இந்தியா

கர்நாடகாவில் வாக்குத் திருட்டு புகார்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு
- தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
- ஆதாரங்களை கர்நாடக மாநில சிஐடி-யிடம் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
கர்நாடக மாநில ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி நடந்ததாகவும், வாக்காளர்களின் உறவினர்கள் கண்டுபிடித்ததால் அவை தடுத்து நிறுத்தப்பட்டதாவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மேலும், systematic ஆக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், இது தொடர்பான ஆதாரங்களை கர்நாடக மாநில சிஐடி-யிடம் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்நிலையில், கர்நாடகா முழுவதும் பதிவான அனைத்து 'வாக்குத் திருட்டு' புகார்களையும் விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது அம்மாநில காங்கிரஸ் அரசு அமைத்துள்ளது.
ஏற்கனவே ஆலந்த் தொகுதியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் மோசடி வழக்கை விசாரித்து வரும் குற்றப் புலனாய்வுத் துறை ஏடிஜிபி B.K. சிங், குழுவுக்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.