ஐ.பி.எல்.(IPL)

மோதலில் தான் தோற்றோம், போரில் தோற்கவில்லை: ஷ்ரேயாஸ் அய்யர்
- முதலில் ஆடிய பஞ்சாப் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஆர்சிபி 10 ஓவரில் 106 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
சண்டிகர்:
சண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 1 சுற்றில் பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய ஆர்சிபி அணி 10 ஓவரில் 106 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், குவாலிபையர் 1 சுற்றில் தோல்வி அடைந்தபின் பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் கூறியதாவது:
முதல் இன்னிங்சில் அதிக விக்கெட்களை பவர் பிளேவில் இழந்தோம். நாங்கள் செய்த தவறில் இருந்து நிச்சயம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நான் என்னுடைய முடிவுகளை சந்தேகிப்பது கிடையாது.
நாங்கள் சரியான இலக்கை நோக்கி தான் சென்று கொண்டிருந்தோம். எங்கள் திட்டத்தை களத்தில் பிரதிபலிக்க முடியவில்லை. இந்தத் தோல்வியில் பவுலர்களை குறைசொல்ல மாட்டேன். ஏனென்றால் இப்படி ஒரு குறைந்த ஸ்கோரை யாராலும் தற்காத்துக் கொள்ள முடியாது.
நாங்கள் பேட்டிங்கில் சொதப்பி விட்டோம். எனவே எங்களுடைய பேட்ஸ்மேன்கள் நன்றாக பயிற்சி செய்யவேண்டும். நாங்கள் இங்கு விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் ஆடுகளத்தின் பவுன்ஸ் தன்மை வித்தியாசமாக இருந்தது. இதுபோல ஒரு காரணத்தை எல்லாம் தொழில்முறை கிரிக்கெட்டில் சொல்ல முடியாது. சூழலுக்கு ஏற்ப சரியாக பேட்டிங் செய்து ரன்கள் சேர்க்க வேண்டும்.
நாங்கள் மோதலில் தோற்றுவிட்டோமே தவிர, போரில் தோற்கவில்லை. இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.