என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கடன் தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை- கல்லூரி மாணவர் கைது
    X

    கடன் தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை- கல்லூரி மாணவர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிகிச்சை பலனின்றி சந்தனகுமார் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள செட்டிக்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 35). செங்கல் சூளை தொழிலாளி.

    அதே பகுதியை சேர்ந்தவர் ரெஜிமன் (19). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் இரவு நேரங்களில் காற்றாலைகளில் வேலைக்கு சென்று சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தார்.

    இவ்வாறு அவர் சேமித்து வைத்திருந்த பணத்தின் ரூ.28 ஆயிரத்தை சந்தனகுமாருக்கு கடனாக கொடுத்துள்ளார்.

    குறிப்பிட்ட காலத்தில் அந்த பணத்தை சந்தகுமார் திருப்பி கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ரெஜிமன் தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு சந்தனகுமாரிடம் கேட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை ரெஜிமன், சந்தனகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது கடனை திருப்பி தருமாறு சந்தனகுமாரிடம் கேட்டார். அப்போது சந்தனகுமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ரெஜிமனை வெட்ட முயன்றுள்ளார்.

    இதைப்பார்த்த ரெஜிமன் ஆவேசமடைந்தார். மேலும் சந்தனகுமாரிடம் இருந்து அரிவாளை பறித்த ரெஜிமன் அந்த அரிவாளால் சந்தனகுமாரை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் அலறிதுடித்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்தனகுமார் பரிதாபமாக இறந்தார்.

    முன்னதாக பழவூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ரெஜிமனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு சந்தனகுமார் பலியானதால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×