என் மலர்

    அசாம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அசாம் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
    • மாநில காங்கிரசில் தனக்கு உரிய பொறுப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.

    கவுகாத்தி:

    தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுடன் சேர்த்து அசாமுக்கும் வரும் ஏப்ரலில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, அசாம் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் பூபேன் குமார் போரா அக்கட்சியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், கட்சித் தலைமையால் புறக்கணிக்கப்பட்டதாகவும், மாநில காங்கிரசில் தனக்கு உரிய பொறுப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் அசாம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பூபேன் குமார் போராவுக்காக பா.ஜ.க.வின் கதவுகள் திறந்திருக்கின்றன. பா.ஜ.க.வில் போரா சேர்ந்தால் உடனடியாக அவருக்கு சீட் தரப்படும். பிப்ரவரி 22ம் தேதி போரா பாஜகவில் சேர உள்ளார். இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் போராவிடம் பேசி வருகிறார் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இது உலகின் 2வது சாலை-ரயில் சுரங்கப்பாதையாக இருக்கும்.
    • 6 மணி நேரத்திலிருந்து வெறும் 20 நிமிடங்களாக குறைக்கும்.

    இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையவுள்ள சாலை-ரெயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது உலகின் 2வது சாலை-ரயில் சுரங்கப்பாதையாக இருக்கும். முதலாமது ஐரோப்பாவில் அமைந்துள்ளது.

    இரட்டை வழிகள் கொண்ட இந்த பாதையின் ஒரு பகுதி ரெயில் பாதையாகவும், மற்றொரு பகுதி வாகனங்கள் செல்லும் சாலையாகவும் இருக்கும்.

    அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் அடியில் 15.79 கி.மீ தூரத்திற்கு ரூ.18,662 கோடி செலவில் இந்த சாலை-ரயில் சுரங்கப்பாதை கட்டப்பட உள்ளது.

    இது அசாமில் உள்ள கோப்பூர் மற்றும் நுமாலிகரை இணைக்கும். பயண நேரத்தை சுமார் 6 மணி நேரத்திலிருந்து வெறும் 20 நிமிடங்களாக குறைக்கும்.

    முன்னதாக நேற்று அசாம் சென்ற பிரதமர் மோடி, அவசர காலங்களில் விமானங்கள் தரையிறங்கும் சாலையும், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆறு வழிச் சாலைப் பாலத்தையும் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிலக்கரி சுரங்கத்தில் டைனமைட் வெடித்த விபத்தில் 31 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    • அசாம் மாநிலம் ஸ்ரீபூமி மாவட்டத்தை சேர்ந்தவர் 44 வயது ஷியாம் பாபு சின்ஹா.

    மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் பகுதியில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி டைனமைட் வெடிபொருள் வெடித்த விபத்தில் 31 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    இந்த விபத்தில் அசாம் மாநிலம் ஸ்ரீபூமி மாவட்டத்தை சேர்ந்த 44 வயது ஷியாம் பாபு சின்ஹா உயிரிழந்ததாக கருதப்பட்டது.

    அவரது குடும்பத்தினரும் விபத்தில் சிதைந்திருந்த ஒரு சடலத்தை அடையாளம் கண்டு, அதைத் ஷியாம் பாபு சின்ஹா என்று கருதி சொந்த ஊருக்குக் கொண்டு சென்று இறுதிச்சடங்குகளைச் செய்தனர்.

    குடும்பத்தினரும் உறவினர்களும் துக்கத்தில் இருந்த நிலையில் ஷியாம் பாபு சின்ஹா திடீரென வீட்டிற்கு வந்துள்ளார்.

    அவரை பார்த்து அனைவரும் முதலில் அச்சமடைந்தாலும், பின்னர் அவர் உயிருடன் இருப்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

    இந்தக் குழப்பத்திற்கு சடலத்தை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

    ஷியாம் பாபுவின் பெயரில் யாருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.    

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிரதமர் மோடி வந்த சி-130 விமானம் இங்கு தரையிறங்கியது.
    • இந்தியா - சீனா எல்லைக்கு சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

    ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி இன்று அசாம் சென்றுள்ளார். அங்கு திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ. 100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் திறந்து வைத்தார்.

    பிரதமர் மோடி வந்த சி-130 விமானம் இந்த அவசர தரையிறங்கும் சாலையில் தரையிறங்கியது. திறப்பு விழாவின் போது போர் விமானங்களின் கண்கவர் சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன.

    அவசரக் காலத்தில் விமானங்கள், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை தரையிறங்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தியா - சீனா எல்லைக்கு சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள  இதுவே வடகிழக்கில் முதலாவது அவசர கால தரையிறங்கும் சாலை ஆகும்.

    போர் காலங்களில் அல்லது அவசர நிலைகளில் அருகில் உள்ள திப்ருகார் விமான நிலையம் அல்லது சாபுவா விமானப்படை தளம் போன்றவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டால், இந்திய விமானப்படைக்கு இந்த ஓடுபாதை மாற்றாக இருக்கும்.

    மிகவும் வலிமையான கான்கிரீட் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஓடுபாதையில், 40 டன் எடை கொண்ட போர் விமானங்களும் எளிதாகத் தரையிறங்கி மீண்டும் பறக்க முடியும். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
    • விருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சுமார் 4 முதல் 5 லட்சம் முஸ்லிம் வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.

    அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அசாம் பாஜக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த இஸ்லாமிய வெறுப்பு வீடியோ கண்டனத்தை குவித்து வருகிறது.

    "Point Blank Shot" என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், முதல்வர் பிஸ்வா கையில் ரைபிள் துப்பாக்கியை எடுத்து குறிபார்க்கிறார், அடுத்த காட்சியில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குல்லாய், தாடி உள்ளிட்ட இஸ்லாமிய அடையாளம் கொண்ட இருவரின் மீது பிஸ்வாவின் துப்பாக்கி சுடுவதற்கு குறி வைக்கப்பட்டது பொன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

    வீடியோவின் பின்னணியில் "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" போன்ற வாசகங்கள் ஆங்கிலத்திலும் அசாமி மொழியிலும் இடம்பெற்றுள்ளன.

    முதல்வர் பிஸ்வா அசாம் இஸ்லாமிய சமூகம் குறித்து தொடர்ந்து கடுமையான கருத்துக்களை கூறியும், நடவடிக்கை எடுத்தும் வரும் சூழலில் இந்த வீடியோ கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த வீடியோ வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அசாம் பாஜக அந்தப் பதிவை நீக்கியது.

    அசாம் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகாய், ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் குடும்பத்தினர் அசாம் முழுவதும் சுமார் சுமார் 4,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்த நில மோசடி புகாரிலிருந்து திசைதிருப்பவே பிஸ்வா இத்தகைய வகுப்புவாதக் கருத்துகளைப் பரப்புவதாகவும் தெரிவித்தார்.

    அண்மையில் பொதுநிகழ்வு ஒன்றில் பேசிய பிஸ்வா, பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களான மியாக்களை தொந்தரவு செய்வதன் மூலமே அசாமிலிருந்து அவர்களை வெளியேற்ற முடியும்.

    ஒரு ரிக்ஷா ஓட்டுநர் 'மியா' முஸ்லிமாக இருந்தால், ரூ.5 கட்டணத்திற்கு ரூ.4 மட்டும் கொடுங்கள். அவர்களுக்குத் தொல்லை கொடுத்தால் மட்டுமே அவர்கள் அசாமிலிருந்து வெளியேறுவார்கள்" என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.

    மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சுமார் 4 முதல் 5 லட்சம் முஸ்லிம் வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்தார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அசாம் பா.ஜ.க முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
    • மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரது வருகை நடைபெற்றது.

    அசாமை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.கருண் கோகாய் இவரது மனைவி எலிசபெத். இவருக்கும் பாகிஸ்தான் ஏஜெண்டு அலிதவுகீர் ஷேக்குக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க ஏற்கனவே குற்றம்சாட்டியது.

    இந்தநிலையில் தருண் கோகாய் மனைவியுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தான் ஏஜெண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 13 முறை இந்தியா வந்ததாக அசாம் பா.ஜ.க முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தானை சேர்ந்த அலிதவுகீர் ஷேக் சுற்றுச் சூழல் ஆர்வலர் அல்ல. அவர் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

    2010 முதல் 2013 வரை காங்கிரஸ் ஆட்சியின்போது அலிதவுகீர் 13 முறை இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்பட்டார். அவர் அனைத்து கூட்டங்களிலும் இந்தியாவை விமர்சித்தார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவரது வருகை நடைபெற்றது.

    மேலும், தருண் கோகாய் மனைவி எலிசபெத்தும் இந்தியாவின் அதிகார மையத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அனைத்து விசாக்களும் காங்கிரஸ் ஆட்சியின்போது வழங்கப்பட்டன.

    பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அவர் இந்தியாவுக்கு வருவதை நிறுத்திவிட்டார். அவர் இந்தியா வந்தபோது பாகிஸ்தான் அதிகாரிகளையும் தன்னுடன் அழைத்து வந்தார்.

    காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், எம்.பி.யும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கும்போது இந்தக் குற்றச்சாட்டு மேலும் தீவிரமாகிறது. அசாம் புலனாய்வு குழு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த விவகாரத்தை மத்திய அரசு நிறுவனம் விசாரிக்க வேண்டும் என்று மாநில அரசு கருதுகிறது. இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

    மத்திய அரசிடம் சாதகமான பதில் வந்தவுடன் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பல வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்துக் குழு கவலை தெரிவித்துள்ளது.
    • போலீசார் மக்கள் மீது அளவுக்கு அதிகமான பலத்தைப் பிரயோகிப்பது மற்றும் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளது.

    முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா தலைமையில் பாஜக ஆளும் அசாமில் வாழும் வங்காள மொழி பேசும் முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்டப்படும் கடுமையான பாகுபாடுகள் குறித்து ஐநா சபை கவலை தெரிவித்து கடிதம் எழுதி உள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபையின் இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு (CERD) இந்தியாவுக்கு அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் அசாமில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது.

    அந்த கடிதத்தில், அசாமில் அமலில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) நடைமுறையில் நிலவும் பாகுபாடுகள் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பல வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்துக் குழு கவலை தெரிவித்துள்ளது.

    மாற்று இடம் அல்லது இழப்பீடு வழங்காமல் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம், வங்க மொழி பேசும் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் செயல்கள், போலீசார் மக்கள் மீது அளவுக்கு அதிகமான பலத்தைப் பிரயோகிப்பது மற்றும் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் குறித்துக் கடிதத்தில் CERD சுட்டிக்காட்டியுள்ளது.

    ஏற்கனவே இது தொடர்பாக இந்தியா அளித்த பதிலில், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முறையான விவரங்கள் இல்லை என்று CERD அதிருப்தி தெரிவித்துள்ளது.   

    எனவே பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு உடனடியாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அடுத்த முறை இந்தியா சமர்ப்பிக்கும் அறிக்கையில் தீர்வுகள் குறித்து விரிவாக விளக்க வேண்டும் என்றும் ஐநா குழு கேட்டுக் கொண்டுள்ளது.    

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என நியூசிலாந்து கைப்பற்றியது.
    • டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

    கவுகாத்தி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.

    இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 21-ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்திலும், 23-ம் தேதி நடந்த 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றிபெற்றது.

    இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வென்று டி20 தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால், டி20 தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்ய நியூசிலாந்தும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோக்ரஜார் மற்றும் அதனை ஒட்டியுள்ள சிரங் மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகளும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
    • இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் தங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் நான்கு முதல் ஐந்து நிவாரண முகாம்களை அமைத்துள்ளது

    அசாமில் இரு சமூகத்தினரிடையே அவ்வப்போது வன்முறைகள் வெடிப்பதுண்டு. அந்த வகையில் தற்போது வெடித்த வன்முறை ஒன்றில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக ராணுவத்தினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திங்கள்கிழமை இரவு அன்று கோக்ரஜார் நகரத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள கரிகான் என்னுமிடத்தில் போடோ சமூகத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஸ்கார்பியோ வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த இரு இளைஞர்கள்மீது வாகனம் மோதியுள்ளது. இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படுள்ளது.

    இதனைத்தொடர்ந்து வாகனம் மோதிய இளைஞர்களின் சமூகமாக ஆதிவாசியினர் ஒன்றுதிரண்டு அந்த மூன்று இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதில் ஒரு இளைஞர் உயிரிழந்தார். தொடர்ந்து வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட மற்ற நான்கு இளைஞர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சையில் அனுமதிப்பட்டுள்ளனர். இதில் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த இரு உயிரிழப்புகளை தொடர்ந்து இரு சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். போராட்டக்காரர்கள் சிலர் வீடுகளுக்கும், ஒரு அலுவலகக் கட்டிடத்திற்கும், அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்த ஆதிவாசி கிளர்ச்சிக் குழுவின் ஒரு முகாமிற்கும் தீ வைத்தனர். மேலும் கரிகான் காவல் புறக்காவல் நிலையத்தையும் தாக்கினர்.

    வன்முறை வெடிக்க போலீஸ், ராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இராணுவத்தின் நான்கு குழுக்களுடன் , விரைவு அதிரடிப்படை, மத்திய அரசுக் காவல் படை மற்றும் அசாம் மாநில காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவம் இன்று இரண்டாவது நாளாக அங்கு கொடி அணிவகுப்பை நடத்தியது.

    இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் தங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் நான்கு முதல் ஐந்து நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற அச்ச உணர்வு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி.பி அகிலேஷ் குமார் சிங், நிவாரண முகாம்களில் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

    "நாங்கள் சில நம்பிக்கை தரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இன்று அனைவருடனும் ஒரு கூட்டத்தை நடத்துவோம்," என்று அவர் கூறினார். நிலைமை ஓரளவிற்கு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். வதந்திகளை பரப்புவோர் இத்தகைய செயல்களை நிறுத்தவில்லை என்றால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

    நிலைமை சீராக கட்டுக்குள் வந்தாலும் நேற்றுமுதல் கோக்ரஜார் மாவட்டத்தில் BNSS பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ளன. அதே சமயம், கோக்ரஜார் மற்றும் அதனை ஒட்டியுள்ள சிரங் மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகளும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜ.க அரசு அசாமின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறது.
    • அசாமில் முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்கள் வாக்குகளுக்காக நிலங்களை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்தன.

    பிரதமர் மோடி இன்று அசாமின் நாகலாண்ட் மாவட்டத்தில் உள்ள காளியாபோரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.6,950 கோடி மதிப்புள்ள காசி ரங்கா மேம்பாலத் திட்டத் திற்கு அடிக்கல் நாட்டினார்.

    86 கி.மீ நீளமுள்ள காசிரங்கா மேம்பாலத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு தேசிய நெடுஞ்சாலைத் திட்டமாகும்.

    மேலும், காணொளி காட்சி மூலம் 2 புதிய அம்ரித் பாரத் விரைவு ரெயில்களான கவுகாத்தி (காமாக்யா)- ரோஹ்தக் அம்ரித் பாரத் விரைவு ரெயில், திப்ருகர்- லக்னோ (கோமதி நகர்) அம்ரித் பாரத் விரைவு ரெயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    அசாமில் தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள், வளர்ச்சியே பிரதானம் என்ற பா.ஜ.கவின் தாரக மந்திரத்தை வலுப்படுத்தியுள்ளன. அசாமின் காசிரங்கா உயர்மட்டப் பாலம் வெள்ளக் காலங்களில் வனவிலங்குகளுக்குப் பாதுகாப்பான பாதையை வழங்க உதவும்.

    நிலங்களை ஆக்கிரமித்த ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவதன் மூலம் பா.ஜ.க அரசு அசாமின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறது.

    அசாமில் முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்கள் வாக்குகளுக்காக நிலங்களை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்தன. வெறும் அரசாங்கத்தை அமைப்பதற்காகவும், சில வாக்குகளைப் பெறுவதற்காகவும் அவர்கள் உங்கள் நிலங்களை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.

    ஊடுருவல்காரர்கள் அசாம் மற்றும் நாட்டிற்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். பல தசாப்தங்களாக அசாமில் காங்கிரஸ் ஆட்சியின்போது ஊடுருவல் அதிகரித்துக்கொண்டே இருந்தது. நீங்கள் காங்கிரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    நாட்டில் அனைவரின் முதல் தேர்வாக பா.ஜ.க மாறியுள்ளது.கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பா.ஜ.க மீதான நாட்டின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பீகார் தேர்தலில் பா.ஜ.கவுக்கு மக்கள் பெரிய வெற்றியை தந்தனர். மராட்டியம் மற்றும் கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க சாதனை படைத்தது.

    எதிர்மறை அரசியல் செய்தியை வழங்குவதால் காங்கிரஸ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி மும்பையில் பிறந்திருந்தாலும் இன்று அந்த கட்சியை மும்பையில் நடக்கும் தேர்தலில் 4-வது அல்லது 5-வது இடத்தில் தான் பார்க்க முடிகிறது.

    காங்கிரஸ் கட்சிக்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் இல்லாததால் அது நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய அரசியலமைப்பு யாருக்கும் தடை விதிக்கவில்லை. இந்தியாவில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த ஒரு மகள் பிரதமராக வருவார் என்பது எனது கனவு
    • இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது.

    இந்தியாவில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக வருவார் என்ற ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    நிகழ்வொன்றில் பேசிய ஓவைசி, "பாகிஸ்தான் அரசியலமைப்பு முஸ்லிம் அல்லாதவர்கள் உயர்பதவிக்கு வருவதைத் தடுக்கிறது.

    ஆனால், இந்திய அரசியலமைப்பு யாருக்கும் தடை விதிக்கவில்லை. இந்தியாவில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த ஒரு மகள் பிரதமராக வருவார் என்பது எனது கனவு" என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் பாஜகவை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "அரசியலமைப்பு ரீதியாக யாரும் பிரதமராகலாம், அதில் தடையில்லை.

    ஆனால் இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது. இந்தியாவின் பிரதமர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

    பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனாவாலா இதுபற்றி பேசுகையில், "பிரதமர் பதவி பற்றிப் பேசுவதற்கு முன்பு, ஓவைசி தனது சொந்தக் கட்சியில் ஒரு ஹிஜாப் அணிந்த பெண்ணையோ அல்லது இஸ்லாமியர்களில் பஸ்மாந்தா சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையோ தலைவராக்கிக் காட்டட்டும்" என்று சவால் விடுத்தார்.   

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவருக்கு வயது தனது 94
    • வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.

    பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபிந்திர புர்கயஸ்தா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது தனது 94

    அசாமில் பாஜகவை வளர்த்தெடுத்த முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர், வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். சில்சார் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "கபிந்திர புர்கயஸ்தா அவர்கள் அசாமில் கட்சியை வலுப்படுத்தியவர். அவரது அர்ப்பணிப்புள்ள சேவை என்றும் நினைவுகூரப்படும்" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

    அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ×