தமிழ்நாடு செய்திகள்

செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன்- டி.டி.வி.தினகரன்
- நயினார் அகம்பாவத்தில், ஆணவத்தில் பேசுகிறார்.
- இ.பி.எஸ். போதும் என எண்ணுகிறார் நயினார் நாகேந்திரன்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2024-ல் எனக்காக தேனி தொகுதியை விட்டு கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
* ஓ.பி.எஸ். வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன் காரணம்.
* பேச தயார் என செய்தியாளர்களிடம் கூற வேண்டிய காரணம் என்ன?
* நயினார் நாகேந்திரன் மனநிலை காரணமாகவே கூட்டணியை விட்டு வெளியேறினோம்.
* நயினார் நாகேந்திரன் திட்டமிட்டே எங்களை கூட்டணியை விட்டு வெளியேற்றி இருக்கிறார்.
* நயினார் அகம்பாவத்தில், ஆணவத்தில் பேசுகிறார்.
* இ.பி.எஸ். போதும் என எண்ணுகிறார் நயினார் நாகேந்திரன்.
* செங்கோட்டையனுக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக யூகத்தின் பின்னால் சென்று கொண்டிருக்கின்றனர்.
* செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story