என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி: 4 பேர் பலியானதற்கு காலாவதியான குளிர்பானம் காரணமா?- அதிகாரிகள் ஆய்வு
    X

    திருச்சி: 4 பேர் பலியானதற்கு காலாவதியான குளிர்பானம் காரணமா?- அதிகாரிகள் ஆய்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று 2-வது நாளாக மருத்துவ முகாம் உறையூர் பகுதியில் நடந்து வருகிறது.
    • மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது.

    திருச்சி:

    திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவில் நேற்று முன்தினம் அங்குசாமி மனைவி மருதாம்பாள் (வயது 75) கோவிந்தராஜ் மனைவி லதா(52) மற்றும் நான்கு வயது சிறுமி பிரியங்கா ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவர்கள் இறந்ததாக குற்றச்சாட்டப்பட்டது.

    மேலும் மின்னப்பன் தெரு மற்றும் சுற்றுவட்டார தெருக்களை சேர்ந்த 40 பேர் வாந்தி மற்றும் வயிற்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்தது.

    மேலும் வாந்தி-பேதிக்கு அந்த பகுதியில் கடந்த 14-ந் தேதி சித்திரை திருவிழா திருவிழாவில் அன்னதானத்தின் போது வழங்கிய மோர் காரணமாக இருக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பிரச்சனையை தொடர்ந்து அந்த பகுதியில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது.


    லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பொதுமக்கள் சந்தேகம் எழுப்பிய பகுதிகளில் குழிதோண்டி பார்த்த பின்னரும் கழிவு நீர் குடிநீரில் கலந்ததற்கான தடயம் எதுவும் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே உறையூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் வசிக்கும் 11 ஆயிரம் பேருக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) 2-வது நாளாக மருத்துவ முகாம் உறையூர் பகுதியில் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று கூறும்போது, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிகளின் போது, குடிநீரில் கழிவு நீர் கலந்து சோழராஜபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது யாருக்கும் வாந்தி பேதி வரவில்லை. மாறாக மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது.

    உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை. அங்கு தற்போது பாதாள சாக்கடை பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது. இருப்பினும் சித்திரை திருவிழாவில் அன்னதானத்தின் போது, காலாவதியான குளிர்பானம் வழங்கியதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

    அதனால் பிரச்சனை ஏற்பட்டதா ? என அறிய ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். குழாய் மூலமாக குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ள உறையூர் பணிக்க தெரு, விண்ணப்ப தெரு, நாடார் தெரு ஆகிய பகுதிகளில் நாளை குடிநீர் சப்ளை குழாய் மூலமாக வழங்க இருக்கிறோம்.

    அப்போது வீடு வீடாக சென்று குடிநீரில் பிரச்சனை உள்ளதா என கண்டறிய ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாநகராட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

    Next Story
    ×