இந்தியா

குருபா சமூகத்தினரை ST பிரிவில் சேர்ப்பதற்கான பரிந்துரைக்கு எதிர்ப்பு: சித்தராமையா அளித்த பதில்..!
- குருபா தற்போது ஓபிசி பட்டியலில் உள்ளது.
- லிங்காயத்ஸ் மற்றும் வொக்காலிகாஸ் பிரிவினருக்கு அடுத்ததாக ஆதிக்கம் செலுத்தும் பிரிவாகும்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள குருபா சமூகத்தினரை, எஸ்.டி. பட்டியலில் சேர்க்க அரசு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு எஸ்.டி. பிரிவில் உள்ள சில சமூகங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், மாநில அரசு பரிந்துரைதான் செய்ய முடியும். மாநில அரசுதான் முடிவு எடுக்கும் என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-
இந்த நடவடிக்கை முந்தைய அரசாங்கத்தின் காலத்திலேயே செய்யப்பட்டது. யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசு இது தொடர்பாக முடிவு செய்யும். மாநில அரசான நாங்கள் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். இந்த சமூகம் வர வேண்டியது இருந்தால், அவர்கள் சேர்க்கப்படுவார்கள். இல்லை என்றால், அவர்கள் சேர்க்கப்படமாட்டார்கள்.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
குருபா தற்போது ஓபிசி பட்டியலில் உள்ளது. லிங்காயத்ஸ் மற்றும் வொக்காலிகாஸ் பிரிவினருக்கு அடுத்ததாக ஆதிக்கம் செலுத்தும் பிரிவினராகும்.
கர்நாடகா மாநிலத்தில் ஐந்து ஓபிசி பிரிவுக்கு 32 சதவீத இடதுக்கீடு வழங்கப்படுகிறது. குருபா 2ஏ பிரிவின் கீழ் வருகிறது. 2ஏ பிரிவுக்கு 15 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.