என் மலர்

    ஜப்பான்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • இதில் ரோகன் போபண்ணா ஜோடி காலிறுதியில் வெற்றி பெற்றது.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஜப்பானின் டகேரு யுசுகே ஜோடி, அர்ஜெண்டினாவின் மேக்சிமோ கோன்சலஸ்-ஆண்ட்ரஸ் மால்டெனி ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய போபண்ணா ஜோடி 7-6 (7-5), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆளுநர் தேர்தலில் 2ஆம் பிடித்த நிலையில், மேல்சபை தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
    • தோல்வி விரக்தியில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு டக் டக்கென பதில் கொடுத்து வருகிறது. தகவல் பெறுவதற்காகவே ஏ.ஐ. பயன்படுத்தி வந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த கட்சி ஏ.ஐ.-யை கட்சித் தலைவராக்க முடிவு செய்துள்ளது.

    தேர்தலில் தோல்வியடைந்ததால், விரக்தியடைந்து அந்த கட்சியின் நிறுவனர் உடனடியாக வெளியேறிவிட்டார். இதனால் புதிய தலைவர் நியமிக்கப்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், செயற்கை தொழில்நுட்பத்தை (AI) கட்சியின் தலைவராக நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது.

    The Path to Rebirth என் கட்சி கடந்த ஜனவரியில் ஷிஞ்ஜி இஷிமாரு என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு சிறு நகரின் முன்னாள் மேயர் ஆவார். அந்தக் கட்சி ஒருங்கிணைந்த கொள்கை தளத்தில் செயல்படுவதில்லை. மாறாக அதன் உறுப்பினர்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைத் தொடர அனுமதிக்கிறது.

    2024 டோக்கியோ ஆளுநர் தேர்தலில், வலுவான ஆன்லைன் பிரசாரத்தின் மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்தபோது, இஷிமாரு ஆரம்பத்தில் தேசிய கவனத்தை ஈர்த்தார். இருப்பினும், இந்த ஆண்டு மேல்சபை தேர்தலில் அவரின் கட்சி எந்த இடத்தையும் பிடிக்காத நிலையில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து வெளியேறினார்.

    எப்படி செயல்படுத்தப்படும் என்பது உட்பட செயற்கை நுண்ணறிவு பற்றிய விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உறுப்பினர்களின் அரசியல் நடவடிக்கைகளை AI கட்டுப்படுத்தாது. கட்சியின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் என அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • இன்றைய போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.

    டோக்கியோ:

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் பங்கேற்றுள்ளனர்.

    இதில் இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று நடந்தது. இதில் ஏ பிரிவில் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

    பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.

    84.50 மீட்டர் தொலைவை கடந்து ஈட்டியை வீசினால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில், அவர் தனது முதல் வாய்ப்பில் 84.85 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார்.

    இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனம் உடைந்த சடோமி, கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் விடுப்பில் சென்றார்.
    • நீண்ட காலம் கோமா நிலையில் இருந்த அவர், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தளமாக கொண்டு செயல்படும் டி.யுபி என்ற அழகு சாதன பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சடோமி (வயது 25) என்ற இளம் பெண், கடந்த 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார்.

    முன் அனுமதி இன்றி வாடிக்கையாளரை அவர் சந்தித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவரை, நிறுவனத்தின் தலைவர் மிட்சுரு சகாய் விசாரணைக்கு அழைத்தார். அப்போது அவரை 'நாய்' என்ற பொருளில் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த சடோமி, கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் விடுப்பில் சென்றார். அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் தற்கொலைக்கு முயன்றார். அவருடைய பெற்றோர் சடோமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர், சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றார். நீண்ட காலம் கோமா நிலையில் இருந்த அவர், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார்.

    இது தொடர்பாக அவருடைய பெற்றோர், தங்கள் மகளின் இந்த நிலைக்கு காரணம் அவர் வேலை பார்த்த நிறுவனமும், அதன் தலைவர் மிட்சுரு சகாயும்தான் என்று கூறியிருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்து வந்த டோக்கியோ மாவட்ட கோர்ட்டு, இந்த விவகாரத்தில் சடோமியின் குடும்பத்துக்கு ஜப்பான் நாட்டு பணமான 150 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.90 கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அழகு சாதன உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. மேலும் அதன் தலைவரான மிட்சுரு சகாய், தனது பணியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இதையடுத்து அவருக்கான இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் மிட்சுரு சகாயும் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் சடோமியின் குடும்பத்தினரிடம் அந்த நிறுவனம் மன்னிப்பும் கோரியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜப்பானில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
    • இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 52,310 பேர் 100 வயதை தாண்டி உள்ளனர்.

    டோக்கியோ:

    உலகிலேயே வயதானவர்கள் அதிகம் வசிக்கும் நாடு ஜப்பான். அங்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு முதியோர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    1963-ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு தொடங்கியது. அப்போது 100 வயதானவர்களின் எண்ணிக்கை 153 ஆக இருந்தது. அதன்படி, இந்த ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் 100 வயதானவர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சமாக அதிகரித்துள்ளது. அவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

    இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 52,310 பேர் 100 வயதை தாண்டி உள்ளனர். அவர்களுக்கு பிரதமர் கையால் வாழ்த்து மடல், பரிசுத்தொகை மற்றும் வெள்ளிக்கோப்பை ஆகியவை முதியோர் தினமான நாளை வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி டகாமரோ புகோகா கூறுகையில், உலகின் மற்ற பகுதிகளில் சாப்பிடும் உணவுகளில் உப்பு மற்றும் சர்க்கரை அதிகளவில் கலந்துள்ளது. இதற்கு மாற்றாக மீன், காய்கறி போன்ற ஆரோக்கியமான உணவுகளை ஜப்பானிய மக்கள் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். நடைபயிற்சியும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால்தான் மற்ற நாடுகளை விட ஜப்பானிய முதியவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுகின்றனர் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தலை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷிகேரு இஷிபா விலகினார் .
    • புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா பதவியில் இருந்து விலகியுள்ளார். ஜப்பான் நாட்டின் பிரதமராக இருப்பவர் ஷிகெரு இஷிபா. இவர் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பதவி வகிக்கிறார்.

    கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வி அடைந்தது. ஆளும் கட்சியான இது பெரும்பாண்மையை இழந்தது.

    இதனால், நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி தோல்விக்கு ஜப்பான் நாட்டுப் பிரதமர் இஷிபா பொறுப்பேற்க நிர்வாகிகள் வற்புறுத்தியுள்ளனர்.

    கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தலை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷிகேரு இஷிபா விலகினார். அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
    • இந்தியா-ஜப்பான் ஒருங்கிணைந்து ஆய்வை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ஜப்பான் நாட்டுக்கு சென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

    அப்போது இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 6 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பானில் உள்ள நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

    அதோடு இந்தியா விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக உருவாக இருப்பதால் தொழில் அதிபர்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து இந்தியா- ஜப்பான் இடையே தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, போக்குவரத்து, பாதுகாப்பு துறை உள்பட பல்வேறு துறைகளில் 13 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் ஜப்பானுக்கு பயிற்சி பெற அனுப்பப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    விண்வெளி ஆய்வில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்படுவதற்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதன்படி நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான்-5 திட்டத்தில் இந்தியாவும் ஜப்பானும் ஒருங்கிணைந்து செயல்பட முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

    இந்த விண்வெளி திட்டம் மூலம் நிலவில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை இந்தியா-ஜப்பான் ஒருங்கிணைந்து ஆய்வை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். நேற்று இரவு ஜப்பான் அரசு சார்பில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது.

    இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடி ஜப்பான் நாட்டில் 2-வது நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முதலில் ஜப்பான் நாட்டின் 16 மாகாண கவர்னர்களை டோக்கியோவில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

    அப்போது அவர்களிடம் பிரதமர் மோடி இந்தியாவின் மேம்பாட்டுக்கு ஒருங்கி ணைந்து செயல்பட ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து இன்று காலை பிரதமர் மோடி டோக்கியோவில் இருந்து சென்டாய் நகருக்கு புல்லட் ரெயிலில் பயணம் மேற்கொண்டார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

    சென்டாய் நகரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கு உலக புகழ் பெற்ற புல்லட் ரெயில் தொழிற்சாலை மற்றும் பயிற்சி மையம் அமைந்து உள்ளது. அந்த பயிற்சி மையத்தில் புல்லட் ரெயில் இயக்குவதற்கான பயிற்சியை இந்தியர்கள் பெற்று வருகிறார்கள். அவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

    அதன் பிறகு மற்ெறாரு தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார். பின்னர் பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா மதிய உணவு விருந்து அளித்தார். அத்துடன் பிரதமர் மோடியின் 2 நாள் ஜப்பான் சுற்றுப்பயணம் நிறைவு பெற்றது.

    இதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் மற்றும் அதிகாரிகளிடம் விடை பெற்ற பிரதமர் மோடி இன்று பிற்பகல் டோக்கியோவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டு சென்றார். சீனாவில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்து ழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) உச்சிமாநாடு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி அந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளாா்.

    2018-ம் ஆண்டுக்குப் பிறகு, பிரதமா் மோடி சீனாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளுக் கிடையே, சீன அதிபா் ஜி ஜின்பிங் உள்பட பல உறுப்பு நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி இருதரப்பு சந்திப்புகளை மேற்கொள்வார் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

    சீனாவில் ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அது போல சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து இந்தியாவுடனான பல்வேறு ஒத்துழைப்பு விஷயங்கள் விசயமாக பேச உள்ளார்.

    பிரதமர் மோடி சீனா பிரதமரை 2 தடவை சந்தித்து பேசுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவைக் குறி வைத்து வரி விதித்துள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரி வித்த சீனா, இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. எல்லை விவகாரத்திலும் இந்தியாவுடன் இணக்கமான பேச்சு நடத்தி வருகிறது. இந்த நிலையில் இரு நாட்டுத் தலைவர்கள் இடையிலான சந்திப்பு மிகுந்த முக்கியத்து வம் பெற்றுள்ளது.

    ரஷியா, இந்தியா, ஈரான், சீனா, பாகிஸ்தான், கஜகஸ் தான், கிர்கிஸ்தான், தஜி கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்க ளாக உள்ளன. சுழற்சி முறையில் இந்த ஆண்டு அமைப்பின் தலைவராக சீனா உள்ளது.

    அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு நடவடிக்கைக ளால் பல நாடுகளில் பதற் றம் நிலவுகிறது. இது தவிர உக்ரைன்-ரஷியா போர், காசாவில் இஸ்ரேல் நடத்தும் போர் ஆகியவையும் தொடர்ந்து தீவிரமாகி வருகின்றன.

    இந்த சூழ்நிலையில் முக்கிய நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு சர்வதேச அளவில் அமெ ரிக்கா உள்பட பல நாடு களால் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் நிகழ்வாக உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜப்பானின் தொழில் மேம்பாடுகளை உலகம் முழுக்க கொண்டு செல்லும் சக்தியாக இந்தியா திகழ்கிறது.
    • இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் எப்போதும் முக்கிய பங்கு தாரராக திகழ்ந்து வருகிறது.

    டோக்கியோ:

    இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே 15-வது உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜப்பானில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    இன்று அதிகாலை அவரது விமானம் டோக்கியோ சென்று அடைந்தது. விமான நிலையத்தில் ஜப்பான் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் இந்தியவாழ் ஜப்பான் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    டோக்கியோ விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. அதை கண்டுகளித்த பிறகு பிரதமர் மோடி தனது 2 நாள் ஜப்பான் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    டோக்கியோவில் வந்து இறங்கினேன். இந்தியாவும், ஜப்பானும் தங்களது உறவுகளை வலுப்படுத்தி வரும் நிலையில் இந்தப் பயணத்தின்போது பிரதமர் இஷிபா மற்றும் பிற தலைவர்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நான் எதிர் நோக்குகிறேன். மேலும் உறவை வலுப்படுத்தவும் இந்த பயணம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

    இவ்வாறு அதில் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

    விமான நிலைய வரவேற்புக்கு பிறகு பிரதமர் மோடி இந்திய ஜப்பான் தொழில் அதிபர்கள் பங்கேற்ற இந்தியா-ஜப்பான் கூட்டு பொருளாதார மன்ற கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இன்று இந்தியா அரசி லில் நிலைத்த தன்மையுடன் உள்ளது. பொருளாதாரத்தில் நிலையான தன்மையுடன் உள்ளது. கொள்கைகளில் வெளிப்படை தன்மை உருவாக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்ல உலகளவில் பொருளாதாரத்தில் மிகமிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்கிறது.

    மிக விரைவில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறப் போகிறது. ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையான இளைஞர்களும் இணைந்து பணியாற்றும்போது இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும்.

    ஜப்பானின் தொழில் மேம்பாடுகளை உலகம் முழுக்க கொண்டு செல்லும் சக்தியாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவும், ஜப்பானும் ஒருங்கிணைந்து எதிர்காலத்தில் நிலையான, வளர்ந்த, செல்வசெழிப்பு மிக்க ஆசிய நூற்றாண்டை வடிவமைக்கும்.

    இந்தியாவும், ஜப்பானும் வெற்றிகரமாக ரோபாடிக்ஸ், செமி கண்டக்டர்ஸ், கப்பல் கட்டுதல் மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதன் மூலம் உலகம் முழுவதும் குறிப்பாக ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய வளர்ச்சிக்கு இந்தியாவும், ஜப்பானும் முக்கிய பங்காற்ற முடியும்.

    இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் எப்போதும் முக்கிய பங்கு தாரராக திகழ்ந்து வருகிறது. மெட்ரோ ரெயிலில் இருந்து ஸ்டார்ட் அப் தொழில் வரை ஜப்பானின் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்து இருக்கின்றன. தொடர்ந்து இந்தியாவில் தொழில் முதலீடு செய்ய வருமாறு நான் அழைக்கிறேன்.

    இந்தியாவில் தயார் செய்து உலகம் முழுக்க கொண்டு செல்ல உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியாவின் பொருளாதாரம் அதற்கு ஏற்ப நிலையானதாக இருப்பதை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இந்தியாவில் நீங்கள் செய்யும் தொழில் முதலீடு சாதாரணமாக வளர்ச்சி அடைவது இல்லை. அந்த முதலீடு பல மடங்காக வளர்ச்சி அடையும் ஆற்றல் கொண்டது. எனவே அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    அது மட்டுமல்ல உலகம் முழுக்க உள்ள பொருளாதார நட்பு நாடுகளில் இந்தியாவுக்கு தோழமை கொடுக்கும் முதல் நாடாக ஜப்பான் விளங்குகிறது. விண்வெளி ஆய்வு மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த துறைகளில் தனியார் துறை ஊக்குவிக்கப்படுகிறது.

    இந்தியாவின் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை உலக நாடுகள் கண்காணிப்பதோடு மட்டுமின்றி நினைத்து பார்த்து எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்திக் கொண்டு இருக்கிறது.

    இந்தியாவில் இளைஞர்கள் சக்தி அதிகம் உள்ளனர். அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது உங்களது கடமையாகும். எனவே இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு மீண்டும் அழைக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவில் பொருளாதார மற்றும் அரசியல் சூழல் சீராக உள்ளது.
    • இந்தியாவில் ராணுவம், விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது.

    இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே 15-வது உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜப்பானில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். இன்று அதிகாலை அவரது விமானம் டோக்கியோ சென்று அடைந்தது. விமான நிலையத்தில் ஜப்பான் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் இந்தியவாழ் ஜப்பான் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    இந்நிலையில் டோக்கியோவில் நடைபெறும் இந்தியா - ஜப்பான் பொருளாதார மன்றக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * இந்தியாவில் பொருளாதார மற்றும் அரசியல் சூழல் சீராக உள்ளது.

    * உலகில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாற உள்ளது.

    * இந்தியாவின் பொருளாதார நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது.

    * இந்தியாவில் ராணுவம், விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது.

    * இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது.

    * மெட்ரோ ரெயில் உற்பத்தி, ஸ்டார்ட்அப் என ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • அரசு அறிவிப்பின்படி பொதுமக்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தலாம்.

    டோக்கியோ:

    தற்போதைய இயந்திரமயமான வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு இல்லாமல் யாரும் இருக்க முடியாது. ஆனால் அவற்ரை அதிக அளவு பயன்படுத்துவதால் உடல்நலக் குறைபாடுகள் மட்டுமின்றி தேவையற்ற சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜப்பானில் இயற்கை எழில் கொஞ்சும் பாரம்பரிய நகரான டோயோக்கேவில் உள்ள பொதுமக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த அந்த நகரின் மேயரால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

    ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக பாலியல் சம்பவங்கள் மற்றும் கடத்தல் வழக்குகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் குற்றச் சம்பவங்கள் கூடுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு அறிவிப்பின்படி நகர பொதுமக்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    தேவைப்பட்டால் தொலைபேசி மற்றும் மற்ற பிற தொலை தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜப்பான் 550 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய சம்மதம் தெரிவித்தது.
    • கிடைக்கும் வருவாயை பிரித்துக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு.

    இந்திய பிரதமர் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான் மற்றும் சீனா செல்கிறார். ஜப்பானில் நடைபெறும் இந்தியா-ஜப்பான் இருநாட்டின் 15ஆவது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது ஜப்பான் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இந்த நிலையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானின் வர்த்தக பேச்சுவார்த்தையாளர் ரியோசெய் அகாசவா, இன்று அமெரிக்கா செல்ல இருந்த நிலையில் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

    அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க, ஜப்பான் 550 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய சம்மதம் தெரிவித்தது. அதன்மூலம் கிடைக்கும் வருவாயை பிரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த செல்ல இருந்தார்.

    பேச்சுவார்த்தை முடிவில் 550 பில்லியன் டாலர் முதலீடு திட்டத்தை முறையாக உறுதிப்படுத்த இருந்தது.

    அமெரிக்க தரப்புடன் ஒருங்கிணைப்பின் போது நிர்வாக மட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என ஜப்பான் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரண்டாம் உலகப் போருக்கு முன்பு மருத்துவப் பட்டம் பெற்றார்.
    • ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய உலகின் மிக வயதான நபர் ஆனார்.

    ஜப்பானின் மிக வயதான பெண்மணியான மியோகோ ஹிரோயாசு 114 வயதில் இறந்த நிலையில் ஓய்வுபெற்ற மருத்துவருமான ஷிகேகோ ககாவா மிக வயதான பெண்மணியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 114.

    1911 இல் டோக்கியோவில் பிறந்த அவருக்கு மூன்று குழந்தைகள். இரண்டாம் உலகப் போருக்கு முன்பு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், போரின் போது ஒசாகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக தனது பணியை தொடங்கினார்.

    பின்னர் அவர் சொந்த மருத்துவமனையைத் திறந்தார். அங்கு மகப்பேறு, மகளிர் மருத்துவ நிபுணராகப் பணியாற்றினார். அவர் 86 வயதில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    டோக்கியோவில் நடைபெற்ற 2021 ஒலிம்பிக்கிற்கான ஜோதியை ஏந்திச் சென்ற ஷிகேகோ ககாவா, ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய உலகின் மிக வயதான நபர் ஆனார்.

    நீண்ட காலம் வாழ அவர்களுக்கு எந்த சிறப்பு வழக்கமோ அல்லது உணவு முறையோ இல்லை என்று அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தனர்.

    தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுத்துகொள்வதாகவும் வேளை உணவருத்துவதாகவும் தெரிவித்தனர்.

    ஷிகேகோ தனது இறுதி காலத்தை செய்தித்தாள்கள் படிப்பதிலும், சீட்டாட்டம் விளையாடுவதிலும், வரைவதிலும் கழிக்கிறார். 

    ×