என் மலர்

    உலகம்

    48 அணுகுண்டுகள் தயாரிக்க தேவையான யுரேனியத்தை வைத்திருக்கும் வட கொரியா - திகிலில் தென் கொரியா!
    X

    48 அணுகுண்டுகள் தயாரிக்க தேவையான யுரேனியத்தை வைத்திருக்கும் வட கொரியா - திகிலில் தென் கொரியா!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு அணு ஆயுதத்தை தயாரிக்க 42 கிலோகிராம் யுரேனியம் தேவைப்படும்.
    • தற்போதுகூட வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் ஆலைகள் நான்கு இடங்களில் இயங்கி வருகின்றன.

    47 அணு குண்டுகளை தயாரிக்க தேவையான, 2 டன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வடகொரியா வைத்துள்ளதாக தென்கொரியா எச்சரித்துள்ளது.

    வட கொரியாவிடம் 47 அணு குண்டுகளை தயாரிக்க தேவையான, 2 டன் (2,000 கிலோகிராம்) அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருக்கலாம் என தென் கொரியா எச்சரித்துள்ளது.

    விஞ்ஞானிகள் கூட்டமைப்பு (FAS) உள்ளிட்ட நிபுணர்களின் மதிப்பீடுகளின்படி, வட கொரியா 90% அல்லது அதற்கு மேற்பட்ட சுத்தமான 2,000 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதாகக் தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு விவகார (unification) அமைச்சர் சுங் டோங்-யோங் தெரிவித்தார்.

    அணுசக்தி சர்வதேச முகமையின் (IAEA) கூற்றுப்படி, ஒரு அணு ஆயுதத்தை தயாரிக்க 42 கிலோகிராம் யுரேனியம் தேவைப்படும். அந்த வகையில், வட கொரியாவிடம் உள்ள 2,000 கிலோகிராம் யுரேனியம் மூலம் சுமார் 47 அணு குண்டுகளைத் தயாரிக்க முடியும்.

    தற்போதுகூட வட கொரியாவின் யுரேனியம் செறிவூட்டும் ஆலைகள் நான்கு இடங்களில் இயங்கி வருகின்றன. ஏற்கனவே 50 அணு குண்டுகளை வடகொரியா வைத்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

    வட கொரியாவை தடுத்து நிறுத்த பொருளாதாரத் தடைகள் பயனுள்ளதாக இருக்காது என்றும், கொரியா அமெரிக்கா இடையேயான உச்சிமாநாடு மட்டுமே ஒரே தீர்வு என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

    அமெரிக்காவின் மிரட்டலுக்காக அணு ஆயுதத்தை கைவிட முடியாது என்றும் தங்கள் இருப்பை நிலைநாட்ட அது மிகவும் முக்கியம் என்றும் வட கொரியா அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×