என் மலர்

    நீங்கள் தேடியது "வரலட்சுமி சரத்குமார்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
    • இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர்.

    நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.

    தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். இவர் தற்போது விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார்.

    இதனிடையே, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதன்பின் சினிமாவில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில், நடிகை வரலட்சுமி, தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார்.

    இந்நிறுவனத்தின் முதற்படமான 'சரஸ்வதி' மூலம் இயக்குநராகவும் வரலட்சுமி அறிமுகமாகிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படம் குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக பணியாற்ற வரலட்சுமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகை வரட்சுமி தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • இவர்களது திருமணம் கடந்த ஆண்டு கோலாகலமாக தாய்லாந்தில் நடைபெற்றது.

    நடிகை வரட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு கோலாகலமாக தாய்லாந்தில் நடைபெற்றது.

    இந்நிலையில், நடிகை வரலட்சுமிக்கு பிங்க் நிறத்திலான Porsche ரக காரை அவர் கணவர் நிக்கோலாய் சச்தேவ் பரிசளித்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோவை வரலட்சுமி வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த காருக்கு பார்பின்னு பெயர் வைக்கப்போறேன்' என்று மகிழ்ச்சியுடன் அவர் கூறுகிறார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார்.
    • "ரிஜானா- ஏ கேஜ்ட் பேர்ட்" எனும் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

    நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

    'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.

    தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். இவர் தற்போது விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார்.

    இதனிடையே, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில், நடிகை வரலட்சு சரத்குமார் "ரிஜானா- ஏ கேஜ்ட் பேர்ட்" எனும் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

    சந்திரன் ருத்னம் என்பவர் இயக்கிய "ரிஜானா- ஏ கேஜ்ட் பேர்ட்" படத்தில் வரலட்சுமி நடிக்கிறார்.

    இந்த படம் இலங்கையில் படமாக்கப்பட்டுள்ளது, 2005ல் சவுதி அரேபியாவில் குழந்தையைக் கொன்றதற்காக தலை வெட்டப்பட்ட ரிஜானா நபீக் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து நடிகை வரலட்சுமி கூறுகையில்," தி லயன் கிங்க படத்தில் குரல் கொடுத்திருக்கும் அகாடமி விருது வென்ற நடிகர் ஜெரோமி ஐரோன்ஸ் உடன் நடித்தது நம்பமுடியாத உணர்வாக இருக்கிறது.

    அவருடன் நடித்ததன் மூலம் எனது கனவு நனவாகி இருக்கிறது. ஜெரோமி ஐரோன்ஸ் ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலக சினிமாவிலும் மதிக்கக்கூடிய நபர்" என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகை வரலட்சுமியை கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
    • நான் திருப்பதிக்கு பலமுறை வந்துள்ளேன்.

    நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.

    தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். இவர் தற்போது விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார்.

    இதனிடையே, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்த நிலையில், தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை வரலட்சுமி சாமி தரிசனம் செய்துள்ளார். இன்று அதிகாலை நடைபெற்ற சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தனர். கணவருடன் வந்த நடிகை வரலட்சுமியை கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.



    இதையடுத்து பேசிய நடிகை வரலட்சுமி, ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. நான் திருப்பதிக்கு பலமுறை வந்துள்ளேன். என் கணவருக்கு இதுதான் முதல்முறை. எங்களுடைய முதல் வருட திருமண நாள் வரப்போகிறது. அதற்காக வந்தோம். சாமி தரிசனம் செய்தது ரொம்ப நிம்மதியா, மன அமைதியா இருந்தது என்றார்.

    முன்னதாக, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடிகை வரலட்சுமி தனது கணவருடன் ராகு-கேது பூஜை செய்து வழிபாடு செய்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண் போட்டியாளர் சிறிய வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து வேதனைகளை பகிர்ந்துகொண்டார்.
    • உங்கள் பிள்ளைகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' பற்றி கண்டிப்பாக சொல்லிக்கொடுங்கள்.

    முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். கடந்த ஆண்டு தொழில் அதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    வரலட்சுமி, தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நடன நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்று இருக்கிறார். நடனம் ஆடுவதில் வல்லவரான வரலட்சுமி, போட்டியாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

    இதற்கிடையில் பெண் போட்டியாளர் சிறிய வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து வேதனைகளை பகிர்ந்துகொண்டார். அப்போது அந்த சம்பவத்தை கேட்டு வரலட்சுமியும் கண்கலங்கி போனார்.

    அவர் பேசும்போது, ''நானும் இந்த கொடுமைகளை அனுபவித்துள்ளேன். என் அப்பா, அம்மா இருவருமே தொழிலில் பிசியாக இருந்தார்கள். இதனால் அக்கம் பக்கத்து வீடுகளில் என்னை பார்த்துக்கொள்ளுமாறு கூறி அங்கே என்னை விட்டு சென்றுவிடுவார்கள்.

    6 பேர் வரை என்னை சிறுவயதில் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். எனவே அந்த பாதிப்பின் தன்மையை என்னால் உணரமுடியும். எனக்கு குழந்தைகள் இல்லை. ஆனாலும் எல்லா பெற்றோருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் பிள்ளைகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' பற்றி கண்டிப்பாக சொல்லிக்கொடுங்கள்'', என்று குறிப்பிட்டார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'கொன்றால் பாவம்'. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆரவ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படத்தை தயாள் பத்மநாபன் இயக்கி தயாரித்துள்ளார்.

    இதில் சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

     

    மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

    மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்


    இது குறித்து இப்படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான தயாள் பத்மநாபன் கூறியதாவது, "அடிப்படையில், நான் ஹனுமானின் தீவிரமான பக்தர் மற்றும் அவரது இருப்பை உள்ளடக்கிய சில தலைப்புகளை என்னுடைய படங்களுக்கு வைக்க விரும்பினேன். இந்தப்படம் பல சாதக பாதகங்களைக் கொண்ட காவல் நிலையத்தின் பின்னணியில் நடக்கும் சம்பவங்களைக் கதையாகக் கொண்டது.


    மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

    மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

    உண்மையான ஸ்டேஷன் பெயர்கள் மற்றும் பகுதிகளை நாங்கள் இதில் படமாக்க விரும்பவில்லை. அதனால், 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' என்று கற்பனையான பெயரைக் கொண்டு வர முடிவு செய்தோம். தற்போது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது". இவ்வாறு அவர் கூறினார்.


    மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

    மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

    வரலக்ஷ்மி சரத்குமார் & ஆரவ் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நான்-லீனியர் பாணியில் புதிய பரிமாணத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, சுப்ரமணியம் சிவா மற்றும் பல முக்கிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
    • இந்த போட்டியை திரைப்பிரலங்கள் பலரும் நேரில் கண்டுகளித்தனர்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 140 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த போட்டியை திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் நேரில் கண்டுகளித்தனர். அதன்படி நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் தனுஷ், நடிகைகள் நயன்தாரா, வரலட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார்.
    • இவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

    'போடா போடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் இவரின் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான 'தாரைதப்பட்டை' படம் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல அடையாளத்தை தந்தது. அதன்பின் வரலட்சுமி சரத்குமார், 'விக்ரம் வேதா', 'மாரி-2', 'கன்னிராசி', 'பாம்பன்', ' நீயா-2', 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்', 'மிஸ்டர் சந்திரமௌலி', ' சண்டக்கோழி-2', 'சர்க்கார்' உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார்.


    இந்நிலையில், நடிகை வரலட்சுமி தனது பயத்தை முறியத்து பைக் ஓட்டி கற்றுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாம் குழந்தையாக மற்றும் பதின் வயதில் இருக்கும் போது பைக் ஓட்ட அனுமதிக்கப்படவில்லை. சில காரணங்களால் பைக் ஓட்டுவதில் எனக்கு மனதளவில் தடை ஏற்பட்டது. ஆனால், தற்போது அந்த பயத்தைப் போக்க இது நேரம் என்று முடிவு செய்துவிட்டேன்.


    அதனால், கடந்த வாரம் பைக் ஓட்டுவதன் முதல் படிநிலையான சைக்கிள், ஸ்கூட்டி, புல்லட் போன்ற வாகனங்களில் இருந்து தொடங்கினேன். கொஞ்சம் வருத்தப்பட்டேன் ஆனால், இது அனைத்தும் உங்கள் பயத்தை போக்குவதற்காக செய்வது. நாம் விழுந்தோம் என்பது முக்கியமல்ல எப்படி எழுந்தோம் என்பதே முக்கியம் " என்று பதிவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரலட்சுமியின் தந்தை சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார்.
    • நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பியதாக சில செய்திகள் தீயாக பரவின.

    சமீபத்தில் நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இதனையடுத்து அவரது நிச்சயதார்த்தம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அச்சமயத்தில் தன்னைப் பற்றி வரும் அவதூறு கருத்துக்களுக்கு வரலட்சுமி சரத்குமார் தக்க பதிலடி கொடுத்துக் கொண்டே வந்தார்.

    இந்நிலையில் வரலட்சுமியின் தந்தை சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார். இதனையடுத்து, நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பியதாக சில செய்திகள் தீயாக பரவின. அதன் காரணமாகதான் சரத்குமார் பாஜகவில் இணைந்தார் என்றும் வதந்திகள் கிளம்பியது.

    இது தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில்,

    நமது ஊடகங்களில் பழைய போலிச்செய்திகளை பரப்புவதை விட வேறு எந்த செய்தியும் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பிரபலங்களிடம் குறைகளை கண்டறிவதை நிறுத்துங்கள். நாங்கள் நடிக்கவும், மக்களை மகிழ்விக்கவும், எங்கள் வேலையைச் செய்யவும் முயற்சிக்கிறோம். அதே போல் உங்கள் வேலையை நீங்கள் ஏன் செய்யக்கூடாது.

    உண்மையிலேயே நீங்கள் கவனிப்பதற்கு ஆயிரம் பிரச்சினைகள் இங்கு இருக்கிறது. எங்களது மௌனத்தை பலவீனத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என்னை பற்றிய அவதூறுகள்தான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளன. பொய்யான ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்" என பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'சபரி' திரைப்படம்
    • மே 3, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.

    இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'சபரி' திரைப்படம் மே 3, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.

    இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

     

    படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி நிவேக்ஷா, பேபி கிருத்திகா மற்றும் பலரும் உள்ளனர்.

    எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார்.
    • தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார். தற்போது இவர் குணசத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்திருந்த வரலட்சுமி.

    அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே சமயம் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    விரைவில் இவர்களின் திருமணமும் நடைபெற இருக்கிறது. இதற்காக நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் திரை பிரபலங்கள் பலருக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினர். அதைத்தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
    • திருமணத்திற்கு பின்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் போடா போடி, சர்கார், சண்டக்கோழி 2, தாரை தப்பட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து அவரது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்கள் கவனத்தை பெற்றார். தற்போது இவர் குணசத்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

    அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே சமயம் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இந்நிலையில், இன்று நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×