உலகம்

உக்ரைனுடன் தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் - புதின் அறிவிப்பு
- உக்ரைன்- ரஷியா அதிகாரிகள் இடையே துருக்கியில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் மிகப்பெரிய அளவில் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.
உக்ரைன்- ரஷியா இடையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட நேரடி அமைதி பேச்சுவார்த்தை துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இதில் இருநாட்டு அதிகாரிகளும் நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் குறைவாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இருநாடுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை பரிமாற்றிக்கொள்ள ஏற்றுக்கொண்டன. இதனைத் தொடர்ந்து கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு இடையிலும் உக்ரைன் - ரஷியா மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 3 ஆண்டுகளை கடந்து போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைனுடன் தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
போரில் கொல்லப்பட்ட மூவாயிரத்திற்கும் அதிகமான உக்ரைன் ராணுவ வீரர்களின் உடல்களை ஒப்படைக்கவும் தயார் என்று புதின் தெரிவித்துள்ளார்.