சினிமா செய்திகள்

தேசிய விருது பெற்ற ஷாருக் கான்: மனைவி சொன்னது என்ன?
- டெல்லியில் திரைப்பட தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
- விருதுகள் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதளித்து கவுரவித்தார்.
மும்பை:
தலைநகர் டெல்லியில் திரைப்பட தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விருதுகள் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதளித்து கவுரவித்தார்.
சிறந்த நடிகர் விருதை பாலிவுட் நடிகர் ஷாருக் கான் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், தேசிய விருது பெற்றுக் கொண்டா ஷாருக் கானுக்கு அவரது மனைவி கவுரி கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கவுரி கான் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், என்ன ஒரு பயணம். தேசிய விருதை வென்றதற்கு வாழ்த்துக்கள். மிகவும் தகுதியானது.
இது உங்கள் பல வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாகும்.
இந்த விருதை வைப்பதற்காக நான் ஒரு சிறப்பான இடத்தை வடிவமைத்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Next Story