என் மலர்

    பொது மருத்துவம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கால் மூட்டுகளை சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் வீக்கம் ஏற்படலாம்.
    • வயதாகும் போது கீல் வாதத்தின் பாதிப்பு அதிகரிக்கிறது.

    பொதுவாக கால் மூட்டுகளில் ஏற்படுகின்ற காயங்களால் வீக்கம் அல்லது வலி மூட்டுகளில் ஏற்படுகிறது. இந்த காயங்கள் மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள், தசைநார்கள், எலும்புகள் அல்லது தசைகளுக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    ஆனால் பெரும்பாலும் எலும்பு குருத்தெலும்பு தேய்வால் இரு கால் மூட்டுகளில் வரும் கீல் வாதம் தான் அதிகம். இது வயதானவர்களையும், மகளிரையும் மிக அதிகமாக பாதிப்படையச் செய்கிறது.


    காரணங்கள்

    கீல் வாதத்தில் கால் மூட்டுகளில் உள்ள எலும்புகளின் முனைகளை, குஷன் போன்று பாதுகாக்கும் குருத்தெலும்பு படிப்படியாக பலகீனமடைந்து, இறுதியாக, குருத்தெலும்பு முற்றிலும் தேய்ந்துவிடுகிறது.

    மூட்டுகளிடையே உள்ள சினோவியல் திரவமும் அளவில் குறைகிறது. இதனால் கால் முட்டி எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி, கடுமையான கால்வலி, வீக்கம், நடக்கும் போது சொடக்கு விடுவது போன்ற சத்தம் இவற்றை ஏற்படுத்துகிறது.

    வயதாகும் போது கீல் வாதத்தின் பாதிப்பு அதிகரிக்கிறது. பெண்களுக்கு கீல் வாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஆண்களை விட அதிகம்.

    மாதவிடாய் முடிந்த மகளிருக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாட்டால் எலும்பு அடர்த்தி குறைவது இதற்கு முக்கிய காரணமாகும். விளையாடும்போது அல்லது விபத்தினால் ஏற்படும் காயங்கள், கீல்வாதத்தின் அபாயத்தை அதிகரிக்கலாம்.


    அறிகுறிகள்

    நடக்கும் போது, தரையில் உட்காரும் போது, நிற்கும் போது, பாதிக்கப்பட்ட மூட்டுகளில் வலி அதிகமாக உணரப்படும். காலையில் எழுந்தவுடன் கால் மூட்டுகள் விறைப்பு நிலையில் இருக்கும். இதனால் நடப்பதற்கு சிறிது நேரம் சிரமமாக இருக்கும்.

    கால் மூட்டுகளை சுற்றியுள்ள மென்மையான திசுக்களில் வீக்கம் ஏற்படலாம். சில வளர்சிதை மாற்ற நோய்கள், நீரிழிவு மற்றும் உடலில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் நிலை (ஹீமோக்ரோமாடோசிஸ்) ஆகியவை கீல் வாத பிரச்சனையை அதிகரிக்கும்.


    தவிர்க்க வேண்டியவை

    உடல் பருமன் இருந்தால் அதை குறைக்க வேண்டும். மென்மையான உடற்பயிற்சிகள் பயன் தரும். எலும்புகளின் அடர்த்திக்கு கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சைவ-அசைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

    தினமும் அதிகாலை வெயில் அல்லது மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடக்கலாம். கால்மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தவும், நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும் மற்றும் வலியைக் குறைக்கவும் பிசியோ தெரபி சிகிச்சை உதவுகிறது. குளிப்பதற்கு வெந்நீர் சிறந்தது. புளிப்பு சுவை உள்ள உணவுகளை அளவோடு எடுக்க வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்.
    • எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்கவும்.

    கொழுப்பு கட்டிகள் 'லிபோமா' என்று அழைக்கப்படுகிறது. இது தோலுக்கு கீழ் வளரும் கொழுப்பு திசுக்கள் கொண்ட கட்டியாகும். இது பொதுவாக தீங்கற்ற, வலியற்ற, மென்மையான அமைப்புள்ள கொழுப்பு கட்டியாகும். இது பெரும்பாலும் கழுத்து, முதுகு, வயிறு, தொடை, நெற்றி, தோள் மற்றும் கைகளில் ஏற்படுகிறது.

    உலக அளவில் ஆயிரம் பேரில் ஒருவருக்கு லிபோமா பாதிப்புள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவை பொதுவாக 40 முதல் 60 வயதுக்கு உட்பட்ட நபர்களை அதிகம் பாதிக்கிறது.


    லிபோமா ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும். இது சிக்கலை ஏற்படுத்தாது என்றாலும் அவை வளரும்போது அருகில் உள்ள ரத்த நாளங்கள், மூட்டு மற்றும் நரம்புகளை ஊடுருவி பாதிப்பை உண்டாக்கலாம்.

    லிபோமா ஏற்பட உடல் பருமன், சர்க்கரை நோய், அதிக ரத்த கொலஸ்ட்ரால் அளவு, கல்லீரல் நோய், மரபணு காரணங்கள், கார்ட்னர் சிண்ட்ரோம், டெர்கம் நோய், மதுப்பழக்கம் போன்றவை முக்கிய காரணமாகும்.

    இதற்கு பெரும்பாலும் சிகிச்சை தேவைப்படுவதில்லை. இதனை மாத்திரைகளால் குணப்படுத்த முடியாது. லிபோடிசால்வ் என்றும் அழைக்கப்படும் இன்ஜெக்சன் லிபோலிசிஸ், லிபோசக்சன், அறுவை சிகிச்சை ஆகியவை இதற்குள்ள தற்போதைய சிகிச்சை முறைகளாகும்.


    மேலும், பெரிய அளவு அல்லது விரைவாக வளர்ச்சியடையும் லிபோமா, லிபோமாவில் தொற்று ஏற்பட்டு நிறம் சிகப்பாக மாறுதல் அல்லது கடினமாக மாறுதல், வலி ஏற்படுத்துதல் அல்லது அன்றாட நடைமுறை வாழ்க்கையில் குறுக்கிடுதல், அழகியல் காரணங்கள், புற்றுநோய் மாற்றங்கள் ஏற்படுவது (லிபோசார்கோமா) போன்ற நிலைகளில் இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

    லிபோமாவை தடுக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவுகள் (சால்மன், கானாங்கெளுத்தி அல்லது சூரை மீன்), நார்ச்சத்து, புரதம் அதிகம் உள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    தினசரி உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். கொழுப்பு நிறைந்த மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்க்கவும். மதுப்பழக்கம் கூடாது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தசை ஆரோக்கியத்துக்கும் புரதம் அவசியம்.
    • என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

    திசுக்களை உருவாக்குவதற்கும், சரிசெய்வதற்கும் மற்றும் தசை ஆரோக்கியத்துக்கும் புரதம் அவசியம். இது என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. பல்வேறு உடல் செயல்பாடுகளில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இது தோல், முடி மற்றும் நகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுவதோடு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பயன்படுகிறது. அதிக அளவு புரதங்கள் நிறைந்த பழங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்...


    அவகேடோ:

    ஆரோக்கியமான கொழுப்புகளின் ஆதாரமாக அவகேடோ அறியப்படுகிறது. ஒரு கப் அவகேடோ 3 கிராம் அளவிலான புரதத்தை கொண்டுள்ளது. மேலும் நார்ச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் சி, ஈ, கே நிறைந்து காணப்படுகிறது.


    கொய்யாப்பழம்:

    வைட்டமின் சி நிறைந்த இந்தப் பழம், ஒரு கோப்பைக்கு 4 கிராம் அளவிலான புரதத்தை வழங்குகிறது.


    கிவி:

    இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது ஒரு கோப்பைக்கு 2 கிராம் அளவிலான புரதத்தை வழங்குகிறது.


    மாதுளை:

    வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படும் மாதுளை, 100 கிராமுக்கு 1.7 கிராம் புரதத்தை வழங்குகிறது.


    சர்க்கரை பாதாமி:

    ஆப்ரிகாட்ஸ் என அறியப்படும் இந்தப் பழத்தில் வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது. 100 கிராம் அளவிலான இந்த பழம் 1.4 கிராம் புரதத்தை வழங்குகிறது.


    கிரேப் புரூட்:

    ஆரஞ்சு பழம் போன்று தோற்றமளிக்கும் இதில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து உள்ளது. ஒரு கோப்பைக்கு 1.3 கிராம் புரதத்தை தருகிறது.


    குழிப்பேரி:

    பீச் என அழைக்கப்படும் இந்த பழத்தில் 1 கிராம் அளவிலான புரதம் காணப்படுகிறது.


    வாழைப்பழம்:

    இதில் ஒவ்வொரு கோப்பையிலும் 1.6 கிராம் அளவிலான புரதம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் வைட்டமின் ஏ, பி6, சி, மெக்னீசியம், நார்ச்சத்துகள் உள்ளன.


    செர்ரி பழம்:

    ஒரு கப் செர்ரி பழத்தில் 1.6 கிராம் அளவிலான புரதம் காணப்படுகிறது.


    பலாப்பழம்:

    இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, ஏ நிறைந்துள்ளது. மேலும் ஒரு கோப்பைக்கு 3 கிராம் அளவிலான புரதம் உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மூத்திரப்பைக்கும் ஆணுறுப்புக்கும் இடையில் அமைந்துள்ளது.
    • ப்ராஸ்டேட் சுரப்பி சிலபேருக்கு வீங்கி பெரிதாவதுண்டு.

    ஆண்களுக்கு மட்டுமே உள்ள கிளாண்ட் (சுரப்பி) 'ப்ராஸ்டேட்' ஆகும். இதை தமிழில் 'சுக்கிலச் சுரப்பி' என்றும் அழைப்பதுண்டு. ஒரு பாதாம் கொட்டையின் அளவுள்ள இந்தச் சுரப்பி, ஆண்களின் அடிவயிற்றில் மூத்திரப்பைக்கும் ஆணுறுப்புக்கும் இடையில் அமைந்துள்ளது.

    எப்படி வயதானால் தலை முடி நரைக்க ஆரம்பிக்கிறதோ, அதுபோல ஆண்களுக்கு வயது ஆக ஆக இந்த ப்ராஸ்டேட் சுரப்பி சிலபேருக்கு வீங்கி பெரிதாவதுண்டு.


    இளம் வயதில் சிலபேருக்கு இந்த சுரப்பி வீங்கி வலியை உண்டு பண்ணும். இது பெரும்பாலும் சிறுநீர்ப்பை நோய் தொற்றால் ஏற்படுவதாகும். தகுந்த சிகிச்சை எடுத்தால் சரியாகிவிடும்.

    நடுத்தர வயதுக்காரர்கள் சிலபேருக்கு சுரப்பி சற்று பெரிதாகி வீங்குவதுண்டு. இதற்கும் தகுந்த சிகிச்சை எடுத்தால் குணமாகிவிடும்.

    வயதான காலத்தில் தான் ப்ராஸ்டேட் சுரப்பி வீங்கினால் பிரச்சினைகள் அதிகமாகி, அதிக தொந்தரவைக் கொடுப்பதுண்டு. உடனே கவனித்து தகுந்த சிகிச்சை எடுக்காவிட்டால் சில சமயங்களில் சிலபேருக்கு புற்றுநோயில் கூட கொண்டுபோய் விடுவதுண்டு.

    உங்களுக்கு ப்ராஸ்டேட் இருக்கிறதா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது? முதலில் சிறுநீர் கழிப்பதில் தான் பிரச்சினையே ஆரம்பிக்கும். சிறுநீர் வெளியே வர சில நிமிடங்கள் ஆகும். அடிக்கடி பல முறை சிறுநீர் கழிக்க வேண்டிய பிரச்சினை வரும்.


    சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்தவுடனே டாய்லெட்டுக்கு போவதற்குள்ளாகவே சில நொடிகளில் சிறுநீர் வெளியே வந்து ஆடையெல்லாம் நனைந்துவிடும். சிறுநீர் கழித்துவிட்டு வந்தபின்பும் மறுபடியும் போக வேண்டும் என்ற உணர்வு தோன்றும்.

    சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் ஆணுறுப்பில் வலி ஏற்படுதல், சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல், சிறுநீர் கழித்துவிட்டு வந்த பின்னரும் அடிவயிற்றில் இன்னும் நிறைய சிறுநீர் இருக்கிறது போன்ற உணர்வு, தாம்பத்ய உறவில் திருப்தியின்மை, விரைவில் விந்து வெளியேறுதல், விறைப்பு குறைபாடு போன்ற பிரச்சினைகள் காணப்படும்.


    மேற்கூறியவைகளில் நிறைய பிரச்சனை யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவச் சிகிச்சையா அல்லது அறுவை சிகிச்சையா என்பதை யூராலஜிஸ்ட் நிபுணர் ஆலோசனையின்படி செய்வது சிறந்தது.

    நன்கு காயவைத்த பூசணி விதைகள் சுமார் 30 தினமும் சாப்பிட்டு வந்தால் ப்ராஸ்டேட் பிரச்சினை ஓரளவு குறையும் என்று சிலர் சொல்வதுண்டு.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமநிலை மாறும்போது, இளநரை பிரச்சனைகள் தலை தூக்கும்.
    • வைட்டமின்களைப் போல், உணவில் உள்ள உணவுச் சத்துகளை ஆற்றலாக மாற்றித் தருவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

    தலைக்கு அழகு சேர்ப்பது முடிதான். அந்த முடி கருகருவென இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லைதான். இந்த எண்ணம் நிறைவேற வேண்டுமானால் நம் உடலில் வைட்டமின் பி-5 சரியான அளவில் இருக்க வேண்டும். இதன் சமநிலை மாறும்போது, இளநரை பிரச்சனைகள் தலை தூக்கும்.

    'வைட்டமின் பி5'-யின் மற்றொரு பெயர், பென்டோதெனிக் அமிலம். இது எல்லா இயற்கை உணவுகளிலும் நிறைந்துள்ளது. அரிசி, கோதுமை, பயறுகள், பருப்புகள், எண்ணெய் வித்துகள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, பால், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பீன்ஸ், தக்காளி, சோயா பீன்ஸ், நிலக்கடலை, பட்டாணி, பரங்கிக்காய் மற்றும் பச்சைநிறக் காய்கறிகளில் இது அதிகமாக உள்ளது. இவை தவிர கைக்குத்தல் அரிசி, தீட்டப்படாத கோதுமை, கீரைகள், காளான், கேரட், காலி பிளவர், தக்காளி, உருளைக்கிழங்கு, ஓட்ஸ், பேரீச்சை, ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றிலும், ஆட்டு இறைச்சி, ஈரல், முட்டை, மீன் முதலிய அசைவ உணவுகளிலும் அதிகமுள்ளது.



    இது செய்யும் அடிப்படை வேலை, நமது இயல்பான உடல் வளர்ச்சிக்குத் துணைபுரிவது. மற்ற வைட்டமின்களைப் போல், உணவில் உள்ள உணவுச் சத்துகளை ஆற்றலாக மாற்றித் தருவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. பென்டோதெனிக் அமிலம் கால்சியத்துடன் இணைந்து 'கால்சியம் பென்டோதினேட்' எனும் வேதிப்பொருளாக மாறிவிடும். இது முடியின் வளர்ச்சியைத் தூண்டியும் முடியின் நிறத்துக்குத் தேவையான நிறமிகளைத் தந்தும் முடி கருமையாக வளர்வதற்கு உதவுகிறது. இதனால், இளமையிலேயே தலைமுடி நரைப்பது தடுக்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேரிக்காயானது 100 கிராமுக்கு 56 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது.
    • பேரிக்காய் பழம் அதிகமான அளவில் நீரால் ஆனது.

    பேரிக்காய் ஒரு பருவ மழைக்கால பழமாகும். இது பொட்டாசியம், பெக்டின் மற்றும் டானின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மேலும் யூரிக் அமிலத்தை கரைத்து அதன் மூலம் வாத நோய்களை குணப்படுத்துகிறது. அதில் இருக்கும் மற்ற சத்து விவரங்களையும் தெரிந்து கொள்வோம்...


    நார்ச்சத்து நிறைந்தது

    அனைத்து ஊட்டச்சத்துக்களும் தினமும் நமக்கு குறிப்பிட்ட அளவில் தேவைப்படுகிறது. ஒரு ஊட்டச்சத்து நிறுவனமானது பேரிக்காய் குறித்து கூறும்போது ஒரு நடுத்தர பேரிக்காயானது ஆறு கிராம் நார்ச்சத்தை கொண்டுள்ளதாகவும், பெண்களின் தினசரி தேவையான நார்ச்சத்து அளவில் 24 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது எனவும் கூறுகிறது. நார்ச்சத்து நமது வயிறை முழுமையாக்குகிறது. பசி எடுப்பதும் குறைகிறது.

    குறைந்த கலோரி

    உடல் எடையை குறைப்பதற்கு முக்கிய ஆதாரமாக கலோரிகள் உள்ளன. நமது உடலில் கலோரிகளை குறைப்பதன் மூலம் நம்மால் உடல் எடையையும் குறைக்க முடியும். எனவே நாம் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். பேரிக்காயானது 100 கிராமுக்கு 56 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. எனவே உடல் எடையை குறைப்பதில் இது நன்மை பயக்கிறது.


    அதிக நீர்ச்சத்து கொண்டது

    பேரிக்காய் பழம் அதிகமான அளவில் நீரால் ஆனது. கிட்டத்தட்ட இது 84 சதவீதம் நீர் உள்ளது. அதிகமான அளவில் நீர்ச்சத்தை கொண்டிருந்தாலும் கூட இது குறைவான அளவில் கலோரிகளை உள்ளடக்கியது. எனவே எடை இழப்பிற்கு மட்டுமின்றி உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளவும் இது உதவுகிறது.

    செரிமானத்திற்கு உதவுகிறது

    பேரிக்காய் நமது செரிமான ஆரோக்கியத்திற்கும், மலச்சிக்கலை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இதில் அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்திற்கும் எடை இழப்பிற்கும் வித்திடும். ஆரோக்கியமான குடல் மற்றும் நல்ல செரிமான அமைப்பு இவை இரண்டுமே எடை இழப்பிற்கு உதவும் காரணிகளாக உள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உறைந்த உணவுகள், மூளை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • கீரைகளில் வைட்டமின் கே மற்றும் ஃபோலேட் நிரம்பியுள்ளது.

    சில உறைந்த உணவுகள், மூளை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? உறைந்த உணவுகள் எவ்வாறு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சில உறைந்த உணவுகள், மூளை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    உறைந்த உணவுகள் சத்தானவை, சில சமயங்களில் அவற்றின் புதிய சகாக்களை விட சிறந்தவை. ஏனென்றால், இவை ஊட்டச்சத்துக்களை பூட்டுகிறது. மூளை ஆரோக்கியத்திற்கான உறைந்த உணவுகள் என்னவென்று இங்கே காண்போம்.


    ஸ்ட்ராபெர்ரிகள்

    உறைந்த ஸ்ட்ராபெர்ரிகள் அல்லது எந்த வகையான பெர்ரிகளும் உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது. அவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள், குறிப்பாக அந்தோசயினின்கள் ஆகியவற்றில் நிறைந்துள்ளன. அவை மேம்பட்ட நினைவகம் மற்றும் கவனத்துடன் தொடர்புடையவை.

    பெர்ரிகளை வழக்கமாக உட்கொள்வது அறிவாற்றல் முதுமையை 2.5 ஆண்டுகள் வரை குறைக்கலாம். இதேபோல், காட்டு அவுரிநெல்லிகள் மூளை ஆரோக்கியத்திற்கும், செயலாக்க வேகத்தை மேம்படுத்துவதற்கும், அறிவாற்றல் சோர்வைக் குறைப்பதற்கும் நன்மை பயக்கும்.


    கீரைகள்

    இலை கீரைகளில் வைட்டமின் கே மற்றும் ஃபோலேட் நிரம்பியுள்ளது. வைட்டமின் கே நினைவகத்தை ஆதரிக்கிறது. மேலும் ஃபோலேட் குறைந்த டிமென்ஷியா அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, உறைந்த கீரைகளை பயன்படுத்தலாம்.

    பசலைக்கீரை கேல் சத்துக்கள் நிறைந்தவை. ஒரு கப் நறுக்கிய உறைந்த கீரை, வைட்டமின் கே-க்கான தினசரி மதிப்பை கிட்டத்தட்ட ஐந்து மடங்குக்கு மேல் உங்களுக்குக் கொடுக்கும்.


    சிலுவை காய்கறிகள்

    உறைந்த சிலுவை காய்கறிகளான ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் பிரஸ்ஸல்ஸ் முளைகள் பெரும்பாலும் மலிவு விலையில் கிடைக்கும். இந்த காய்கறிகள் அறிவாற்றல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை.

    வைட்டமின் கே, பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் சல்போராபேன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள இந்த காய்கறிகள் மூளை செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாக்கின்றன, இது வயதானதை தாமதப்படுத்துகிறது.


    கொழுப்பு நிறைந்த மீன்கள்

    சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் ஹெர்ரிங் போன்ற மீன்கள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களாகும், அவை மூளையின் செல் அமைப்பு, திரவத்தன்மை மற்றும் ரத்த ஓட்டத்திற்கு முக்கியமானவை.

    இந்த உறைந்த கொழுப்பு மீன்கள் புதிய மீன்களின் விலையில் ஒரு பகுதியிலேயே வருகின்றன. இவற்றை இணைத்துக்கொள்வது உங்கள் அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய காலகட்டத்தில் மாத்திரைகள் சாப்பிடாதவர்களே இல்லை.
    • மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தண்ணீர்தான் சிறந்த வழி.

    இன்றைய காலகட்டத்தில் மாத்திரைகள் சாப்பிடாதவர்களே இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. சிறிய தலைவலி முதல் பெரிய நோய்கள் வரை, கிட்டத்தட்ட அனைவரும் காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் ஒரு கைப்பிடி மாத்திரைகளை எடுத்துக்கொள்றார்கள்.

    மற்றவர்கள் சிறிய நோய்களுக்குக் கூட தேவையில்லாமல் மாத்திரைகளை உட்கொண்டு, தேவையற்ற நோயை ஏற்படுத்துகிறார்கள். மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியவை மற்றும் எடுத்துக்கொள்ளக்கூடாதவை சில உள்ளன. எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.


    தவிர்க்க வேண்டியவை:

    மது:

    மது மாத்திரைகளின் செயல்திறனில் தலையிடுகிறது மற்றும் பக்க விளைவுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. சில சந்தர்ப்பங்களில், அது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம். எனவே மதுவை தவிர்ப்பது நல்லது. இது பல சிக்கல்களையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.


    திராட்சைப்பழ ஜூஸ்:

    திராட்சைப்பழச்சாற்றில் உள்ள சில பொருட்கள் சில வகையான மாத்திரைகளின் செயல்திறனைப் பாதித்து, அவற்றை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பயனுள்ளதாக மாற்றும். உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.


    பால்:

    பால் சில வகையான மாத்திரைகளின் உறிஞ்சுதலைக் குறைத்து, அவற்றின் செயல்திறனைக் குறைக்கும். குறிப்பாக கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், சில வகையான மாத்திரைகளின் உறிஞ்சுதலைக் குறைக்கும்.


    மற்ற மாத்திரைகள்:

    டாக்டர் மாத்திரைகளை பரிந்துரைக்கும் போது, அவர்கள் ஏற்கனவே எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளைப் பற்றி டாக்டரிடம் சொல்வது மிகவும் முக்கியம், ஏனெனில் சில சேர்க்கைகள் ஆபத்தானவை. மருந்துகளை எடுத்துக்கொள்வது குறித்து டாக்டரிடம் நிச்சயமாக ஆலோசனை கேட்க வேண்டும்.


    எதை எடுத்துக்கொள்ளலாம்:

    தண்ணீர்:

    மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தண்ணீர்தான் சிறந்த வழி. இது மாத்திரைகளை விழுங்குவதை எளிதாக்கி வயிற்றில் கரைய உதவுகிறது.


    உணவு:

    டாக்டர் உணவுடன் சில மாத்திரைகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார். இது வயிற்று எரிச்சலைத் தடுக்க உதவுகிறது.

    பானங்கள்:

    சில வகையான மாத்திரைகளை சாறு அல்லது பாலுடன் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், மருத்துவர்கள் மற்றும் மருந்தாளுநர்களுடன் பேசிய பிறகு இது குறித்து முடிவு செய்யப்பட வேண்டும்.

    சில மாத்திரைகளை உணவுடன் அல்லது உணவுக்குப் பிறகு உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது வயிற்று எரிச்சலைத் தடுக்கவும், மாத்திரையை உறிஞ்சுவதை மேம்படுத்தவும் உதவுகிறது.

    சில மாத்திரைகளை உணவுக்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பின்னரோ எடுக்க வேண்டும். இது மாத்திரையின் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சில தவறான பழக்கங்கள் ‘ஸ்லோ பாய்சன்’ எனப்படும்.
    • தினமும் மன அழுத்த சூழலிலேயே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பது நல்லதல்ல.

    அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் சில தவறான பழக்கங்கள் 'ஸ்லோ பாய்சன்' எனப்படும் மெதுவாக கொல்லும் விஷம் போல செயல்பட்டு படிப்படியாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய பழக்க வழக்கங்கள் பற்றியும், அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் பற்றியும் பார்ப்போம்.


    மன அழுத்தம்

    எப்போதாவது மன அழுத்தத்திற்கு ஆளாவது பிரச்சனையில்லை. ஆனால் தினமும் மன அழுத்த சூழலிலேயே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பது நல்லதல்ல. அது நாள்பட்ட மன அழுத்தமாக மாறினால் ஆபத்தானது. ஏனெனில் நாள்பட்ட மன அழுத்தம் 'சைலண்ட் கில்லர்' எனப்படும் அமைதியான கொலையாளியோடு தொடர்புடையது.



    உடலையும், மனதையும் படிப்படியாக சோர்வடையச் செய்துவிடும். நாளடைவில் மன அழுத்தம் நிரந்தரமாக குடிகொண்டுவிட்டால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவது உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.


    நலம் விரும்பிகள் இல்லாத நிலை

    நம் நலனில் அக்கறை கொள்பவர்களும் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். எதிர்மறையான விஷயங்கள், கருத்துக்களை பேசுபவர்களுடன் பழகுவதோ, அவர்களுடைய ஆலோசனையை கேட்டறிவதோ நம்மை பலவீனமாக்கும்.

    குறிப்பாக உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுபவர்கள், உங்கள் சாதனைகளை அங்கீகரிக்க மனமில்லாதவர்கள், தேவையற்ற எண்ணங்களை உங்களிடத்தில் விதைப்பவர்கள், எதிர்மறை எண்ணங்களை கொண்டிருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பது மன ஆரோக்கியத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.


    துரித உணவு

    துரித உணவுகள் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். ஆனால் தொடர்ந்து அதனை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இந்த உணவுகளில் பெரும்பாலும் கொழுப்புகள், சோடியம், சர்க்கரை அதிகமாக இருக்கும். அவை மெல்ல கொல்லும் விஷமாக மாறி உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய்க்கு வித்திடும்.


    வேலையில் நாட்டமின்மை

    எந்த வேலையையும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். வேலையை வெறுப்பது, விருப்பமின்றி செய்வது உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும் கேடு விளைவிக்கும். அதிருப்தி, தலைவலி, தூக்கமின்மை, செரிமான கோளாறு உள்ளிட்ட அறிகுறிகள் வெளிப்படும். நாளடைவில் மெதுவாக கொல்லும் விஷமாக மாறும்.


    உணர்ச்சிகளை அடக்குதல்

    நம் நலனில் அக்கறை கொண்டவர்கள் திடீரென்று எதிர்மறையாக நடந்து கொள்ளும்போது கடும் அதிருப்தி உண்டாகும். அந்த சமயத்தில் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்வது மோதலை தவிர்ப்பதற்கான வழிமுறையாக தோன்றலாம்.

    ஆனால் தொடர்ந்து உணர்ச்சிகளை அடக்குவது, மனதில் பதிந்திருக்கும் ஆழ் மனக்கவலைகளை வெளிக்காட்டாமல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். காலப்போக்கில் உடலையும், மனதையும் பாதிக்கும் நோயாக மாறிவிடும். எனவே உணர்வுகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவது முக்கியம்.


    தொடர்ந்து கவலையாக இருத்தல்

    தொடர்ந்து கவலையாகவோ, பதற்றமாக இருப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும். தொடர்ந்து கவலைப்படுவது மன அழுத்தத்தை தூண்டிவிடும். அதனால் கார்டிசோல் ஹார்மோனின் அளவு உயர்வதற்கு வழிவகுக்கும்.

    நாளடைவில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பு மெல்ல கொல்லும் விஷமாக மாறி உடல் எடை அதிகரிப்புக்கும், நோய் எதிர்ப்பு தன்மை பலவீனமடைவதற்கும், ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கும் காரணமாகிவிடும்.


    சோர்வாக காட்சி அளித்தல்

    உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, தொடர்ந்து சோர்வுக்கு ஆளாகுவது மனச்சோர்வு, நாள்பட்ட சோர்வு மற்றும் இதய பிரச்சனைகள் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    இதற்கு இடம் கொடுக்காமல் உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். சின்ன விஷயமாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்து முடித்தால் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ள வேண்டும். அந்த மகிழ்ச்சியான மன நிலையை உங்கள் நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    காலை உணவைத் தவிர்த்தல்

    காலை உணவுதான் அன்றைய நாளின் மிக முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. அதனை தவிர்ப்பது உடல் எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றத்தில் மாறுபாடு, அறிவாற்றல் குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உள்மூல பாதிப்புகளில் வலி பெரியளவில் இருக்காது.
    • வெளிமூல நோயில் வலி அதிகம் இருக்கும்.

    மூலநோய் உள்மூலம், வெளிமூலம் என இரு வகைப்படுகிறது. சித்த மருத்துவத்தில் 21 வகை மூல நோய்கள் பற்றி சித்தர்களால் கூறப்பட்டுள்ளது.


    'அனில பித்த தொந்த மலாது மூலம் வராது' என்று சித்தர் தேரையரின் பாடல் கூறுகின்றது. அதிகரித்த நாள்பட்ட அபான வாயுவின் அழுத்தம், உடல் சூடு, நாள்பட்ட மலச்சிக்கல், உடல் பருமன், பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் வயிற்றின் அழுத்தம், நாள்பட்ட கல்லீரல் நோய்கள், ஆசனவாய் அருகிலுள்ள தசைகளில் ஏற்படும் பலகீனம், தண்ணீர் குறைவாக குடிப்பது, எப்போதும் இருக்கையில் அமர்ந்து இருப்பது போன்ற காரணங்களினால் மூலநோய் ஏற்படுகின்றது.


    மூல நோய் 4 நிலைகள் கொண்டிருக்கும். உள்மூல பாதிப்புகளில் வலி பெரியளவில் இருக்காது. மலம் முக்கி வெளியே போகும் போது ரத்தம் வடிதல் காணப்படும். ஆனால், வெளிமூல நோயில் வலி இருக்கும். ஆசனவாயில் இருந்து அடிக்கடி ரத்தம் வடிதல், உடல் எடை மெலிதல் போன்றவை ஏற்பட்டால், அவற்றை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது.


    உணவுப்பழக்கம்:

    * துத்திக் கீரையுடன், சின்ன வெங்காயம் சேர்த்து சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு மசியவைத்து உண்ணலாம்.

    * கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி, புளி சேர்த்து குழம்பாக வாரம் இருமுறை பயன்படுத்தி வரலாம்.

    * பிரண்டைத் தண்டை துவையல், சூப்பாக செய்து பயன்படுத்தலாம்.

    * முள்ளங்கிக்காய், வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், அவரை, பீன்ஸ், கீரைகள், கோவைக்காய் போன்ற நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * கிழங்கு வகைகள், காரமான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.


    * உடல்சூடு குறைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    * தினமும் 6-7 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்க வேண்டும்.

    * வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்.

    * கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    * இளநீர், தர்பூசணி சாறு, முலாம் பழச்சாறு, மோர் இவைகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப் பழம் மற்றும் வாழைப்பழம் உண்ண வேண்டும்.

    * காலையில் நடைப்பயிற்சி, ஆசனவாய் தசைகளை உறுதிபடுத்தும் பயிற்சிகள் செய்ய வேண்டும். நேரம் தவறாமல், சரியான முறையில் உணவு உண்ண வேண்டும்.


    வயிற்றில் வாயு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    * சீரகம், கொத்தமல்லி, ஓமம் இவைகளை சிறிதளவு எடுத்து கொதிக்க வைத்த தண்ணீரை காலை, இரவு குடித்து வர வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிநவீன லேசர் முறையிலும் கண்புரையை அகற்றலாம்.
    • அதிநவீன லேசர் முறையிலும் கண்புரையை அகற்றலாம்.

    கண் புரை என்பது கண்களில் உள்ள லென்சில் ஏற்படும் மாற்றத்தால் ஒளியின் ஊடுருவல் தன்மை குறைவதால், விழித்திரை மீது விழும் ஒளியின் அளவு குறையக்கூடிய ஒரு நிலையாகும். இது பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படுகிறது.


    சர்க்கரை நோயாளிகளுக்கு கண் புரை ஏற்படக்கூடிய வாய்ப்பு மற்றவர்களை விட ஐந்து மடங்கு அதிகம். சர்க்கரை நோயாளிகளுக்கு கண் புரை ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணங்களாகும்.

    ரத்த சர்க்கரை அதிகமாகும் போது கண்களில் உள்ள சிறிய ரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய பாதிப்பு. அக்யூஸ் ஹ்யூமரில் உள்ள அதிக அளவு குளுக்கோஸ் லென்ஸ் புரத மூலக்கூறில் கோவலெண்ட் இணைப்பை ஏற்படுத்தி லென்சில் ஒளிபுகாநிலையை உருவாக்குகிறது.

    அக்யூஸ் ஹ்யூமர் என்பது கண்களில் உள்ள திரவ பிளாஸ்மாவின் வகையாகும். இது லென்சுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜனை வழங்குகிறது.

    ரத்த சர்க்கரை அதிகமாகும்போது லென்சில் சேரும் கிளைக்கேஷன் முடிவு பொருட்கள் அதனை வீக்கமடைய செய்து பார்வையை குறைக்கிறது.


    கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை உள்ள நிலையில் லென்சில் உள்ள என்சைம் (நொதி) குளுக்கோஸை சார்பிட்டாலாக மாற்றி கண் புரைக்கு வழி வகுக்கிறது.

    ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது லென்சில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தம், எதிர்வினை ஆக்சிஜன் இனங்கள் மற்றும் ப்ரீரேடிக்கல்ஸ் கண்புரை சீக்கிரம் உருவாகச் செய்கிறது.

    கூடுதலாக உள்ள நீரிழிவு ரெட்டினோபதி மற்றும் மாகுலர் எடிமா போன்றவை கண் புரையின் தாக்கத்தை அதிகரிக்கலாம். உயர் ரத்த சர்க்கரை அளவு லென்சில் உள்ள மென்மையான திரவ சமநிலையை சீர்குலைத்து கண் புரை ஏற்படுவதை துரிதப்படுத்தும்.


    நீரிழிவு நோய் மட்டுமின்றி, உடல் பருமன், புகை பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், நெடுநாள் ஸ்டீராய்டு மருந்து உபயோகித்தல், நேரடி சூரிய வெளிச்சத்தில் அதிக நேரம் பணிபுரிதல் ஆகிய காரணிகளும் இளம் வயதிலேயே கண் புரையை ஏற்படுத்தக்கூடும்.

    இதற்கு தீர்வாக அறுவை சிகிச்சை மூலம் கண்களில் புரை அகற்றப்பட்டு, செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது. அதிநவீன லேசர் முறையிலும் கண்புரையை அகற்றலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடலில் பிடிக்கப்படும் கானாங்கெளுத்தி என்னும் சூரை மீன்கள்தான் மாசிக் கருவாடாக மாற்றப்படுகின்றன.
    • உடலின் வாத, பித்த, கப மாறுபாடுகளை சமன் செய்யவும் உதவுகிறது.

    கருவாடு என்பது குடல் நுண்ணுயிரிகளை மேம்படுத்தும் உணவாக மருத்துவ உலகம் கூறுகிறது. கருவாடுகளில் பல வகை இருந்தாலும், அதில் குறிப்பிடத்தக்கது, மாசி கருவாடு.

    கடலில் பிடிக்கப்படும் கானாங்கெளுத்தி என்னும் சூரை மீன்கள்தான் மாசிக் கருவாடாக மாற்றப்படுகின்றன. பொதுவாக, மற்ற மீன்களை கருவாடு ஆக்க அவற்றை சுத்தம் செய்து உப்பு தடவி வெயிலில் உலர்த்துவது வழக்கம். ஆனால், சூரை மீன்களை கருவாடாக மாற்ற அவற்றை அவித்து காயவைத்து கருவாடாக மாற்றுகின்றனர். இவ்வாறு கருவாடாக மாற்றும்போது அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பளிங்கு போன்ற கண்ணாடி போல மாறி விடுகிறது. கருவாட்டு மணமும் இருக்காது. இது உடல் உறுப்புகள், தசைகளை பலமாக்கும் என்று கூறுகின்றனர்.

    பொதுவாக, திருமணமான ஆண், பெண் இருவருக்கும் மாசி கருவாடு உணவு கொடுப்பது வழக்கமாகும். தற்போது இந்த வழக்கம் மறைந்து வருகிறது. மாசி மீன் கருவாடு உணவை சாப்பிடுவதால் பெண்களுக்கு சினைப்பை, கருப்பை பலப்படும் என்று பாரம்பரிய வைத்தியத்தை பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள். உடலின் வாத, பித்த, கப மாறுபாடுகளை சமன் செய்யவும் உதவுகிறது.

    திருமணமான ஆண்களுக்கு மாசிக்கருவாடு உணவை கொடுப்பதால் இனப்பெருக்க உறுப்புகளை பலப்படுத்தி ஆரோக்கியமான உயிரணுக்கள் உருவாக உதவும் என்றும் கூறப்படுகிறது.

    ×