என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    திருச்சி அருகே பாதாள சாக்கடையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி
    X

    திருச்சி அருகே பாதாள சாக்கடையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரவியும், பிரபுவும் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்வதற்காக சாக்கடைக்குள் இறங்கினர்.
    • திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    பொன்மலைப்பட்டி:

    திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் தூய்மை பணிகள் போன்றவற்றில் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக உள்ள சுப்பையா என்பவரிடம் புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரை சேர்ந்த அய்யாவுவின் மகன் ரவி (வயது 38), சின்ன சேலத்தை சேர்ந்த பிரபு (32) ஆகியோர் ஒப்பந்த அடிப்படையில் 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே முத்துநகர் கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அடைப்பை சரிசெய்வதற்காக நேற்று மாலை ரவி, பிரபு ஆகியோர் கார்மல் கார்டன் பகுதிக்கு வந்தனர்.

    மேலும் அங்கு திருச்சி மாநகராட்சி உதவி பொறியாளர் ஜெகஜீவன்ராம், இளநிலை பொறியாளர் பிரசாந்த் ஆகியோர் இருந்தனர். இதையடுத்து ரவியும், பிரபுவும் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்வதற்காக சாக்கடைக்குள் இறங்கினர். குறிப்பிட்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களின் பெயர்களை கூறி அழைத்தனர். ஆனால் பதில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் சாக்கடைக்குள் பார்த்தபோது, ரவியும், பிரபுவும் மயங்கி கிடந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். இதுபற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள், உடனடியாக திருவெறும்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் அடிப்படையில் திருவெறும்பூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட பின்பு, பாதாள சாக்கடைக்குள் இறங்கினர். அவர்கள் ரவி, பிரபுவை மீட்க முயன்றபோது, 2 பேரும் விஷவாயு தாக்கி இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் உடல்களை கயிறு கட்டி மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் திருவெறும்பூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதாள சாக்கடைக்குள் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் திருச்சி பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×