உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.3 ரிக்டர் அளவில் பதிவு
- இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவுகோலாகப் பதிவானது.
ஜகார்த்தா:
இந்தோனேசியா அமைந்துள்ள நிலப்பரப்பு காரணமாக, அங்கு பல இடங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின் மேற்கு பப்புவா பகுதியில் இன்று மதியம் 1:54 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.
ஏற்கனவே இந்தோனேசியாவில் கடந்த 7-ம் தேதி 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story