கிரிக்கெட் (Cricket)

சூர்யகுமாருக்கு சிக்கல் - பாகிஸ்தான் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்ட ஐசிசி
- சூர்யகுமார் யாதவின் கருத்துகள் விளையாட்டின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாக புகார்
- சூர்யகுமாருக்கு எதிராக பாகிஸ்தான் அளித்த புகாரை ஐசிசி ஏற்றுக்கொண்டது.
ஆசிய கோப்பை தொடரில் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம். எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். இந்த வெற்றியை, எல்லையில் வீரத்தைக் காட்டிய நமது ராணுவப் படைகள் அனைவருக்கும் நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன்" என தெரிவித்தார்
சூர்யகுமார் யாதவின் கருத்துகள் விளையாட்டின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதி, அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் ஐசிசியிடம் புகார் அளித்தது.
இந்நிலையில், சூர்யகுமாருக்கு எதிராக பாகிஸ்தான் அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட ஐசிசி, முறையான விசாரணை தொடங்க உத்தரவிட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தெரிவித்த கருத்துகள் குறித்து ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் விளக்கம் கேட்டுள்ளார்.