கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இடம்பிடித்த சிராஜ்
- டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.
- இந்தியா மற்றும் இலங்கையில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.
மும்பை:
டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளன.
இந்திய அணி உலகக் கோப்பை தொடருக்காக தயார் நிலையில் உள்ளது. முன்னதாக, நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி அதை 4-1 என கைப்பற்றியது. உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 30 ரன்னில் வீழ்த்தியது.
இதற்கிடையே, இந்திய அணியில்இடம் பிடித்திருந்த ஹர்ஷித் ராணா காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காயம் காரணமாக விலகிய ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக முகமது சிராஜ் அணியின் இடம்பிடித்துள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
Next Story





