உள்ளூர் செய்திகள்

தஞ்சை, திருவையாறு பகுதிகளில் 20-ந்தேதி மின்நிறுத்தம்
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.
- நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை,
தஞ்சாவூர்:
தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மின்பாதை பராமரிப்பு பணிகள் வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபநந்தவனம். சுங்கான்திடல், நாலுகால்மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு,
கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story