புதுச்சேரி

பைக் மீது மோதிய கார்- தூக்கிவீசப்பட்டு ஆற்றில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்பு
- பாலத்தின் மீது வந்த கார் ஒன்று எதிரே வந்த பைக்குகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
- விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வலம் வருகிறது.
புதுச்சேரியில் உள்ள நோணாங்குப்பம் பாலத்தில் மீது வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தது. அப்பேது, பாலத்தின் மீது வந்த கார் ஒன்று எதிரே வந்த பைக்குகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில், பைக்கில் இருந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு ஆற்றில் விழுந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், ஆற்றில் விழுந்த இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இளைஞர் ஆற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வலம் வருகிறது.
Next Story