என் மலர்

    வழிபாடு

    18 ஆண்டுகளுக்கு பிறகு நாளை தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    18 ஆண்டுகளுக்கு பிறகு நாளை தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
    • அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது.

    தென்காசி:

    தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலும் ஒன்றாகும்.

    இக்கோவில் மகா கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பின்பு நாளை (திங்கட்கிழமை) காலை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடந்த 3-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது.

    கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பதையொட்டி தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற யாகசாலை சிறப்பு பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி மற்றும் தருமை ஆதீனம் மற்றும் சிவனடியார்கள், பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவை யொட்டி கோவில் முழு வதும் இரவில் ஒளிரும் வகையில் வண்ண விளக்கு கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மங்கள இசையுடன் யாகங்கள் நடைபெற்று வருவதால் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் தென்காசியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    நாளை அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், ஆறாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 5 மணிக்கு விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    7 மணிக்கு மகா பூர்ணாகுதி, திரவ்யாகுதி நடக்கிறது. 9 மணிக்கு மேல் உலகம்மாள் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர லேகசிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் என்ற கல்யாண சுந்தர சிவாச்சாரியார் நடத்துகிறார்.

    காசிவிஸ்வநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் உள்ளிட்டோர் பூஜைகள் செய்கின்றனர். இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறும் இடங்களான ராஜகோபுரம், சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி ஆகிய இடங்களில் உபயதாரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நின்று பார்வையிட ஏதுவாகவும், பாதுகாப்பு கருதியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கோவிலை சுற்றியுள்ள ரத வீதிகளிலும், கோவில் வளாகத்திற்குள்ளும் நின்று கும்பாபிஷேகத்தை காணும் பக்தர்களுக்கு டிரோன் மூலம் தீர்த்தம் தெளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் கண்டு களிக்க வசதியாக கோவில் மற்றும் ரத வீதிகளில் எல்.இ.டி. திரை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    நெல்லையில் இருந்து தென்காசிக்கு வரும் பக்தர்கள் ஆசாத் நகர் பகுதியிலும், சங்கரன்கோவில், புளியங்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து இறங்கியும் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தென்காசி கோவில் மற்றும் வளாக பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×