என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது
    X

    காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஜித்குமார் மரண வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
    • சி.பி.ஐ. ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளி யம்மன் கோவிலில் காவலா ளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 29). இந்த நிலையில் கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் தன்னுடைய காரில் இருந்த நகைகள் மாயமான தாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அஜித்கு மாரை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸ் காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணி கண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஸ் ராவத் காத்திருப் போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மேலும், மானா மதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்து ஜூலை 8-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதனிடையே, அஜித்குமார் மரண வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், கடந்த 2-ந்தேதி திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் விசாரணையை தொடங்கிய மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர் லால் சுரேஷ், சுமார் 50-க்குமு மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்தார்.

    அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்த சம்பவத்தில் விதிமீறல்கள் இருப் பதும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரமும் இருப்பது தெரிய வருகிறது.

    சட்டவிரோத காவல் மரணங்கள் தொடர்பான வழக்கை சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. விசாரணை அமைப்பின் செயல்பாடுகள் நீதியை நிலைநாட்டும் வண்ணம் இருக்க வேண்டுமே தவிர, சந்தேகிக்கும் வண்ணம் இருக்கக் கூடாது.

    இது போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட காவல் துறையினரே வழக்கை விசாரித்தால் நீதி, உண்மை வெளிவராது எனும் சந்தேகம் எழுவதாலேயே சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு உத்தரவிடப்படுகிறது. சி.பி.ஐ. தரப்பிடம் அனைத்து அறிக்கைகளையும் நீதிமன்ற பதிவாளர் வழங்க வேண்டும், சி.பி.ஐ. ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து, அஜித்குமார் கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. கடந்த சனிக்கிழமை தனியாக வழக்குப் பதிந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் சி.பி.ஐ. விசாரணை அதிகாரியாக துணைக் கண்காணிப்பாளர் மோஹித்குமார் நியமிக்கப்பட்டார். இவர் பல மாநிலங்களில் முக்கியமான வழக்குகளை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணையை அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளதாக அவர் ஏற்கெனவே தெரிவித்தார்.

    விசாரணையை தொடங்குவதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு மோகித்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வந்தனர். அவர்களுக்கு மதுரையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தன.

    இதற்கிடையில் மதுரையில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் இன்று முதல் விசாரணையை முறைப்படி தொடங்கியுள்ளனர். முன்னதாக தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் மதுரை, சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன்பிறகு அவர்கள் பிற்பகலில் திருப்புவனம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டு அளிக்கப்பட்ட அறிக்கையில் அடிப்படையில் அஜித்குமாரின் பெற்றோர், சகோதரர், நண்பர்கள், கோவில் செயல் அலுவலர், ஊழியர்கள், நகை மாயமானதாக புகார் தெரிவித்த நிகிதா மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என பட்டியலிட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.

    முன்னதாக திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு குறித்த ஆவணங்களையும் அவர்கள் கோர்ட்டில் இருந்து முறைப்படி இன்று பெற்றுக் கொள்கிறார்கள். மேலும் டெல்லியில் இருந்து வரும் அதிகாரிகளுக்கு மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளும், அலுவலர்களும் உதவியாக விசாரணை பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    தற்போது, சி.பி.ஐ. அதிகாரிகள் அஜித்குமார் வழக்கை விசாரிப்பதற்காக மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் எதிரே கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமான வணிக வளாகத்தின் மேல் தளத்தில் உள்ள அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    Next Story
    ×