வழிபாடு

மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம்
- ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
- வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
விஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் தான் கிருஷ்ண அவதாரம். அவரது 10 அவதாரங்களைப் பின்பற்றி மனிதன் உணர வேண்டிய உலக உண்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.
1. மச்ச அவதாரம் :
தாயின் வயிற்றில் இருந்து ரத்தத்தோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். அதாவது மனிதர்களின் பிறப்பு நிகழும் முறை.
2. கூர்ம அவதாரம்:
மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.
3. வராக அவதாரம்: ஆறாம் மாதம் குழந்தையாக தவழ்ந்து, முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.
4. நரசிம்ம அவதாரம்: எட்டாம் மாதம் எழுந்து உட்கார்ந்து, கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மர்.
5. வாமன அவதாரம்: ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
6. பரசுராம அவதாரம்: வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
7. ராம அவதாரம்: திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் இருந்து குடும்பக் கடமைகளை ஆற்றினார்.
8. பலராம அவதாரம்: இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.
9. கிருஷ்ண அவதாரம்: முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.
10. கல்கி அவதாரம்: இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.