உலகம்

ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.9ஆக பதிவு
- நிலநடுக்கம் காரணமாக குயின்ஸ்லாந்தில் ரெயில் சேவையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது.
- மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரை பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. நூநாவுக்கு மேற்கே 60 கிமீ தொலைவிலும், பிரிஸ்பேனுக்கு வடக்கே 250 கிமீ தொலைவிலும் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 4.9-ஆக பதிவானது.
சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் இருந்து பிரிஸ்பேன் மற்றும் சன்ஷைன் கடற்கரையிலிருந்து கோல்ட் கடற்கரை வரை உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக குயின்ஸ்லாந்தில் ரெயில் சேவையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. முர்கன் உள்பட சில பகுதிகளில், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
Next Story