என் மலர்

    உலகம்

    காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!
    X

    காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்ற நேதன்யாகு ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.
    • காசாவில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 96 பேர் குழந்தைகள் ஆவர்.

    காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்றும் பிரதமர் நேதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேதன்யாகுவின் ஐந்து கொள்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அனைத்து பணயக்கைதிகளையும் திரும்பப் பெறுதல், ஹமாஸை நிராயுதபாணியாக்குதல், காசா பகுதியை இஸ்ரேல் கட்டுப்படுத்துதல், மாற்று சிவில் அரசாங்கத்தை உருவாக்குதல் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேலிய பணயக்கைதிகள் பிராஸ்லாவ்ஸ்கி மற்றும் எவியட்டர் டேவிட் ஆகியோரின் எலும்பும் தோலுமான காட்சிகளை ஹமாஸ் வெளியிட்ட பிறகு, காசா பகுதியை முழுமையாகக் கைப்பற்ற நேதன்யாகு ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.

    ஏற்கனவே காசாவின் 75 சதவீதத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்ரேலிய இராணுவம், பணயக்கைதிகள் வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டும் பகுதிகள் உட்பட காசவில் மீதமுள்ள பகுதிகளைக் கைப்பற்றத் தயாராகி வருகிறது.

    பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பு ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நேதன்யாகு, "எங்கள் பாதுகாப்பை வலுப்படுத்தவும், ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்கவும், அங்குள்ள மக்களுக்கு சுதந்திரம் வழங்கவும் காசா முழுவதையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் எடுக்க விரும்புகிறது" என்று தெரிவித்தார்.

    மேலும், காசாவை நிரந்தரமாக வைத்திருக்க அவர்கள் விரும்பவில்லை என்றும், அங்கு ஒரு பாதுகாப்பு மண்டலத்தை நிறுவி, அதை முறையாக நிர்வகிக்கக்கூடிய அரபுப் படைகளிடம் நிர்வாகப் பொறுப்புகளை ஒப்படைப்போம் என்றும் நேதன்யாகு விளக்கினார்.

    போருக்குப் பின்னால் உள்ள இஸ்ரேலின் உண்மையான நோக்கங்கள் இப்போது வெளிப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது

    இதற்கிடையே உணவுப் பற்றாக்குறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக நேற்று காசாவில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் நான்கு பேர் இறந்தனர். இதன் மூலம் காசாவில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 96 பேர் குழந்தைகள் ஆவர்.

    Next Story
    ×