கால்பந்து

English Premier League வீரர்களை ஒப்பந்தம் செய்ய ரூ. 35 ஆயிரம் கோடிகள் செலவழித்த அணிகள்
- லிவர்பூல் அணி அதிகபட்சமாக 6 வீரர்களை வாங்க ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டு உள்ளது.
- ஆர்செனல் அணி 7 வீரர்களை சுமார் ரூ. 2,641 கோடி கொடுத்து வாங்கி உள்ளது.
ஐரோப்பாவில் நடைபெறும் கிளப்புகள் கால்பந்து போட்டி மிகவும் பிரபலமானது. ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகள் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடியது.
இதற்கிடையே இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் விளையாடும் கால்பந்து கிளப்புகள் வீரர்களை பரிமாற்றம் செய்வதற்கான அவகாசம் முடிவடைந்தது.
அதன்படி அனைத்து கிளப்புகளும் மொத்தமாக ரூ.35 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் மொத்தம் 20 கிளப்புகள் விளையாடி வருகின்றன. இதில் லிவர்பூல் அணி அதிகபட்சமாக 6 வீரர்களை வாங்க ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டு உள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக ஆர்செனல் அணி 7 வீரர்களை சுமார் ரூ. 2,641 கோடி கொடுத்து வாங்கி உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட், நியூகேஸ்டல் உள்ளிட்ட கிளப்புகளும் வீரர்கள் மாற்றத்துக்கு பணத்தை அதிகமாக செல வழித்துள்ளன.