என் மலர்

    இந்தியா

    3 குழந்தைகளை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தானும் தற்கொலை செய்த தந்தை
    X

    3 குழந்தைகளை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தானும் தற்கொலை செய்த தந்தை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 8 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகள்கள் மற்றும் 4 வயது மகன் ஆகியோரின் உடல்கள் பாதி எரிந்த மற்றும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
    • பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

    தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் 36 வயது தந்தை தனது மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு டதற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    வேல்டண்டா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் கிடப்பதாக கடந்த புதன்கிழமை உள்ளூர்வாசிகள் சிலர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

    அதைத் தொடர்ந்து, காவல்துறை மேற்கொண்ட விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) நாகர்கர்னூல் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில், அவரது 8 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகள்கள் மற்றும் 4 வயது மகன் ஆகியோரின் உடல்கள் பாதி எரிந்த மற்றும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

    ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த அந்த நபர் குடும்பப் பிரச்சனைகள் காரணமாக தனது மனைவியுடன் சண்டையிட்டு, ஆகஸ்ட் 30 அன்று தனது மூன்று குழந்தைகளுடன் நாகர்கர்னூலுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

    முதற்கட்ட விசாரணையின்படி, அவர் தனது மூன்று குழந்தைகளையும் கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, பின்னர் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

    Next Story
    ×