உலகம்

மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்க மாட்டேன் - டிரம்ப் கறார்!
- இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.
- நியூ யார்க்கில் நடக்கும் 80வது ஐநா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் மேலும் இஸ்ரேலிய குடியேற்றத்தை விரிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய E1 குடியேற்ற விரிவாக்க திட்டத்தை இஸ்ரேல் அரசு தொடங்கியுள்ளது
இஸ்ரேலில் குடியேறிகளுக்கு 3,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமே E1 ஆகும்.
இதற்கிடையே பாலஸ்தீனம் என்று ஒரு நாடு கிடையாது என்ற இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் மேற்கு கரையை இஸ்ரேல் இணைத்துக்கொள்ளுமா? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிலளித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன். இஸ்ரேல் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கமுடியாது. இதுவரை நடந்ததுபோதும். இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது" என்று தெரிவித்தார்.
நியூ யார்க்கில் நடக்கும் 80வது ஐநா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் டிரம்ப் -இன் கருத்து வந்துள்ளது.