என் மலர்

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பை: சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி  இந்தியா த்ரில் வெற்றி
    X

    ஆசிய கோப்பை: 'சூப்பர் 4' சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
    • அபிஷேக் சர்மா 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

    சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம் துபாயில் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அணியின் எண்ணிக்கை 21 ஆக இருந்தபோது பகர் சமான் 15 ரன்னில் அவுட்டானார்.

    2வது விக்கெட்டுக்கு இணைந்த பர்ஹான், சயீம் அயூப் ஜோடி அதிரடியாக ஆடியது. குறிப்பாக பர்ஹான் சிக்சர், பவுண்டரிகளை விளாசி அரை சதம் கடந்தார்.

    இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்த நிலையில் சயீம் அயூப் 21 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய பர்ஹான் 58 ரன்னில் வெளியேறினார். முகமது நவாஸ் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

    இந்தியத் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அபிஷேக் சர்மா அதிரடியாக அரைசதம் அடித்தார். சுப்மன் கில் 47 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

    தொடர்ந்து, திலக் வர்மா களமிறங்கினார். அபாரமாக ஆடிக்கொண்டிருந்த அபிஷேக் சர்மா 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சஞ்சு சாம்சன் களத்திற்கு வந்தார்.

    இறுதியில், இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Next Story
    ×