உலகம்

இதைச் செய்தால் டிரம்புக்கு நோபல் பரிசு நிச்சயம்: சொல்கிறார் பிரான்சு அதிபர்
- தான் அதிபராக பதவி ஏற்ற பிறகு 7 போர்களை நிறுத்தி உள்ளேன் என்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
- இந்தியா-பாகிஸ்தான் சண்டையும் என்னால் தான் தீர்க்கப்பட்டது என தொடர்ந்து சொல்லி வருகிறார்.
பாரிஸ்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தான் அதிபராக பதவி ஏற்ற பிறகு 7 போர்களை நிறுத்தி உள்ளேன். இந்தியா-பாகிஸ்தான் சண்டையும் என்னால் தான் தீர்க்கப்பட்டது என தொடர்ந்து சொல்லி வருகிறார். நேற்று நடந்த ஐ.நா.சபை கூட்டத்திலும் அவர் இதே கருத்தை வலியுறுத்தினார். ஆனால் இந்தியா இதனை நிராகரித்துள்ளது.
இதற்கிடையே, 7 போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என அதிபர் டிரம்ப் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியதாவது:
காசா போரை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல முடியும்.
இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு மட்டுமே உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது செய்யக்கூடிய நபராக டிரம்ப் இருக்கிறார்.
காசாவில் இஸ்ரேல் அரசு தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அமெரிக்கா இஸ்ரேல் மீது அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது.
காசா மோதலை நடத்த அனுமதிக்கும் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு நாங்கள் வழங்குவதில்லை.
நாங்கள் ஒருபோதும் செயலற்றவர்களாக இருக்கமாட்டோம். எப்போதும் பிரான்சின் நலன்களைப் பாதுகாப்போம் என தெரிவித்தார்.