உலகம்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்போம் - பிரிட்டன் முடிவுக்கு நேதன்யாகு கடும் எதிர்ப்பு
- ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அறிவிப்பதாக தெரிவித்தார்.
- ஹமாஸினால் பாதிக்கப்பட்டவர்களை தண்டிப்பதாக நேதன்யாகு குற்றம் சாட்டினார்.
செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முன்வரவில்லை என்றால், பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்தார்.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பிரிட்டனை கடுமையாக சாடியுள்ளார். பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வெகுமதி அளித்து ஹமாஸினால் பாதிக்கப்பட்டவர்களை தண்டிப்பதாக நேதன்யாகு குற்றம் சாட்டினார்.
தங்கள் எல்லையில் உள்ள பிரதேசத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பது எதிர்காலத்தில் பிரிட்டனுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அவர் எச்சரித்தார். பயங்கரவாதிகளை திருப்திப்படுத்துவது பலனளிக்காது என்றும், பிரிட்டனிலும் அதுவே நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்தார். இந்த முடிவை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கண்டித்தது குறிப்பிடத்தக்கது.