உலகம்

ஜெருசலேம்: பேருந்து நிறுத்தத்தில் துப்பாக்கிச்சூடு - 6 பேர் பலி
- பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்கள் மீதும், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
- துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் பீதியில் மக்கள் ஓடுவது கார் ஒன்றில் பொருத்தப்பட்ட டேஷ் கேமராவில் பதிவாகியது.
இஸ்ரேலின் ஜெருசலேமில் மரம் நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
இன்று (திங்கட்கிழமை) ஜெருசலேமில் உள்ள ராமோத் சந்திப்பில் காலை 10 மணியளவில் காரில் துப்பாக்கிகளுடன் வந்த இருவர் பேருந்து நிறுத்தத்தில் இருந்த மக்கள் மீதும், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த ஒரு பாதுகாப்பு காவலர் திருப்பிச் சுட்டதில் தாக்குதல் நடத்திய இருவரும் உயிரிழந்தனர்.
இதற்கிடையே குண்டடிபட்டு போதும்மாக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மற்றும் 12 பேர் காயமடைந்தனர் . அவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் பீதியில் மக்கள் ஓடுவது கார் ஒன்றில் பொருத்தப்பட்ட டேஷ் கேமராவில் பதிவாகியது. இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
தாக்குதல் நடத்தியவர்கள் மேற்குக் கரையிலிருந்து வந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.