என் மலர்

    புதுச்சேரி

    புதுச்சேரியில் தியாகிகள் உதவித்தொகை ரூ.15 ஆயிரமாக உயர்வு- கவர்னர் அறிவிப்பு
    X

    புதுச்சேரியில் தியாகிகள் உதவித்தொகை ரூ.15 ஆயிரமாக உயர்வு- கவர்னர் அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நிகழ்ந்த வன்முறையால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
    • கவர்னர் கைலாஷ்நாதன் சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    புதுச்சேரி:

    கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நிகழ்ந்த வன்முறையால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆகஸ்டு 14-ந் தேதி பிரிவினை கொடுமைகளின் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள மேரி கட்டிடத்தில் பிரிவினை கொடுமைகளின் நினைவு தினம் கலைப்பண்பாட்டு துறை சார்பில் அனுசரிக்கப்பட்டது.

    இதில் கவர்னர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டு, பிரிவினையின்போது நடந்த கலவரத்தின் புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். அப்போது அவரை தியாகிகள் சந்தித்து, தங்களுக்கு வழங்கப்படும் ரூ.12 ஆயிரம் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தங்களது வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதனை கேட்ட கவர்னர் கைலாஷ்நாதன் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.15 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் உங்களுக்கு உயர்த்திய உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.

    Next Story
    ×