கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா
- அபிஷேக் சர்மா 31 பந்தில் 61 ரன்கள் விளாசினார்
- சுப்மன் கில் 4 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கையை எதிர்கொண்டு வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
சுப்மன் கில் 4 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். மறுமுனையில் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 22 பந்தில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 31 பந்தில் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 8 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் வெளியேறினார். ஆனால் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சஞ்சு சாம்சன் 23 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்துள்ளது.