கிரிக்கெட் (Cricket)

TNPL 2025: ராஜகோபால் அதிரடி அரைசதம்... மதுரையை வீழ்த்தி சேலம் அபார வெற்றி
- மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
- அதிரடியாக விளையாடிய சேலம் வீரர் ராஜகோபால் 60 ரன்கள் அடித்து அவுட்டானார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 4 ஆவது போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அத்திக் உர் ரஹ்மான் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ராம் அரவிந்த் 37 ரன்கள் அடித்தார்.
சேலம் அணி தரப்பில் முஹமது 2 விக்கெட்டுகளும் அஜித் ராம், ஹரீஸ் குமார், ரஹில் சஞ்சய் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதனையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் அணி 18.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராஜகோபால் 60 ரன்கள் அடித்து அவுட்டானார்.
மதுரை தரப்பில் முருகன் அஷ்வின், குர்ஜப்னீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.