என் மலர்

    குழந்தை பராமரிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தைகளின் சிறிய முயற்சிகளை கூட பாராட்டுங்கள்.
    • குழந்தைகளை வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்காதீர்கள்.

    குழந்தைகள் சில சமயங்களில் பெற்றோரின் பேச்சை கேட்காமல் இருப்பதுண்டு. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி கொடுக்காதபோதோ, அவர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்கும்போதோ கடும் கோபம் கொள்வார்கள். அந்த சமயத்தில் எந்த வேலை சொன்னாலும் செய்ய மாட்டார்கள். பெற்றோரின் பேச்சுக்கு செவிமடுக்காமல் எதிர்த்து பேசவும் செய்வார்கள். பிடிவாதமும் பிடிப்பார்கள். அவர்களை திட்டாமல் அன்பாக அரவணைக்க ஒருசில விஷயங்களை செய்தாலே போதுமானது. உங்கள் சொல் பேச்சை கேட்டு நடக்க தொடங்கிவிடுவார்கள். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்...

    உணர்ச்சி ரீதியாக இணையுங்கள்

    குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன்பு உணர்ச்சி ரீதியாக அவர்களுடன் இணையுங்கள். அவர்களின் தோளில் மென்மையாக தொடுவது, கன்னத்தை பிடித்து கிள்ளுவது, அவர்களின் பெயரை மெதுவாக உச்சரிப்பது, கட்டிப்பிடிப்பது என அன்பை பொழியுங்கள். அவை அவர்களின் உணர்வுகளை ஆசுவாசப்படுத்தும். கோபம், பிடிவாதத்தை தளர்த்தச் செய்யும்.

    கண்கள் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்

    குழந்தைகள் இறுக்கமான மன நிலையிலோ, கடும் அதிருப்தியுடனோ இருந்தால் அவர்களை உடனே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். அந்த சமயத்தில் அவர்களை உரத்த குரலில் அழைப்பது, ஏதேனும் வேலை செய்யுமாறு கட்டளையிடுவது போன்ற செயல்கள் அவர்களிடத்தில் எரிச்சலை அதிகப்படுத்தும்.

    அதற்கு இடம் கொடுக்காமல் அவர்கள் இருக்கும் இடத்திற்கே நீங்கள் சென்று அவர்களின் மன நிலையை கவனியுங்கள். கண்கள் மூலம் நேருக்கு நேர் தொடர்பு கொள்ளுங்கள். அப்படி கண்களை பார்த்து பேசுவது அவர்களின் ஆக்ரோஷத்தை தணிக்கும். அதன் பிறகு அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட தொடங்கும்.

    கட்டளை இடாதீர்கள்

    குழந்தைகள் கடுமையான கட்டளைக்கு எளிதில் இணங்கமாட்டார்கள். ஆனால் அன்புக்கு கட்டுப்படுவார்கள். அதிகார தொனியிலோ, உரத்த குரலிலோ பேசுவதற்கு பதிலாக அன்பாக பேசி அவர்களின் விருப்பம் என்ன என்பதை முதலில் ஆராயுங்கள். முதலில் அவர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு அதன் பிறகு உங்கள் விருப்பப்படி செயல்பட முயற்சியுங்கள்.

    அமைதியான குரலில் பேசுங்கள்

    குழந்தைகள் விஷயத்தில் எப்போதும் மென்மையான அணுகுமுறையையே கையாள வேண்டும். கட்டளையிடுவது, சத்தமாக பேசுவது என குரல் தொனியில் ஆக்ரோஷம் வெளிப்படக்கூடாது. மெதுவாக, தெளிவாக, அன்பாக பேசுங்கள். அதிக சத்தத்தை விட அமைதியான குரல் எளிதில் அவர்களை உங்கள் வசப்படுத்திவிடும். நீங்கள் சொல்வதற்கு செவி சாய்க்க தொடங்கிவிடுவார்கள்.

     

    குழந்தைகளின் செயல்பாடுகளை பாராட்டுங்கள்

    குழந்தைகளின் சிறிய முயற்சிகளை கூட பாராட்டுங்கள். சின்ன சின்ன விஷயங்களை ஊக்கப்படுத்துங்கள். அடுத்த முறை இன்னும் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டுவார்கள்.

    மென்மையாக அணுகுங்கள்

    குழந்தைகளின் செயல்பாடுகள் அவர்களின் வயதுக்கு தக்கபடியே அமையும். அவர்களிடம் நடத்தையில் குறைபாடுகள் இருக்கலாம். அதனை கண்டிப்புடன் சுட்டிக்காட்டுவதோ, கடுமையாக திட்டுவதோ கூடாது. அதனை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கி புரியவைக்க வேண்டும். மென்மையாக அணுகுவதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளை படிப்படியாக மாற்றிவிட முடியும்.

    கால அவகாசம் கொடுங்கள்

    குழந்தைகள் எதையும் உடனடியாக செய்யமாட்டார்கள். நீங்கள் சொன்னதை செயல்படுத்த அவர்களுக்கு கால அவகாசம் கொடுங்கள். அதனை சிறப்பாக செய்து முடிக்க ஆலோசனையும் வழங்குங்கள். அப்படி அறிவுறுத்தலை வழங்கிய பிறகு அமைதியாக இருங்கள்.

    உங்களின் பொறுமை நிச்சயம் மாயாஜாலம் நிகழ்த்தும். அடிக்கடி தலையீடு செய்வதை தவிர்த்தால் போதும். நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுவார்கள்.

    பழக்கப்படுத்துங்கள்

    குழந்தைகளை வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்காதீர்கள். அவர்களாகவே ஆர்வமாக வேலை செய்ய ஊக்குவியுங்கள். அவர்கள் பயன்படுத்தும் அறையை சுத்தம் செய்ய வைக்க வேண்டும் என்றால், கட்டளையிடாதீர்கள்.

    'அறையை சுத்தம் செய்' என்று சொல்வதற்கு பதிலாக 'தரையில் கிடக்கும் பொம்மையை அலமாரியில் வை. புத்தகங்களை ஒழுங்குபடுத்து. அறையில் சிதறி கிடக்கும் பொருட்களை அந்தந்த இடத்தில் வை' என அன்பாக கூறுங்கள். அதைத்தொடர்ந்து 'நீங்கள் பயன்படுத்தும் அறையை நீங்களேதான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்' என்று கூறி அவர்களுடன் சேர்ந்து அறையை சுத்தப்படுத்துவதற்கு உதவுங்கள். நாளடைவில் அவர்களாகவே சுத்தம் செய்வதற்கு பழகிவிடுவார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.
    • மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும்.

    பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற, அவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு மூளை வளர்ச்சியை தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது.

    மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது.

    மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், போதிய சத்தின்மையாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே ஞாபக மறதிக்கு முக்கிய காரணம். இதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடுவர்.

    இவை அனைத்திற்கும் சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணம். எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம். அத்துடன் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.

    கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும். பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது.

    இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.

    அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இந்த உணவு நல்ல ஒரு உடல் வளர்ச்சியை தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது. மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை அதிகம் உண்பதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும். நட்ஸ் அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.

    வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது. மேலும் வைட்டமின் பி அதிகம் இருப்பதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், உடலில் எல்லா பாகங்களும் சுறுசுறுப்பாக இருக்கும்.மேலும் காய்கறிகளில் தக்காளி, கேரட், பீன்ஸ், கீரைகள் போன்றவையும் சிறந்தது.

    ஆகவே மேற்கூறிய உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் மூளையானது நன்கு சுறுசுறுப்போடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். க்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், பாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும். பெர்ரி பழங்களில் குவர்செடின் என்னும் மூளைச் செல்களில் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் உள்ளது.

    அதுமட்டுமின்றி இதில் ஆந்தோசையனின் என்னும் போட்டோ கெமிக்கல், அல்சீமியர் என்னும் ஞாபக மறதி நோயை தடுக்கும். அதிலும் சில பெர்ரி பழங்களான ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது. பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

    தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது.

    எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது. மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் தான் உள்ளது. எனவே தண்ணீர் குறைவானால் மூளையில் செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும். எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச்செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தைகளின் காதுகளை பொறுத்தவரை வலி ஏற்படுவது அவ்வப்பொழுது வரக்கூடிய பாதிப்பு தான்.
    • மூக்கில் ஏற்படும் சிக்கல்களை பொறுத்தவரை சுற்றுப்புற சூழலில் உள்ள மாசு காரணமாகத்தான் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.

    குழந்தைகளைப் பொறுத்தவரை இ.என்.டி என்று சொல்லப்படும் காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் அவர்களுடைய உடல் நிலை மற்றும் கல்வியில் சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன.

    பள்ளி செல்லும் குழந்தைகள் இ.என்.டி பிரச்சனையால் அடிக்கடி பாதிக்கப்படும் நிலையில், பெற்றோர் மற்றும் ஆசிரியர் இரு தரப்பினரும் இணைந்து இந்த பிரச்சனையில் அக்கறை காட்ட வேண்டியதாக உள்ளது.

    காதுகளில் அல்லது மூக்கில் ஏதேனும் சிறிய பொருட்களை குழந்தைகள் போட்டுக் கொள்ளும் பொழுது அதன் மூலம் அடைப்பு ஏற்பட்டு சில நேரங்களில் ரத்தம் கூட வழியலாம். பழங்களின் கொட்டைகள், சிறிய நாணயங்கள் ஆகியவற்றை எதிர்பாராமல் குழந்தைகள் விழுங்கி விடும்பொழுது அது உணவுக் குழாய் அல்லது மூச்சுக்குழாய் வரை சென்று அடைபட்டு சிக்கலை ஏற்படுத்தி விடலாம். அது போன்ற சமயங்களில் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது மிக அவசியம்.

    குழந்தைகளின் காதுகளை பொறுத்தவரை வலி ஏற்படுவது அவ்வப்பொழுது வரக்கூடிய பாதிப்பு தான். சளி தொல்லையால் குழந்தைகள் பாதிக்கப்படும் பொழுது காது வலி அவர்களுக்கு ஏற்படலாம். மூக்கின் பின்பக்கம் உள்ள குழாய் மூலம் காதுக்கு செல்லும் வழி அடைபட்டு தொற்று ஏற்பட்டு அதன் மூலம் காது வலி ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், சளி பிடித்துள்ள சமயங்களில் குழந்தைகள் காது வலி என்று தெரிவித்தால் அவர்களுடைய காதில் உட்புறம் பாதிக்கப்பட்டுள்ளதா என்று மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    மேலும், பட்டாசுகளை அதிக ஒலியோடு வெடிப்பது, காது சுத்தம் செய்யும் பட்ஸை குழந்தைகள் தவறாக பயன்படுத்தி விடுவது, குழந்தைகளுக்கு இடையில் ஏற்படும் சண்டை காரணமாக காது பகுதியில் எதிர்பாராமல் தாக்கி விடுவது, ஏதேனும் கட்டிகள் ஏற்படுவது ஆகியவை காரணமாகவும் குழந்தைகளின் காதுகளில் வலி ஏற்படலாம். பெற்றோர்கள் தவறியும் கூட குழந்தைகளின் காது வலிக்கு எண்ணெய் விடுவது போன்ற விஷயங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.



    மூக்கில் ஏற்படும் சிக்கல்களை பொறுத்தவரை சுற்றுப்புற சூழலில் உள்ள மாசு காரணமாகத்தான் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அத்துடன் சளி பிடிக்கும் பொழுது மூக்கு அடைத்து விடுவதால் வாய் மூலம் சுவாசம் நடந்து அடினாய்டு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது,

    தொண்டையை பொறுத்தவரை டான்சில் கட்டிகள் ஏற்படுவது, அதன் மூலம் இன்பெக்சன் ஏற்பட்டு காய்ச்சல் வருவது, குளிர் பானங்களை அல்லது ஐஸ்கிரீமை அதிகமாக உண்பது, கரும்புச்சாறு, பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளுடன் நெருக்கமாக பழகுவது, தொடர் இருமல் ஆகியவை காரணமாகவும் தொண்டை பாதிக்கப்படலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தைகளுக்குப் பிடித்தமான விளையாட்டுப் பொருட்களின் வடிவில் காய்கறி இருந்தால் மிகவும் சிறப்பு.
    • சரியான நேரத்துக்கு சாப்பாடு தர வேண்டும்.

    காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆற்றலைத் தருகின்றன. காய்கறிகளை சாப்பிடுவது குழந்தைகளை நோய்களில் இருந்து பாதுகாக்கும். காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆற்றல், வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் தண்ணீரை வழங்குகின்றன. அவை குழந்தைகளை பிற்காலத்தில் இதய நோய், பக்கவாதம் மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. ஆனால், காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை குழந்தைகள் விரும்பிச் சாப்பிட வைப்பது எப்படி? இப்படித்தான்...

    உணவு விஷயத்தில் உங்களைப் பார்த்துத்தான் உங்கள் குழந்தை கற்றுக்கொள்கிறது, எனவே குழந்தையை காய்கறிகளை சாப்பிட ஊக்குவிப்பதற்கான சிறந்த வழி, நீங்கள் சாப்பிடுவதையும், அதை ரசித்து ருசிப்பதையும் குழந்தையை பார்க்க வைப்பதாகும்.

    குழந்தைகள் நிறைய காய்கறிகளை சாப்பிட ஊக்குவியுங்கள். அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருங்கள். இந்த விஷயத்தில் விடாமுயற்சியும், பாராட்டும் உதவும்.

    குழந்தைகளிடம் சாப்பாட்டை திணிக்கக் கூடாது. அவர்களுக்கு பசிக்கும்போதுதான் உணவு ஊட்ட வேண்டும். புடலங்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய், அவரைக்காய் போன்ற காய்களை பெரும்பாலான குழந்தைகள் விரும்புவதில்லை. அவற்றை நறுக்கும்போது வித்தியாசமான முறையில் நறுக்க வேண்டும்.

    குழந்தைகளுக்குப் பிடித்தமான விளையாட்டுப் பொருட்களின் வடிவில் காய்கறி இருந்தால் மிகவும் சிறப்பு. காய்கறிகளை வைத்து வேடிக்கையான வடிவங்களை உருவாக்குவது அல்லது சிறு துண்டுகளாக நறுக்கி வித்தியாசமாக பரிமாறினால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    உங்கள் பிள்ளை ஒரு குறிப்பிட்ட பழம் அல்லது காய்கறியை விரும்பவில்லை என்று ஒருபோதும் முடிவெடுத்துவிட வேண்டாம். அடுத்த முறை நீங்கள் அதை சமைக்கும்போது, அவர்கள் அதை தின்று பார்க்க முயற்சி செய்யலாம். குழந்தைகளின் ரசனைகள் வயதுக்கு ஏற்ப மாறுகின்றன.

    சரியான நேரத்துக்கு சாப்பாடு தர வேண்டும். சாப்பிடுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு வரை எந்த நொறுக்குத்தீனியும், குளிர்பானமும் கொடுக்கக் கூடாது. அதிலும், சாக்லேட் போன்ற தீனிகள் கூடவே கூடாது.

    உங்கள் குழந்தையை பழம், காய்கறிகளை வாங்க அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் உங்களுடன் பழங்களையும் காய்கறிகளையும் பார்க்கவும், முகரவும், உணரவும் அனுமதிக்கவும்.

    காய்கறிகளை கழுவுவது, அவற்றை எடுத்துவைப்பது போன்ற சிறு சிறு வேலைகளை குழந்தைகளிடம் கொடுத்து ஈடுபடுத்துவது, அவர்கள் உணவை விரும்பி சாப்பிடத் தூண்டும்.

    காய்கறி பொரியல், கூட்டு போன்றவற்றை பரிமாறும் போது கூடவே வடகம், அப்பளம் போன்ற எண்ணெயில் பொரித்தவற்றை வைக்கக் கூடாது. அவற்றை எடுத்து உண்டுவிட்டு, காய்கறிகள் வேண்டாம் என்று பிள்ளைகள் தவிர்ப்பார்கள். எனவே அவற்றை தனியாகத் தருவதுதான் நல்லது.

    அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினால், குழந்தைகளும் உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    சாப்பிட மறுக்கும் குழந்தைகளை ஒருபோதும் தண்டிக்காதீர்கள். எதையாவது சொல்லி பயம் காட்டாதீர்கள். அது குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியை பாதிக்கும். வற்புறுத்தி உங்கள் குழந்தையை சாப்பிட வைக்க நினைப்பது தவறு. அது அவர்களுக்கு சாப்பாட்டின் மீதான கொஞ்ச நஞ்ச ஆசையையும் நீக்கிவிடும். பொறுமையோடு முயற்சி செய்யுங்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடற்பயிற்சி உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.
    • வீட்டு பணிகளான சுத்தம் செய்தல், துடைத்தல், போன்ற வேலைகளை குழந்தைகள் செய்வது ஒரு நல்ல உடற்பயிற்சி.

    இன்றைய வாழ்க்கை சூழலில் உடற்பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உடற்பயிற்சி பெரியவர்களுக்கு மட்டும் அல்ல குழந்தைகளுக்கும் அவசியமானதாக கருதப்படுகிறது.

    உடற்பயிற்சி உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. குழந்தைகள் ஓடி ஆடி விளையாடாமல் ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து இருப்பதால் உடலில் அதிக கொழுப்புகள் சேர்ந்து சிறு வயதிலேயே உடல் பருமன் உண்டாகிறது. இவற்றை தடுக்க குழந்தைகள் செய்ய வேண்டிய எளிமையான உடற்பயிற்சிகளை பற்றி அறிந்து கொள்வோம்.

    நடைப்பயிற்சி

    வீட்டில் மாடி இருந்தால் தினமும் 10-15 நிமிடம் வரை படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம். இல்லையென்றால் வீட்டின் அருகே நடக்கலாம். வாய்ப்பு இருப்பின் வீட்டிற்கு அருகே உள்ள பூங்காக்களில் நடப்பது சிறந்த உடற்பயிற்சி ஆகும். இவ்வாறு செய்வது குழந்தைகளின் உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வையாக வெளியேறுகிறது. இதயத்துடிப்பு சீராகிறது.

    சிலம்பு பயிற்சி

    கம்புகளை வைத்து செய்கிற சிலம்பு பயிற்சியும் சிறந்த உடற்பயிற்சியாகும். இது தற்காப்பு கலைகளுள் ஒன்று. இதை தினமும் செய்வதால் குழந்தைகளின் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் சிலம்பாட்டம் உதவி புரியும்.

    யோகா

    தினமும் இருபது நிமிடங்கள் யோகா செய்வது குழந்தைகளுக்கு நல்லது. பல யோகாசனங்கள் இருக்கின்றன. அவற்றில் அடிப்படையான ஆசனங்களான பிராணாயாமம், சூரிய நமஸ்காரம் ஆகிய வற்றை செய்வது சிறப்பானது. யோகா செய்வது குழந்தைகளின் மனதை அமைதியாக்குகிறது. சிந்தனைகளை ஒருநிலைப்படுத்துகிறது.

     

    வீட்டு பணிகளை செய்வது

    வீட்டு பணிகளான சுத்தம் செய்தல், துடைத்தல், போன்ற வேலைகளை குழந்தைகள் செய்வது ஒரு நல்ல உடற்பயிற்சி ஆகும். இந்த வேலைகளை செய்வதால் நாம் குனிந்து நிமிருகிறோம். அதேபோல வீட்டில் கலைந்துள்ள பொருட்களை அழகாக அடுக்கி வைப்பதும் ஒரு உடற்பயிற்சி தான்.

    நடனம் ஆடுவது

    வீட்டில் நடனம் ஆடுவது சிறந்த உடற்பயிற்சியாக அமைகிறது. பெற்றோர்கள் நடன அசைவுகளை கற்றுக்கொடுத்து குழந்தைகளை ஆட சொல்லலாம். இது உடலுக்கும், மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும். ஆப்பிரிக்க நாடுகளிலும், மற்ற வெளிநாடுகளிலும் வீட்டில் நடனம் ஆடுவதை உடற்பயிற்சியாக செய்து வருகின்றனர்.

    கயிறு வைத்து குதிப்பது

    ஸ்கிப்பிங் எனப்படும் கயிறு வைத்து குதித்து விளையாடும் பயிற்சியை குழந்தைகள் தினமும் செய்வது அவர்களின் பாதங்களையும், உடல் உறுப்புகளையும் சீராக வைத்திருக்க உதவி புரியும். இதை தினமும் செய்வதால் உடல் எடை அதிகரிக்காமலும், உடல் தசைகள் வலிமையாகவும் இருக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடற்கரை மணலில் கால் பதித்து விளையாடும் குழந்தைகளுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கிறது.
    • மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் கற்பனை திறனையும், படைப்பாற்றல் திறனையும் வளர்க்கிறது.

    மண் என்பது இயற்கையின் மகத்தான கொடை. இந்த மண் இன்றி உலகமே இல்லை. இந்த மண்ணுக்கும், குழந்தைகளுக்குமான உறவு என்பது மிக நெருக்கமானது. மண்ணை கண்டால் ஆரவாரம் செய்து விளையாடும் குழந்தைகள் ஏராளம். இன்று பெரியவர்களாய் இருக்கும் பலரும் மண்ணோடு உருண்டு புரண்டு விளையாடிய மகிழ்ச்சியான அனுபவத்தை கொண்டு இருப்போம். எத்தனை விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் இருந்தாலும் இயற்கையின் இலவசமான விளையாட்டுப் பொருள் என்றால் அது மண்தான். அதில் விளையாடுவதற்கு குழந்தைகளுக்கு அனுமதி கொடுங்கள். குழந்தைகள் மண், மணலில் விளையாடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்!

     

    * கடற்கரை மணலில் கால் பதித்து விளையாடும் குழந்தைகளுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கிறது.

    * மண்ணில் வீடுகட்டி விளையாடுதல், கோபுரம் கட்டுதல், குச்சியை மறைத்து வைத்து கண்டு பிடித்தல், எலிவளை அமைத்தல், குகைகள் அமைத்தல் போன்ற பல விளையாட்டுகளை விளையாடுவதால் குழந்தைகளின் உடல் தசைகள் வலிமை பெறுகின்றன.

    * குழந்தைகள் மணலில் விளையாடுவதால் அவர்களின் மனம் ஆரோக்கியமாக இருக்கிறது. ஒற்றுமை மலர்கிறது. விட்டுக்கொடுக்கும் பழக்கம் வளர்கிறது.

    * மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் கற்பனை திறனையும், படைப்பாற்றல் திறனையும் வளர்க்கிறது.

    * ஈரமணல், உலர்ந்த மணல், நீர் சேர்த்து குழைத்த மணல், களிமண் என பலவித மணல்களில் விளையாடும் போது குழந்தைகளின் பிரித்தறியும் திறன் வளர்கிறது.

    * பெற்றோர் மணல் விளையாட்டுகள் மூலம் பெற்ற பசுமையான அனுபவங்களை குழந்தைகளுக்கும் கொடுத்திட வேண்டும். குழந்தைகளுக்கு மணல் விளையாட்டுகளின் மகிமையை சொல்லிக்கொடுக்க வேண்டும்.

    * இன்றைக்கு எத்தனையோ விளையாட்டுப் பொருட்கள் உருவெடுத்தாலும் அடிப்படையில் மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வாழ வித்திடுகின்றன.

    எனவே பெற்றோரே! குழந்தைகளுக்கு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கி கொடுங்கள். மண் உண்டியலை வாங்கி கொடுத்து சேமிக்க சொல்லிக்கொடுங்கள். வீடுகளில் மணல் தரைகள் இல்லாத இந்த காலச்சூழலில் குழந்தைகளை பூங்காக்களுக்கும், கடற்கரைக்கும் அழைத்துச் சென்று விளையாட விடுங்கள்.

    இயற்கையின் கொடையான மண்ணை நேசியுங்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெற்றோர் குழந்தைகளுடன் அமர்ந்து ஒரு கதை சொல்ல வேண்டும்.
    • குழந்தைகளின் புரிதல் திறன் வளர்கிறது.

    ஒரு ஊர்ல ஒரு காடு இருந்தது என்று கதை சொல்ல தொடங்கும் போதே குழந்தைகள் காட்டிற்குள் சென்று விடுகிறார்கள். அந்தக் காட்டில் ஒரு பெரிய சிங்கம் இருந்தது என்றதும் பெரிய சிங்கத்தை கற்பனையில் உருவாக்கி விடுகிறார்கள்.

    இப்படி குழந்தைகளுக்கு கதை சொல்வதால் அவர்கள் தங்களை மறந்து கதை உலகிற்குள் சென்று விடுகிறார்கள். இந்த கதைகள் குழந்தைகளை எப்படி உருவாக்குகிறது? என்ன பயன் கிடைக்கிறது? என்பதை இத்தொகுப்பில் அறிந்து கொள்வோம்!


    இன்றைய காலச்சூழலில் குழந்தைகளோடு அமர்ந்து பேசுவதற்கும், அவர்கள் சொல்வதை கேட்பதற்கும் நேரம் இல்லாமல் பல பெற்றோர் வேலை என்று ஓடிக்கொண்டு இருக்கின்றனர். இதனால் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பேசுவதற்கு தயங்குகிறார்கள்.

    இந்த சூழலை சரி செய்ய பெற்றோர் குழந்தைகளுடன் அமர்ந்து ஒரு கதை சொல்ல வேண்டும். இது குழந்தைகளுக்கு அன்பை வெளிப்படுத்துகிற செயல்பாடாக மாறும். இதனால் குழந்தைகள் பெற்றோர் உறவு நெருக்கமாகும்.

    நேர்மறை எண்ணம் வளர்தல்

    குழந்தைகளுக்கு நீதிக்கதைகளையும், தன்னம்பிக்கை கதைகளையும், வரலாற்று கதைகளையும், புரட்சியாளர்களின் வாழ்க்கை கதைகளையும் சொல்கிறபோது அவர்கள் உள்ளத்தில் தன்னம்பிக்கை வளர்கிறது.

    இந்த சமூகத்துக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற உந்துதல் கிடைக்கிறது. எல்லா சூழலிலும் வாழ்க்கையை நேர்மறை எண்ணத்துடன் எதிர்கொள்ளும் எண்ணத்தை கதைகள் குழந்தைகளுக்குள் விதைக்கிறது.


    புரிதல் திறன் அதிகரித்தல்

    குழந்தைகள் கதைகளை ஆர்வமுடன் கேட்பதால் அந்த கதையின் கருத்துகளை புரிந்து கொள்கிறார்கள். ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை கேட்கிறார்கள். குழந்தைகளுக்கு கதை சொல்வதால் அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆர்வம் அதிகமாகிறது. இதனால் அவர்களின் புரிதல் திறன் வளர்கிறது.


    சொல் அறிவு

    ஒவ்வொரு முறை கதை சொல்கிற போதும், கதைகளை கேட்கிற போதும் குழந்தைகள் புதிய சொற்களையும் அதற்குரிய அர்த்தங்களையும் தெரிந்து கொள்கிறார்கள். நிறைய கதைகளை கேட்கிறபோது பல சொற்கள் அவர்களுக்கு கிடைக்கிறது. அதிகமான சொல் அறிவு அவர்கள் எழுதுவதற்கு உதவுகிறது.

    நல்லொழுக்கம் வளர்கிறது

    கதைகள் குழந்தைகளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆர்வமுடன் கேட்பதால் அவர்களின் ஆழ்மனதில் கதைகள் பதிந்து விடுகிறது. எனவே குழந்தைகளுக்கு ஒழுக்கம் சார்ந்த கதைகளை சொல்வது அவர்களை ஒழுக்கமானவர்களாக மாற்றும்.


    கலாசாரங்களை அறிதல்

    குழந்தைகள் கதைகளின் வழியாக அவர்களுடைய கலாசாரத்தை அறிந்து கொள்கிறார்கள். பல நாட்டு கதைகள் வழியாக குழந்தைகள் பரந்துபட்ட உலகத்தையும், பிற பழக்கவழக்கங்களையும் அறிந்து கொள்கிறார்கள். இதனால் குழந்தைகள் எல்லா மக்களையும் புரிந்து கொண்டு பன்முகத்தன்மை மிகுந்தவர்களாக வளர்வார்கள்.

    எனவே, அன்பு பெற்றோரே! குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள், குழந்தைகளின் கதைகளை கேளுங்கள். கதைகளை வாசிக்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள். குழந்தைகள் சொல்லும் கதைகளை புத்தகமாக்குங்கள். கதைகள் அவர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாக மாற்றும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிகமான உணவுகளை கொடுப்பதை விட அதை பிரித்து கொடுங்கள்.
    • உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த வடிவங்களில் செய்து கொடுங்கள்.

    குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது இன்றைய பெற்றோருக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. அதனை எளிதாக்கும் ஒரு சில வழிமுறைகளை அறிந்து கொள்வோம்!


    குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் நேரத்தை வழக்கப்படுத்துங்கள். ஒரே நேரத்தில் அதிகமான உணவுகளை கொடுப்பதை விட அதை பிரித்து கொடுங்கள்.

    சமைக்கும்போது குழந்தைகளின் உதவியை நாடுங்கள். மாவு பிசைவது, பழங்களை துண்டுகளாக வெட்டுவது போன்ற வேலைகளை அவர்கள் செய்கிறபோது உணவை உண்பதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.

    உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த வடிவங்களில் செய்து கொடுங்கள். அவ்வாறு செய்கிறபோது விரும்பி சாப்பிடுவார்கள்.


    காய்கறிகளையும், பழங்களையும் சிறிய துண்டுகளாக நறுக்கி கொடுங்கள்.

    குழந்தைகள் சாப்பிடும்போது தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். இதனால் குழந்தைகள் முழு கவனத்துடனும் அதனை ரசித்து சாப்பிட முடியும்.

    கூடுமானவரை குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். இதன் மூலம் மற்றவர்கள் சாப்பிடுவதை பார்த்து பிறருக்கு கொடுத்தும் குழந்தைகள் சாப்பிடுவார்கள்.


    குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடித்தால் அவர்களைப் பயமுறுத்தாமல், அடிக்காமல் பொறுமையாக இருந்து, உணவு கொடுக்க முயற்சி செய்யுங்கள்.

    குழந்தைகளுக்கு உணவை சிறிய உருண்டைகளாக கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் விருப்பத்துடன் உண்பார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீங்கள் எத்தகைய குணம் படைத்தவர் என்பது பிறரிடம் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது.
    • ஊட்டச்சத்துமிக்க, சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்.

    பெற்றோர் பின்பற்றும் பழக்கவழக்கங்கள், குணாதிசயங்கள், அன்றாட செயல்பாடுகள், பிறரிடம் பழகும் விதம், நட்பு-உறவுகளுடன் பேணும் நெருக்கம் உள்ளிட்ட வாழ்வியல் விஷயங்களை குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அதன்படியே செயல்படவும் தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள்.

    பெற்றோர்கள் உச்சரிக்கும் வார்த்தைகள், பேசும் தொனி போன்றவற்றையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். அத்தகைய வார்த்தைகளை கேட்பதோடு மட்டுமல்லாமல் பெற்றோரின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து, ரகசியமாக பின்பற்றவும் செய்கிறார்கள். அப்படி கவனிக்கும் விஷயங்கள் பற்றியும், பெற்றோரின் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்.

    மன அழுத்தத்தை கையாளும் விதம்

    மன அழுத்தத்தில் இருக்கும்போது பெற்றோர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அந்த சமயத்தில் மற்றவர்களுடன் எப்படி பேசுகிறார்கள்? எப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதையும் கவனத்தில் கொள்கிறார்கள். அந்த கடினமாக சூழலில் கத்துவது, பீதி அடைவது, மற்றவர்களை பற்றி புகார் செய்வது, மனக்குழப்பத்தில் இருப்பது என பெற்றோரின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் கண்காணிக்கிறார்கள்.

    அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சமயத்தில் பெற்றோர் பின்பற்றிய அணுகுமுறையை செயல்படுத்தி பார்க்கவும் முன் வருவார்கள். அதனால் பெற்றோர் மன அழுத்தத்தில் இருக்கும் சமயத்தில் குழந்தைகளிடத்தில் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். மன இறுக்கத்துடன் இருப்பது, சத்தமாக பேசுவது உள்ளிட்ட செயல்களை செய்யக்கூடாது. மன அமைதியை தக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

    உங்கள் உணர்ச்சிகளை குழந்தைகளிடத்தில் வெளிப்படுத்தி, ''நான் இப்போது மன அழுத்தத்தில் இருக்கிறேன். ரொம்பவே விரக்தி அடைந்துவிட்டேன். அதனால் மூச்சை ஆழமாக உள் இழுத்து வெளியிட்டு மனதை அமைதிப்படுத்த முயற்சிக்கப்போகிறேன்'' என்று கூறி அதனை குழந்தைகள் முன்னிலையில் செயல்படுத்தியும் காண்பிக்க வேண்டும். குழந்தைகள் அத்தகைய சூழலுக்கு ஆளாகும்போது மூச்சு பயிற்சியை பின்பற்ற வழிகாட்ட வேண்டும்.

    மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் சுபாவம்

    நீங்கள் எத்தகைய குணம் படைத்தவர் என்பது பிறரிடம் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் குணத்தை நீங்கள் உச்சரிக்கும் வார்த்தையும் பிரதிபலித்துவிடும். வீட்டு பணியாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், உங்களை விட வயது குறைந்தவர்கள் என உங்கள் கட்டளைப்படி நடப்பவர்களிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதையும் குழந்தைகள் உன்னிப்பாக கவனிப்பார்கள். அவர்களிடம் நீங்கள் கடுமையாக நடந்து கொண்டாலோ, கடுஞ்சொற்களை உச்சரித்து பேசினாலோ அதை பார்த்து குழந்தைகளும் தாமும் அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.



    வேலை, சமூக அந்தஸ்து, பொருளாதார பின்னணியை பொருட்படுத்தாமல் அனைவரையும் மரியாதையுடன் நடத்துவது அவசியம் என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய சமூக கடமை பெற்றோருக்கு இருக்கிறது. குழந்தைகள் அதன்படி நடக்க பெற்றோர் முன்மாதிரியாக திகழ வேண்டும்.

    மற்றவர்களிடம் அன்பாக பழக வேண்டும். பிறரை பார்த்ததும் புன்னகைப்பது, கண்களை பார்த்து பேசுவது, பணிவாக நடந்து கொள்வது போன்ற செயல்களை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அதனை பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்கவும் வேண்டும்.

    உணவு - உடல் தோற்றம்

    நேர்த்தியாக உடை அணிவதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதை விட உடல் தோற்றத்தை பராமரிப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் உடனே களமிறங்கி விட வேண்டும். முதலில் உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.

    ஊட்டச்சத்துமிக்க, சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் அதனை பழக்கப்படுத்த வேண்டும். விரும்பிய எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற மனோபாவம் கொண்டிருந்தால் அதை பார்த்து குழந்தைகளும் பின்பற்ற தொடங்கிவிடுவார்கள். உண்ணும் உணவுகளில் எது நல்லது? எது கெட்டது? என்று முத்திரை குத்தினால் குழந்தைகளும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட பழகிவிடுவார்கள். குழந்தைகள் முன்னிலையில் உடல் தோற்றம் பற்றி எதிர்மறையாக பேசுவதை தவிர்க்க வேண்டும். உடல் தோற்றத்தை பார்த்து மற்றவர்கள் விமர்சித்தாலும் அது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலம் உடல் நலனை பராமரிக்க ஊக்குவிக்க வேண்டும்.

    குடும்ப நேரம்

    அலுவலகம் செல்லும் பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் நேரங்களிலும் செல்போனை உபயோகிப்பது குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை பாழ்படுத்திவிடும். அவர்களும் பெற்றோர் தங்களிடம் அன்பாக, அக்கறையாக நடந்துகொள்வதில்லை என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள். பெற்றோர் வீட்டுக்குள் நுழைந்ததும் உற்சாகமாக ஓடோடி வரும் குழந்தைகளாக அவர்கள் வளர வேண்டும்.அதை விடுத்து செல்போனிலோ, டி.வி.யிலோ நேரத்தை செலவிட்டால் அவர்களும் அதே பழக்கத்தைத்தான் பின்பற்றுவார்கள். தினமும் இரவில் 'குடும்ப நேரம்' என்ற ஒன்றை நிர்வகிக்க வேண்டும். அந்த நேரத்தில் செல்போன் உள்ளிட்ட எதிலும் கவனம் செலுத்தாமல் குடும்ப விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் தங்கள் கடந்த கால வாழ்க்கையை பற்றி பேசலாம். பள்ளியில் நடந்த விஷயங்களை குழந்தைகளிடம் கேட்டறியலாம்.

    குடும்ப நிர்வாகம்

    குடும்ப பொறுப்புகளை பெற்றோர் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதையும் குழந்தைகள் கவனித்துக்கொண்டிருப்பார்கள். குழந்தைகள் முன்னிலையில் எந்த வேலையையும் அசட்டையாக செய்தாலோ, 'அந்த வேலையை பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று அலட்சியமாக பதில் அளித்தாலோ குழந்தைகளும் அதனை கருத்தில் கொள்வார்கள். அந்த வேலையை சுமையாக கருதினால் குழந்தைகளும் அவ்வாறே எண்ணுவார்கள்.

    அவர்களிடம் ஏதேனும் வேலை கொடுத்தால், அந்த வேலையை செய்ய விரும்பாதபட்சத்தில் பெற்றோரை போன்றே அலட்சியமாக நடந்து கொள்வார்கள். ஒரு வேலையை செய்ய முடியாவிட்டால், 'இன்று நான் பிஸியாக இருக்கிறேன். எப்படியாவது குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடித்துக்கொடுத்து விடுவேன்' என்று கூறுங்கள். அதன்படியே செயல்படவும் செய்யுங்கள். அதை பார்த்து குழந்தைகளும் அவ்வாறே செயல்பட பழகிவிடுவார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பரீட்சைக்கு குறுகிய காலம் இருக்கும் போது கால அட்டவணை மிகமிக முக்கியமானது.
    • குறுவினா, மல்ட்டிபிள் சாய்ஸ் உள்ளிட்ட தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள வேண்டும்.

    ஓராண்டு பாடத்திட்டங்கள் கிட்டத்தட்ட முடிந்து, இப்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஒருசில வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் பாடம் நடத்த நடத்த படித்து புரிந்து கொள்ளும் மாணவர்களுக்கு மத்தியில், பாடங்களை இறுதியில் படித்து கொள்ளலாம் என நினைக்கும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் சிலர், தாங்கள் நினைத்தபடியே இறுதியில் ஒட்டுமொத்தமாக படித்து 'பாஸ்' மார்க் வாங்குவதுடன், ஒருசிலர் கணிசமான மதிப்பெண்களை பெறுகிறார்கள். அத்தகைய மனபக்குவம் கொண்ட மாணவர்களாக நீங்கள் இருந்தால், இந்த செய்தி தொகுப்பு உதவியாக இருக்கும். தேர்வு நெருங்கிய இறுதி நேரத்தில், எப்படி பாடங்களை படிப்பது, எப்படி தேர்வுக்கு தயாராகுவது என்பதை அறிந்து கொள்வோம்.

    1. கால அட்டவணை

    பரீட்சைக்கு குறுகிய காலம் இருக்கும் போது கால அட்டவணை மிகமிக முக்கியமானது. என்ன தேர்வு முதலில் வர இருக்கிறது, அந்த தேர்வுக்கான பாடத்தின் முதல் பகுதி, கடைசி பகுதி, அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் பகுதி என பாடத்திட்டத்தை நீங்களே பிரித்தெடுத்து அதற்கு ஏற்ப கால அட்டவணையை தயார் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, கால அட்டவணைக்கு ஏற்ப பாடங்களை படித்து, தேர்வுக்கு தயாராக வேண்டும்.

    2. வினா வகை

    குறுவினா, மல்ட்டிபிள் சாய்ஸ் உள்ளிட்ட தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள வேண்டும். என்ன வகையான வினாக்கள், எப்படிப்பட்ட அமைப்பை நமது பாடம் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொண்டு அதில் அதிக மதிப்பெண் பெறும் முறையில் படிக்க வேண்டும்.

    3. துறை ரீதியாக தயாராகுதல்

    நீங்கள் படிக்கும் துறை சார்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். வரலாறு, உயிரியல், மொழி சார்ந்த பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வுக்கு தயாராக வேண்டும். அரசியல், விஞ்ஞானம், பொறியியல் போன்ற பாடங்களை நன்கு புரிந்து கொண்டு தயாராக வேண்டும். கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களை தீர்வு காணும் வகையில் படிக்க வேண்டும்.

    4. அதிக முக்கியத்துவத்தை உணருதல்

    பாடத்திட்டத்தில் எந்த பகுதியை படித்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும், எந்த பகுதியில் அதிக கேள்விகள் வரும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தேர்வுக்கு தயாராக வேண்டும்.

    5. உணவும், உறக்கமும்...

    உணவும் உறக்கமும் இரு கண்கள் என்று நினைத்துக் கொண்டு அளவோடு உண்டு உறங்குவது தேர்வு பயிற்சிக்கு மிகமிக முக்கியமானது. அதிகம் உண்டால் தேர்வின் போது தூக்கம் வரும். நீண்ட நேரம் விழித்திருந்தாலும் இதே பிரச்சினை தொடரும். எனவே அளவோடு உணவை உட்கொள்ள வேண்டும். எளிதில் செரிமானமாகும் உணவை தேர்வு செய்ய வேண்டும். கிரீன் டீ, சாக்லெட்டுக்கள் போன்றவற்றை அவ்வப்போது படிக்கும் நேரத்தில் சாப்பிட்டால் உற்சாகத்துடன் படிக்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தைகள் ஆர்வமாக செய்யும் விஷயங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.
    • பிறர் முன்பு திட்டுவது குழந்தைகளின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவித்துவிடும்.

    குழந்தைகள் எத்தகைய குணாதிசயம், சுபாவம் கொண்டவர்களாக விளங்குகிறார்கள் என்பதை பெற்றோரின் வளர்ப்புமுறைதான் தீர்மானிக்கிறது. அவர்கள் எந்த அளவுக்கு பொறுப்புணர்வோடு பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அவர்களின் வாழ்க்கை பாதை கட்டமைக்கப்படுகிறது.

    சின்ன விஷயங்களுக்கெல்லாம் பிள்ளைகள் பிடிவாதம் கொண்டவர்களாக இருப்பதற்கு பெற்றோரின் வளர்ப்பில் தென்படும் குறைபாடுகளே காரணமாக அமையும். அவை குறித்தும், அதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.


    குழந்தைகளை பாராட்டுவதில்லை

    குழந்தைகள் ஆர்வமாக செய்யும் விஷயங்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அவை மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தாலோ, பாராட்டும்படியாக இருந்தாலோ மனதார வாழ்த்த வேண்டும். இன்னும் சிறப்பாக செயல்படும்படி ஊக்குவிக்க வேண்டும். அப்படி புகழ்ந்து பேசுவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

    'தாம் சிறப்பாக செயல்படுகிறோம்' என்று அவர்களும் தங்களை பற்றி பெருமை கொள்வார்கள். அப்படி அல்லாமல் குழந்தைகள் எது செய்தாலும் 'இதெல்லாம் ஒரு விஷயமா?' என்று பெற்றோர் சாதாரணமாக கடந்து செல்வது ஏற்புடையதாக இருக்காது. தாம் என்ன செய்தாலும் பெற்றோர் உற்சாகப்படுத்தமாட்டார்கள் என்ற மன நிலை பிள்ளைகளை ஆட்படுத்திவிடும்.

    பெற்றோர் தம்மை மதிப்பதில்லை என்ற மனநிலைக்கும் வந்துவிடுவார்கள். அது பிடிவாத குணத்தை அவர்களுக்குள் விதைப்பதற்கு அடித்தளமாக மாற வாய்ப்பிருக்கிறது. அதற்கு இடம் கொடுக்காமல் குழந்தைகளின் செயல்பாடுகளை பெற்றோர் ஊக்குவித்து கொண்டாட வேண்டும்.


    மற்றவர்கள் முன்பு விமர்சனம் செய்தல்

    பிள்ளைகள் ஏதேனும் தவறு செய்தால் அதனை சுட்டிக்காட்டி திருத்துவது பெற்றோரின் கடமை. அதேவேளையில் அந்த தவறை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதோ, அவர்கள் முன்பு திட்டுவதோ பிள்ளைகளுக்கு மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.

    அப்படி பிறர் முன்பு திட்டுவது அவர்களின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவித்துவிடும். பெற்றோரின் கருத்துக்கு மதிப்பு கொடுக்காமல் பிடிவாதம் கொண்டவர்களாக மாறுவதற்கு வித்திடக்கூடும்.

    பெற்றோர் உச்சரிக்கும் எந்த வார்த்தையும் குழந்தைகளின் மனதை காயப்படுத்தும்படி அமைந்துவிடக்கூடாது. அவர்கள் செய்யும் தவறுகள் எதுவானாலும் அவர்களிடமே நேருக்கு நேர் பேசி அதனை சரி செய்வதற்கு முன்வர வேண்டும். அவ்வாறு அல்லாமல் கடுமையாக திட்டுவது மன ரீதியாக குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பெற்றோர் என்ன செய்தாலும் தம்மை கண்டிப்பார்கள் என்ற எண்ணம் உருவாகி, வீண் பிடிவாதம் அவர்களுக்குள் எழ வழிவகுத்துவிடும்.

    அதற்கு இடம் கொடுக்காமல் சிறு வயதிலேயே அவர்கள் செய்யும் தவறுகளை மென்மையான அணுகுமுறையுடன் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்வதற்கு வழிகாட்டினால் எதையும் சுமூகமாக எதிர்கொள்ளும் பக்குவம் கொண்ட பிள்ளைகளாக வளர்வார்கள். அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் அது நலம் சேர்க்கும்.

    தன் நண்பர்களோ, உறவுகளோ தவறு செய்திருந்தாலும் அதனை அவர்கள் மனம் புண்படாதபடி திருத்திக்கொள்வதற்கு ஆலோசனை தரும் இடத்தில் இருப்பார்கள்.


    தக்க சமயத்தில் அறிவுரை வழங்காமல் இருத்தல்

    எந்தவொரு காரியத்தை குழந்தைகள் செய்வதாக இருந்தாலும் அவர்களுக்கு தக்க அறிவுரை கூற வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. அந்த அறிவுரை அவர்கள் தொடங்கும் காரியத்தை சிறப்பாக முடிப்பதற்கு வழிகாட்ட வேண்டும்.

    திட்டமிடுதல், இலக்கு நிர்ணயித்தல், எதிர்கொள்ளும் இடையூறுகளை சமாளித்தல் என எல்லா நிலையிலும் பிள்ளைகளுக்கு பின்புலமாக இருந்து செயல்பட வேண்டும். அப்படி செய்யாமல் அவர்களின் செயல்பாடுகளை குறை சொல்வது, 'நீ எது செய்தாலும் அது சிறப்பாக முடியாது' என்று மனம் நோகும்படி பேசுவது பெற்றோர் மீது தேவையற்ற அதிருப்தியை ஏற்படுத்தும்.

    நம் உணர்வுகளை பெற்றோர் மதிப்பதில்லையே என்ற ஆதங்கம் பிள்ளைகளை பிடிவாத குணம் கொண்டவராக மாற்றக்கூடும்.


    அடிக்கடி தொந்தரவு செய்தல்

    பெற்றோர் ஏதேனும் ஒரு வேலையை பிள்ளைகளிடம் ஒப்படைத்தால் அதனை அவர்கள் நிறைவேற்றி கொடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும். அந்த வேலை பற்றிய செயல்பாடுகளில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்களா? தொடர்ந்து ஆர்வமாக வேலையை தொடர்கிறார்களா? என்று கண்காணிக்கலாம்.

    ஆனால் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை மீது குறை சொல்லிக்கொண்டே இருப்பது, அடிக்கடி திருத்தம் சொல்லிக்கொண்டே இருப்பது, 'இப்படி செய்தால்தான் சரியாக இருக்கும்' என்று கருத்து கூறுவது, வேலையில் சிறு தவறு செய்தாலும் கண்டிப்பது போன்ற செயல்பாடுகள் பிள்ளைகளிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தும்.

    அந்த வேலை மீதான ஆர்வத்தை குறைக்கக்கூடும். எப்போதும் நம்மை குறைசொல்வதுதான் பெற்றோரின் மன நிலையாக இருக்கிறது என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிடுவார்கள்.

    அடுத்து பெற்றோர் சொல்லும் வேலையை பிடிவாதமாக மறுக்கும் மன நிலைக்கு ஆளாகக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல் பிள்ளைகளை அரவணைத்து செல்ல வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.

    நன்றி சொல்லாமல் இருத்தல்

    பிறர் நமக்கு செய்யும் உதவிகளுக்கு உடனடியாக நன்றி தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்து கொடுக்கும் வேலைக்கு நன்றி சொல்வதற்கு பெற்றோர் முன்வர வேண்டும்.

    வயதில் சிறியவர்தானே நாம் எதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பெற்றோரிடத்தில் வெளிப்படக்கூடாது. நன்றி சொல்வதற்கு வயது பொருட்டல்ல.

    செய்யும் வேலை, உதவியின் தன்மைக்கேற்ப நன்றி சொல்ல முன் வர வேண்டும். இந்த பழக்கத்தை குழந்தைகள் சிறு வயதிலேயே கற்றுக்கொள்வதற்கு பெற்றோரே 'ரோல் மாடலாக' இருக்க வேண்டும்.

    அதைவிடுத்து 'இதெல்லாம் ஒரு வேலையா? இதை செய்ததற்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டுமா?' என்ற மனப்பான்மை உருவாகுவதற்கு பெற்றோர் காரணமாகிவிடக்கூடாது.


    ஒழுக்கத்தை கடைப்பிடித்தல்

    பெற்றோரின் நடத்தைகள் எப்படி இருக்குமோ அதனை பின்பற்றித்தான் பிள்ளைகள் வளர்வார்கள். அதனால் ஒழுக்கம் விஷயத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

    ஒழுக்கம் வாழ்வின் உயர்வுக்கு இன்றியமையாதது என்பதை சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அதுவே பின்னாளில் அவர்களை ஒழுக்க சீலர்களாக மாற்றும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தைகளின் கவலைகள், உணர்ச்சிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது.
    • காலை உணவை தவிர்ப்பது அல்லது அவசரமாக உண்பது நல்லதல்ல.

    காலை நேர பரபரப்புக்கு மத்தியில் குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவது பெரும்பாலான பெற்றோருக்கு சவாலான விஷயமாகவே இருக்கிறது. அதிலும் வேலைக்குச்செல்லும் பெற்றோர் கடும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இது ஒருபுறமிருக்க காலை வேளையில் குழந்தைகளிடத்தில் கடுமையாக நடந்து கொள்வது மன ரீதியாகவும், கற்றல் ரீதியாகவும், வளர்ச்சி ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு இடம் கொடுக்காமல் குழந்தைகளை எப்படிக் கையாளுவது என்று பார்ப்போம்.

    இன்முகத்துடன் வழி அனுப்புங்கள்

    குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்றடைவதற்கு ஆகும் நேரத்தை கணக்கிட்டு 5 நிமிடங்களுக்கு முன்பாகவே வீட்டில் இருந்து புறப்படும் வழக்கத்தை பெற்றோர் பின்பற்ற வைக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் செல்லும் பெற்றோரும் தாமதம் செய்யக்கூடாது.

    அவசர அவசரமாகப் புறப்பட்டுச் செல்வது, இன்று தாமதமாகி விடும் என்று குழந்தைகளிடம் கடிந்து கொள்வது இருவருக்கும் இடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்தக்கூடும்.

    5 நிமிடங்களுக்கு முன்பாக புறப்படும்போது நிதானமாக வழி அனுப்பி வைக்கலாம். அரவணைப்பு, புன்னகையை வெளிப்படுத்தலாம். குழந்தைகளும் ரிலாக்ஸாக, இன்முகத்துடன் புறப்பட்டுச் செல்வார்கள்.

    சத்தமிடாதீர்கள்

    குழந்தைகள் சிலர் காலையில் தாமதமாகவே கண் விழிப்பார்கள். பள்ளிக்கூடம் செல்லும் நேரம் நெருங்குவதாக பெற்றோர் எச்சரித்த பிறகுதான் எழுந்திருப்பார்கள். அப்போது பெற்றோர் கடுமையான வார்த்தைகளால் வசை பாடி எழுப்புவது, தண்ணீர் ஊற்றுவது, சத்தமாக திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது குழந்தைகளிடத்தில் மன அழுத்தத்திற்கான சூழலை உருவாக்கும். கவலை, வருத்தத்தை ஏற்படுத்தும். அதற்கு மாற்றாக நேரமாகிவிட்டது என்பதை மென்மையான அணுகுமுறையால் சுட்டிக்காட்டுவது, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் எழும் வழக்கத்தை பின்பற்ற வைப்பது சரியான வழிமுறையாக அமையும். எந்த அழுத்தத்துக்கும் ஆளாகாமல் தாமாகவே விழித்தெழும் வழக்கத்தை பின்பற்ற தொடங்கிவிடுவார்கள்.

    நம்பிக்கையான வார்த்தைகளைக் கூறுங்கள்

    குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு வீட்டை விட்டு வெளியேறும்போது திட்டியபடியோ, ஊக்கப்படுத்தாமலோ வழி அனுப்புவது அவர்களது தன்னம்பிக்கையைக் குறைக்கும்.

    'இன்றைய நாள் சிறந்த நாளாக அமையட்டும்'. 'உன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்'. 'நீ பொறுப்புணர்வோடு நடந்து கொள்வாய் என்று நம்புகிறேன்' என்பன போன்ற வார்த்தைகள் அவர்களின் மன நிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    உணர்வுகளை புறக்கணிக்காதீர்கள்

    குழந்தைகளின் கவலைகள், உணர்ச்சிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. காலை வேளையில் கவலை தோய்ந்த முகத்துடனோ, ஏதேனும் மன குழப்பத்துடனோ இருந்தால் அது பற்றி குழந்தைகளிடம் விசாரித்து அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

    அதை விடுத்து அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டால் அன்றைய நாள் முழுவதும் அதன் தாக்கம் எதிரொலிக்கும். மன அழுத்தத்திற்கு ஆளாக்குவதோடு அல்லாமல் கற்றல் திறனையும் பாதிக்கும். காலையில் எழுந்ததும் குழந்தைகளின் மன நிலையைக் கணித்து அவர்களை வழிநடத்துவது நேர்மறை எண்ணங்களை பின் தொடர செய்யும். கவனமுடன் கற்றலைத் தொடரவும் வழிவகுக்கும்.

    விமர்சனம் செய்யாதீர்கள்

    காலை வேளையில் விமர்சனம் செய்வது, புகார் கூறுவது அவர்களை மன ரீதியாக பலவீனப்படுத்திவிடும். அதற்கு பதிலாக நேர்மறையான வார்த்தைகளைப் பேசுவது, நற்சிந்தனைகளைத் தூண்டும். சுயமரியாதை உணர்வுடன் செயல்பட வைக்கும்.

    காலை உணவு அவசியம்

    காலை உணவை தவிர்ப்பது அல்லது அவசரமாக உண்பது நல்லதல்ல. அந்த உணவுதான் நாள் முழுவதும் ஆற்றலையும், அறிவுத்திறனையும் தூண்டிவிடக்கூடும்.

    வேலை செய்ய ஊக்கப்படுத்துங்கள்

    ஒரே நேரத்தில் பல வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தாதீர்கள். ஷூ பாலீஷ் செய்வது, பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது, மதிய உணவை பேக்கில் எடுத்து வைப்பது உள்ளிட்ட சின்ன சின்ன வேலைகளைக் குழந்தைகளே செய்து கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.

    இந்த வேலைகளை செய்வதற்கு போதிய அவகாசமும் கொடுங்கள். அதனை தினமும் தவறாமல் பின்பற்ற வையுங்கள். நாளடைவில் அந்த வழக்கத்தை தவறாமல் பின்பற்ற தொடங்கிவிடுவார்கள்.

    அத்தியாவசிய பொருட்களை ஞாபகப்படுத்துங்கள்

    குழந்தைகள் பலர் பள்ளிக்கூடம் புறப்படுவதற்கு முன்புதான் அன்றைய நாளின் பாடவேளை அட்டவணைப்படி நோட்டு, புத்தகங்களை அவசர அவசரமாக எடுத்து பேக்கில் வைப்பார்கள்.

    போதிய நேரமில்லாமலும், அவசரத்திலும் சில பொருட்களை மறந்து வீட்டிலேயே வைத்துவிடுவார்கள். அல்லது பள்ளிக்கூடம் செல்லும்போதுதான் அந்த பொருட்களை தேடிக்கொண்டிருப்பார்கள். அது தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தும். அதைப்பார்க்கும்போது பெற்றோர் டென்ஷனாகி குழந்தைகளைக் கடிந்து கொள்வார்கள்.

    கடைசி நேரத்தில் ஏற்படும் இத்தகைய சச்சரவுகளைத் தவிர்க்க முந்தைய நாள் இரவே குழந்தைகளிடத்தில் ஞாபகப்படுத்துங்கள். என்னென்ன பொருட்கள் அத்தியாவசிய தேவை என்பதை முந்தைய நாள் இரவே எடுத்து வைத்துவிட்டால் மறுநாள் டென்ஷன் இன்றி பள்ளிக்கூடம் புறப்பட்டு செல்லலாம்.

    ×