என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியே அழித்து விடுவார்- கருணாஸ்
    X

    அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமியே அழித்து விடுவார்- கருணாஸ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நம்பிக்கை துரோகத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.
    • இபிஎஸ் நல்ல பெயர் வாங்குவதற்காக கபடநாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

    சிவகங்கையில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எனக்கு எம்.எல்.ஏ. பதவியை விட முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவன் என்பதையே பெருமையாகதான் நினைக்கிறேன். அதில் எனக்கு அக மகிழ்ச்சி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்யக்கூடியவர். இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் நாம் மன்னித்துவிடலாம். ஆனால், நம்பிக்கை துரோகத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.

    நிச்சயம் அதற்கான பலனை அவர் வாழும் காலத்திலேயே அனுபவிப்பார். முக்குலத்தோர் சமூதாயத்திற்காக எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். அப்போதெல்லாம் செவி சாய்க்காத அவருக்கு இப்போது எங்கிருந்து தோன்றுகிறது.

    எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும், அடிநலையில் இருக்கக்கூடிய மக்கள் வரை போய் சேர்ந்துவிட்டது. அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக கபடநாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

    அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தென் மாவட்டங்களில் நீங்கறே வந்து சிலையாக நின்றாலும், உங்களுக்கு வாக்கு கிடைக்காது.

    தான் செய்த தவறுகளை மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழிப்போடும் செயல். என்னை பொறுத்தவரையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட கழகம் யார் ஒருவரும் பிரிக்கணும், அழிக்கணும் என்கிற வேலையில் இறங்கத் தேவையில்லை.

    அதிமுக-வை வெளியில் இருந்து யாரும் வந்து அழிக்கத் தேவையில்லை. எடப்பாடி பழனிசாமியே அதை அழித்து முடித்து விடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×