகள் வைரலாகி வருகின்றன.

    பதுங்கு குழிகளில் டெல் அவிவ் மக்கள்

    இதற்கிடையே ஈரானிய ஏவுகணைகளை இடைமறிக்க அமெரிக்கப் படைகள் இஸ்ரேலுக்கு உதவியதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த மோதல்கள் காரணமாக முழு அளவிலான போர் ஏற்படும் அச்சம் அதிகரித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • "ஈரான் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல்; இஸ்ரேல் முடிவல்ல, இது வெறும் ஆரம்பம்" என்று கூறி IDF கூறியது.
    • ரஷியா , உக்ரைன், சீனா, சூடான் உள்ளிட்ட 15 நாடுகளும் ஈரானின் ஏவுகணை வரம்பிற்குள் உள்ளன

    நேற்று அதிகாலை முதல் ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்துள்ளது.

    இதற்கிடையே, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் வரம்பைக் காட்டும் வரைபடம் ஒன்றை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) வெளியிட்டிருந்தன.

    "ஈரான் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல்; இஸ்ரேல் முடிவல்ல, இது வெறும் ஆரம்பம்" என்று கூறி IDF இந்த வரைபடத்தை வெளியிட்டிருந்தது.

    அந்த வரைபடத்தில், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதியாகவும், வடகிழக்கு இந்தியா நேபாளத்தின் பகுதியாகவும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    சமூக வலைத்தளங்களில் இந்தியப் பயனர்கள் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவித்ததையடுத்து, IDF வெளியிட்ட விளக்கத்தில், "இந்த வரைபடம் பிராந்தியத்தின் ஒரு விளக்கப் படம். இது எல்லைகளைத் துல்லியமாக சித்தரிக்கத் தவறிவிட்டது. இந்த படத்தால் ஏற்பட்ட எந்தத் தவறுக்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டது.

    இந்த வரைபடத்தில் ரஷியா , உக்ரைன், சீனா, சூடான் உள்ளிட்ட 15 நாடுகளும் ஈரானின் ஏவுகணை வரம்பிற்குள் உள்ளன எனக் காட்டப்பட்டிருந்தது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரானிய முப்படை ராணுவத் தளபதி முகமது பாகெரி உட்பட பல உயர் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
    • இஸ்ரேல் வான்பரப்பு மூடப்பட்டு நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் இன்று அதிகாலை ஈரானின் அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் மீது "ரைசிங் லயன்" என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஈரானின் நாடான்ஸ் அணுசக்தி செறிவூட்டும் மையம் மற்றும் அணு ஆயுதத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் இருக்கும் இடம், பாலிஸ்டிக் ஏவுகணை திட்ட தளங்கள் ஆகியவற்றைத் தாக்கியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

    இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தலை நீக்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.

    இந்நிலையில் இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேலை நோக்கி சுமார் 100 டிரோன்களை ஏவியுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்த டிரோன்களை இடைமறிக்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் வான்பரப்பு மூடப்பட்டு நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் வான்பரப்பும் மூடப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புரட்சிகர காவல்படைத் தலைவர் ஹொசைன் சலாமி, ஈரானிய முப்படை ராணுவத் தளபதி முகமது பாகெரி உட்பட பல உயர் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    ஈரானிய அரசு தொலைக்காட்சியின்படி, இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிகிறது. இஸ்ரேல்- ஈரான் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கமாக காசா பயணம்.
    • இஸ்ரேல் ராணுவம் அவர்களை தடுத்து நிறுத்தியது. தற்போது தன்பர்க்கை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது.

    காசாவுக்குள் கடந்த 3 மாதங்களாக உணவு மற்றும் உதவிப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தடுத்தது. இந்நிலையில் காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச்சென்ற மெடலின் என்ற கப்பலை இஸ்ரேல் சிறை பிடித்துள்ளது.

    ஸ்வீடனை சேர்ந்த காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் தலைமையிலான 12 தன்னார்வலர்களுடன் அந்த கப்பல் ஜூன் 1ஆம் தேதி இத்தாலியின் மத்திய தரைக்கடல் தீவுப் பகுதியான சிசிலியிலிருந்து புறப்பட்டது.

    சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை உலகிற்கு அம்பலப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும். காசாவில் உள்ள ஒரே பெண் மீனவரின் பெயரால் 'மேடலின்' என்று கப்பலுக்கு பெயரிடப்பட்டது.

    ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் பிரெஞ்சு உறுப்பினர் ரிமா ஹாசன், நடிகை லியான் கன்னிங்ஹாம் மற்றும் ஜெர்மன் மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் அகார் ஆகியோரும் இந்த பயணக்குழுவில் இருந்தனர்.

    கப்பலை கைப்பற்றிய இஸ்ரேல், அதில் உள்ள பயணிகள் காசாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தது.

    இந்த நிலையில் கிரேட்டா தன்பர்க்கை, அவரது சொந்த நாடானா ஸ்வீடனுக்கு இஸ்ரேல் அனுப்பி வைத்துள்ளது. பிரான்ஸ்க்கு அவர் விமானத்தில் ஏற்றி விட்டுள்ளனர். பிரான்ஸ் சென்று அங்கிருந்து ஸ்வீடன் செல்கிறார்.

    தடுத்து நிறுத்தப்பட்டுள்ள மற்ற ஆர்வலர்களையும் விடுவிக்க வேண்டும் என தன்பர்க் வலியுறுத்தியுள்ளார். மேலும், தடுத்து நிறுத்தியபோது குழப்பமான, நிச்சயமற்ற சூழ்நிலை உருவானது எனத் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காசாவில் உள்ள ஒரே பெண் மீனவரின் பெயரால் 'மேடலின்' என்று கப்பலுக்கு பெயரிடப்பட்டது.
    • கிரேட்டா தன்பர்க் தலைமையிலான 12 தன்னார்வலர்களுடன் அந்த கப்பல் கடந்த வாரம் பயணத்தை தொடங்கியது.

    காசாவுக்குள் கடந்த 3 மாதங்களாக உணவு மற்றும் உதவிப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தடுத்தது. இந்நிலையில் காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மெடலின் என்ற கப்பலை இஸ்ரேல் சிறை பிடித்துள்ளது.

    அந்தக் கப்பல் இஸ்ரேலின் ஆஷ்டோட் துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

    ஸ்வீடனை சேர்ந்த காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பர்க்  தலைமையிலான 12 தன்னார்வலர்களுடன் அந்த கப்பல்  ஜூன் 1 ஆம் தேதி இத்தாலியின் மத்திய தரைக்கடல் தீவுப் பகுதியான சிசிலியிலிருந்து கப்பல் புறப்பட்டது.

    சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற நடைமுறைகளை உலகிற்கு அம்பலப்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.

    காசாவில் உள்ள ஒரே பெண் மீனவரின் பெயரால் 'மேடலின்' என்று கப்பலுக்கு பெயரிடப்பட்டது.

    ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் பிரெஞ்சு உறுப்பினர் ரிமா ஹாசன், நடிகை லியான் கன்னிங்ஹாம் மற்றும் ஜெர்மன் மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் அகார் ஆகியோரும் இந்த பயணக்குழுவில் உள்ளனர்.

    இந்நிலையில் கப்பலை கைப்பற்றியுள்ள இஸ்ரேல், அதில் உள்ள பயணிகள் காசாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இஸ்ரேல் மேடலின் கப்பலையும் தன்னார்வலர்களையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் காசாவில் தனது படுகொலைகளைத் தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், காசாவில் 108 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உணவு தேடி உதவி மையம் வந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்துள்ளனர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முஜாஹிதீன் பிரிகேட்ஸ் என்ற பாலஸ்தீன ஆயுதக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்தக் கிப்புட்ஸில் உள்ள நான்கில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டனர் அல்லது பணயக்கைதிகளாக கடத்தப்பட்டனர்.

    கடந்த 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பிணைக் கைதியான நட்டாபாங் பின்டா (Nattapong Pinta) என்பவரின் உடலை மீட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

    நட்டாபாங் பின்டாவின் உடல், 'முஜாஹிதீன் பிரிகேட்ஸ்' என்ற பாலஸ்தீன ஆயுதக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், காசாவின் தெற்குப் பகுதியான ரஃபா நகரில் இருந்து அது மீட்கப்பட்டதாகவும் காட்ஸ் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்குத் தாய்லாந்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விவசாயியாகப் பணிபுரிந்த பின்டா, காசா எல்லைக்கு அருகே உள்ள 'நிர் ஓஸ் கிப்புட்ஸ்' என்ற சிறு சமூகத்தில் இருந்து கடத்தப்பட்டார். அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில், இந்தக் கிப்புட்ஸில் உள்ள நான்கில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டனர் அல்லது பணயக்கைதிகளாக கடத்தப்பட்டனர்.

    நட்டாபாங் பின்டா உயிருடன் கடத்தப்பட்டதாகவும், பின்னர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்ட மேலும் இரண்டு இஸ்ரேலிய-அமெரிக்க பிணைக் கைதிகளின் உடல்களும், அதே ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. முஜாஹிதீன் பிரிகேட்ஸ் தரப்பில் இருந்து உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லை.

    அக்டோபர் 7 தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 251 பேர் பிணைக் கைதிகளாக கடத்தப்பட்டனர். இவர்களில் 55 பேர் இன்னும் காசாவில் இருப்பதாகவும், அவர்களில் சுமார் 20 பேர் உயிருடன் இருக்கலாம் என்றும் இஸ்ரேல் அதிகாரிகள் நம்புகின்றனர்.

    இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய ராணுவ நடவடிக்கையில் காசாவில் 54,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்ததாகவும் காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்ட நிலையில், 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு 7ஆம் தேதி திடீரென இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அத்துடன் உயிரிழந்த சிலரின் உடல்களையும் எடுத்துச் சென்றனர்.

    இதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது கடும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசா முனை உருக்குலைந்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனார்.

    பேச்சுவார்த்தை மூலம் இரண்டு முறை இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களும் விடுவிக்கப்பட்டனர்.

    ஹமாஸ் பிடியில் இன்னும் 50-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அடங்கும். தற்போது காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய வருகிறது. பாதுகாப்பு பகுதிகளை அதிகரிப்பதற்காக இந்த தாக்குதலை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஜூடி வெயின்ஸ்டெயின் (70), கட் ஹக்காய் (72) ஆகிய இரண்டு பிணைக்கைதிகளின் உடல்களை மீட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    கணவன் மனைவிகளாக இவர்கள் கிப்புட்ஸ் நிர் ஓஸ் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் நடைபயணம் மேற்கொண்ட போது ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக்கொலை செய்து உடல்களை எடுத்துச் சென்றுள்ளனர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் கொல்லப்பட்ட செய்தி உறுதி செய்யப்பட்டது.

    இருவருடைய உடல்களும் மீட்கப்பட்ட நிலையில் பெஞ்சமின் நேதன்யாகு "இஸ்ரேலின் அனைத்து மக்களுடன் நானும், எனது மனைவியும் இணைந்து, அவர்களுடைய அன்பான குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மிகவும் பயங்கரமான இழப்பால் எங்கள் இதயங்கள் வேதனையடைகின்றன. அவர்களில் நினைவு ஆசீர்வதிக்கப்படட்டும்" என இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ஜூடி வெயின்ஸ்டெயின், கட் ஹக்காய் ஆகிய இருவரும் அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஸ்ரேல் 1,236 பாலஸ்தீன கைதிகளையும் 180 பாலஸ்தீனியர்களின் உடல்களையும் திருப்பி அனுப்பும்
    • அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஒப்பந்தம் வழங்கினார்.

    ஹமாஸ் எந்த விலை கொடுத்தாவது போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

    காசா போரை நிறுத்த அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் வழங்கிய ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்கவில்லை என்றால், அது முற்றிலுமாக அழிக்கப்படும் என்று காட்ஸ் எச்சரித்துள்ளார்.

    காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு ஈடாக இரண்டு கட்ட பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை ஸ்டீவ் விட்காஃப் முன்மொழிந்துள்ளார்.

    இதன் கீழ், 10 உயிருள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளும் 18 இறந்த உடல்களும் ஒப்படைக்கப்படும். இஸ்ரேல் 1,236 பாலஸ்தீன கைதிகளையும் 180 பாலஸ்தீனியர்களின் உடல்களையும் திருப்பி அனுப்பும்.

    அக்டோபர் 2023 இல் ஹமாஸ் தாக்குதலின் போது 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இவர்களில் 57 பேர் இன்னும் காசாவில் உள்ளனர். அவர்களில் 34 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    அமெரிக்கா ஹமாஸுக்கு போர்நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளதாகவும், அதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1967ஆம் ஆண்டு போரின்போது மேற்குக் கரையை கைப்பற்றியது.
    • யூத மக்களுக்கான மேற்குக் கரையில் இஸ்ரேல் 100-க்கும் அதிகமான குடியிறுப்புகளை நிறுவியுள்ளது.

    ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் யூதர்களுக்காக 22 புதிய குடியிறுப்புகளை நிறுவ இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. அரசு அனுமதியின்றி ஏற்கனவே கட்டப்பட்டுள்ள புறக்காவல் நிலையங்களை சட்டப்பூர்வமாக்கவும் முடிவு செய்துள்ளது.

    1967ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது இஸ்ரேல், காசா முனையுடன் மேற்குக் கரையை கைப்பற்றியது. கிழக்கு ஜெருசலேம் பகுதியையும் கைப்பற்றியது. இந்த மூன்று பிராந்தியங்களையும் தங்களுடைய எதிர்கால நாட்டிற்கான மாநிலங்களாக பாலஸ்தீனர்கள் விரும்புகிறார்கள்.

    இஸ்ரேல் நிலத்தில் எங்களது வரலாற்று உரிமையை வலுவாக நிலைநிறுத்தவும், பயங்கரவாதத்தை நொறுக்கும் பதிலடியாகவும் இந்த குடியிறுப்பு முடிவுகள் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் "இஸ்ரேலுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு பாலஸ்தீன அரசை நிறுவுவதைத் தடுக்கும் ஒரு மூலோபாய நடவடிக்கையாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே மேற்கு கரையில் இஸ்ரேல் 100-க்கும் மேற்பட்ட குடியிறுப்புகளை கட்டியுள்ளது. இதில் சுமார் 5 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள். ஷாப்பிங் மால், தொழிற்சாலைகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த குடியிறுப்புகள் கட்டப்பட்டுள்ளன.

    மேற்குக் கரையில் 3 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் இஸ்ரேலிய ராணுவ ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர். மேற்கத்திய ஆதரவு பெற்ற பாலஸ்தீன ஆணையம் மக்கள் தொகை மையங்களை நிர்வகிக்கிறது. குடியேறியவர்களுக்கு இஸ்ரேலிய குடியுரிமை உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ஏற்கனவே முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு தலைவர் கொல்லப்பட்டுள்ளார்.

    காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் சீனியர் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் பேசும்பேது நேதன்யாகு, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் பட்டியலில் சின்வார் பெயரையும் சேர்த்து தெரிவித்தார்.

    முகமது சின்வார், யாஹ்யா சின்வாரின் சகோதரர் ஆவார். யாஹ்யா சின்வார், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர். இவர் கடந்த ஆண்டு இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சில வாரங்களாக நடந்து வரும் கொலைகள் மற்றும் பசி பட்டினி எனது பார்வையை மாற்றியுள்ளன.
    • பொறுப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட அரசாங்கக் கொள்கையின் விளைவாகும். ஆம், இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்கிறது.

    காசா பகுதியில் இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்து வருவதாக முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் குற்றம்சாட்டியுள்ளார்.

    இஸ்ரேல் செய்தித்தாளான ஹாரெட்ஸில் அவர் எஹுட் ஓல்மெர்ட் ஒரு கட்டுரையில், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசாங்கத்தை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    அந்த கட்டுரையில் எஹுட் ஓல்மெர்ட் கூறுவதாவது,

    "இஸ்ரேலுக்கு எதிராக சுமத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றக் குற்றச்சாட்டுகளை கடந்த ஒரு வருடமாக நான் பகிரங்கமாக மறுத்து வந்தேன். ஆனால் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் கொலைகள் மற்றும் பசி பட்டினி எனது பார்வையை மாற்றியுள்ளன.

    காசாவில் நாம் நடத்துவது ஒரு அழிவுகரமான போர். சாதாரண மக்கள் கண்மூடித்தனமாக, கட்டுப்பாடுகள் இல்லாமல், கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். இதற்கு ஒரு சில வீரர்களின் நடத்தை காரணமல்ல. இது வேண்டுமென்றே, தெரிந்தே, தீங்கிழைக்கும் நோக்கத்துடன், பொறுப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட அரசாங்கக் கொள்கையின் விளைவாகும். ஆம், இஸ்ரேல் போர்க்குற்றங்களைச் செய்கிறது.

    முதலாவது காசாவைப் பட்டினி போடுவது. கொள்கையின் ஒரு பகுதியாக, காசா மக்களுக்கு உணவு மற்றும் மருந்தை நாம் மறுக்கிறோம்.

    பொறுப்புக்கூறலைத் தவிர்ப்பதற்காக நேதன்யாகு பதில்களை மறைக்க முயற்சிக்கிறார். இருப்பினும், அவரது ஆதரவாளர்கள் சிலர் வெளிப்படையாக, பெருமையுடன் கூட, ஆம், நாங்கள் காசாவைப் பட்டினி போடுகிறோம் என்று கூறுகிறார்கள்.

    காசாவின் சுமார் 20 லட்சம் மக்களை முற்றிலுமாக அழிப்பதில் எந்த தார்மீக அல்லது இராணுவ நியாயமும் இல்லை" என்று ஓல்மெர்ட் அந்தக் கட்டுரையில் தெரிவித்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இஸ்ரேலுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை இங்கிலாந்து ரத்து செய்தது.
    • காசாவில் கடும் உணவு பஞ்சம் நிலவுகிறது.

    பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்த நிலையில் உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2-ம் கட்ட போர் நிறுத்த பேச்சின் போது, இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் தரப்பு மறுத்தது. இதனால் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் நட்பு நாடுகளில் இருந்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டு, நேதன்யாகுவின் திட்டத்திற்கும், காசாவுக்குள் கடந்த 11 வாரங்களாக உணவு மற்றும் உதவிப்பொருட்கள் செல்ல விடாமல் செய்ததற்கும் கடும் கண்டனம் தெரிவித்தன.

    மேலும், இஸ்ரேலுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக இங்கிலாந்து அறிவித்தது.

    இந்நிலையில், காசா மீதான தாக்குதலுக்கு எதிராக பிற நாடுகளில் இருந்து வரும் புற அழுத்தத்திற்கு தங்கள் நாடு ஒருபோதும் அடிபணியாது என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

    ×