ஐ.பி.எல்.(IPL)

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்
- தென் ஆப்பிரிக்கா ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. கடைசி பந்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைபட்ட நிலையில் அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.
இதனால் தென் ஆப்பிரிக்கா ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நாளை நடைபெறும் இறுதி ஆட் டத்தில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
Next Story