உலகம்

முதல் மனைவி வேலை செய்யும் மருத்துவமனையில் 2-வது மனைவிக்கு பிரசவம் - தொக்காக சிக்கிய கணவர்!
- சல்மா அப்துல் ரசாக் என்ற மற்றொரு சிங்கப்பூர் பெண்ணை சந்தித்தார்.
- நாகூரில் முஸ்லிம் வழக்கங்களின்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
வைத்தியலிங்கம் முத்துக்குமார் (49) என்பவர் 2007 ஆம் ஆண்டு இந்தியாவில் தனது முதல் மனைவியை மணந்தார். 2011 முதல் சிங்கப்பூரில் வேலை செய்து வரும் வைத்திலிங்கம் மனைவியுடன் அங்கு வசித்து வருகிறார்.
அப்போது சல்மா அப்துல் ரசாக் என்ற மற்றொரு சிங்கப்பூர் பெண்ணை சந்தித்தார். அந்த அறிமுகம் திருமணத்திற்கு புறம்பான உறவில் முடிந்தது.
தனக்கு குழந்தைகள் வேண்டும் என்றும், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யப் போவதாகவும் சல்மாவை நம்ப வைத்தார். முத்துக்குமார் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிந்திருந்தும் அவரை திருமணம் செய்து கொள்ள சல்மா ஒப்புக்கொண்டார்.
ஆகஸ்ட் 2022 இல், நாகூரில் முஸ்லிம் வழக்கங்களின்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் சிங்கப்பூருக்குத் திரும்பிய முத்துக்குமார், தனது முதல் மனைவியுடன் வசித்து ரகசியமாக சல்மாவை சந்தித்து வந்தார். இந்த சமயத்தில் சல்மா கர்ப்பமானார்.
அவர் கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். முத்துக்குமாரின் முதல் மனைவி அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
இரண்டாவது மனைவி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, மருத்துவமனையின் பிரசவ அறையிலிருந்து முத்துக்குமார் வெளியே வருவதை முதல் மனைவி பார்த்தார்.
இதன் மூலம் இரண்டாவது திருமண விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
வைத்தியலிங்கம் சிங்கப்பூரில் நிரந்தரவாசத் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோது தன் முதல் மனைவியை ஆதரவாளராக நியமித்தார். மேலும் அவர் வேறு யாரையும் மணக்கவில்லை என்று பொய்த் தகவலை வழங்கினார்.
முதல் மனைவியைவிட்டுப் பிரிந்து வராததால் சால்மா வைத்தியலிங்கத்துக்கு எதிராக அண்மையில் மனிதவள அமைச்சகத்திடம் புகாரளித்தார். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.