இந்தியா

ஆசியாவின் முதல் பெண் ரெயில் ஓட்டுநர் சுரேகா யாதவ் அடுத்த வாரம் பணி ஓய்வு.. யார் இவர்?
- தனது 24 வயதில் இந்திய ரயில்வேயில் உதவி ஓட்டுநராக சுரேகா சேர்ந்தார்.
- இன்று, இந்திய ரயில்வேயில் 1500 பெண் ஓட்டுநர்கள் உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா யாதவ் (60 வயது)
எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்து, 1989 ஆம் ஆண்டு தனது 24 வயதில் இந்திய ரயில்வேயில் உதவி ஓட்டுநராக சுரேகா சேர்ந்தார்.
இதன் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலேயே ரெயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை சுரேகா யாதவ் பெற்றார்.
இதன்பின் 1996 ஆம் ஆண்டு சரக்கு ரெயில் ஓட்டுநரான சுரேகா, 2000 ஆம் ஆண்டு முதல் பயணிகள் ரெயில்களை ஓட்டத் தொடங்கினார்.
36 ஆண்டுகள் ரெயில்வேயில் பணியாற்றிய சுரேகா யாதவ் வரும் 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
ரெயில்வேயில் ஓட்டுநர்களாக மாறிய அனைத்து பெண்களுக்கும் சுரேகா யாதவின் வாழ்க்கை ஒரு வழிகாட்டியாக மாறியுள்ளது. இன்று, இந்திய ரயில்வேயில் 1500 பெண் ஓட்டுநர்கள் உள்ளனர்.
பணியின் இறுதியாக பயணமாக மராட்டியத்தின் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லியின் ஹச்ரத் நிஜாமுதின் ரெயில் நிலையம் இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை சுரேகா யாதவ் இயக்கினார்.
அப்போது அவருக்கு ரெயில்வே சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது.