என் மலர்

    இந்தியா

    காதலனை கொலை செய்த குடும்பத்தினர்.. விரக்தியில் இளம்பெண் தற்கொலை
    X

    காதலனை கொலை செய்த குடும்பத்தினர்.. விரக்தியில் இளம்பெண் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அங்கிதாவின் சகோதரர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்தனர்.
    • அவருக்கு அருகே பூச்சி மருந்து பாக்கெட் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

    உத்தரப் பிரதேசத்தில் காதலன் கொல்லப்பட்ட விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சஹாரன்பூர் மாவட்டத்தின் சில்ஹானா பகுதியைச் சேர்ந்த 18 வயது அங்கிதா, மகிழ் என்ற 22 வயது இளைஞரை காதலித்து வந்தார்.

    இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை மகிழ் கொலை செய்யப்பட்டார். அங்கிதாவின் குடும்பத்தினர் தான் தங்கள் மகனை கொன்றதாக மகிழின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அங்கிதாவின் சகோதரர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் காதலன் உயிரிழந்த விரக்தியில் இருந்த அங்கிதா, சனிக்கிழமை தனது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு அருகே பூச்சி மருந்து பாக்கெட் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

    அவரது உடலை கைப்பற்றி போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×