என் மலர்

    பிரிட்டன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது.
    • இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது.

    லண்டன்:

    இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கிக் கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.

    எனவே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது. ஸ்பெயின், பிரான்சிலும் சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்திலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். சமூக ஊடக தடை சட்டத்திற்கான ஆலோசனை கடந்த மாதம் தொடங்கப்பட்டது. விரைவில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்தன.
    • அவரது உயிரிழப்புக்கு புதின்தான் காரணம் என நவால்னியின் மனைவி குற்றம் சாட்டினார்.

    லண்டன்:

    ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி மீது இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. இதனால் கடந்த 2013-ல் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட் அவமதிப்பு உள்பட பல்வேறு வழக்குகளில் அலெக்சி நவால்னிக்கு மொத்தம் 19 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2021 முதல் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.

    இதற்கிடையே, அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக ரஷிய ஊடகங்களில் செய்தி வெளியானது. ஏற்கனவே,

    உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ள அதிபர் புதினுக்கு அலெக்சி நவால்னியின் மரணம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. அவரது உயிரிழப்புக்கு புதின்தான் காரணம் என நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், ரஷியாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் உறுதிசெய்தன.

    இந்த நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகள் இதனை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த அவரது உடலில் எபிபாட்டடின் (Epibatidine) என்ற விஷம் இருந்ததை இந்த நாடுகள் உறுதி செய்தன. இது தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு தவளை இனத்துக்குள்ள விஷம் என இந்த நாடுகள் தெரிவித்துள்ளனர்.

    சர்வதேச சட்ட விதிகளைப் புறக்கணித்து இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தி உள்ளது எனக்கூறிய இந்த நாடுகள், ரசாயன ஆயுத பயன்பாடு தொடர்பான விவகாரத்தில் ரஷ்யா மீது இந்த நாடுகள் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டிரம்ப்பின் பேச்சு நேட்டோ மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டையும் அவமதிப்பதாக உள்ளது.
    • நேட்டோ துருப்புக்களின் தியாகங்களைப் பற்றி உண்மையாகவும் மரியாதையுடனும் பேசப்பட வேண்டும்.

    டென்மார்க்கின் தன்னாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை கைப்பற்ற நினைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவுக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, நேட்டோ அமைப்பில் அமெரிக்காவை தவிர பிறநாடுகளின் படைகள் முக்கிய பங்காற்றவில்லை. ஆப்கானிஸ்தான் போரில் முன்களத்தில் அமெரிக்க படையினரே இருந்தனர், பிற நாடுகளின் படையினர் முன்களத்தில் இல்லை. நேட்டோ அமைப்பில் பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கவில்லை. அவர்கள் நமக்கு தேவையும் இல்லை என்றார்.

    டிரம்பின் கருத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறும்போது, டிரம்ப்பின் பேச்சு நேட்டோ மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டையும் அவமதிப்பதாக உள்ளது. அந்த கருத்து அவமானகரமானவை மற்றும் வெளிப்படை யாகவே அதிர்ச்சியூட்டு பவை. இதற்கு டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

    அதேபோல் இங்கிலாந்து இளவரசர் ஹாரி கூறும் போது, "ஆப்கானிஸ்தானில் நான் பணியாற்றினேன். அங்கு வாழ்நாள் முழுவதும் நண்பர்களை உருவாக்கினேன். அங்கு நண்பர்களை இழந்தேன். நேட்டோ துருப்புக்களின் தியாகங்களைப் பற்றி உண்மையாகவும் மரியாதையுடனும் பேசப்பட வேண்டும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் பாஸ்போர்ட் தேர்வு செய்யப்பட்டது.
    • அதன்படி, சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 193 நாடுகளுக்குப் பயணிக்க முடியும்.

    லண்டன்:

    விசா இன்றி வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஹென்லி பாஸ்போர்ட் பட்டியல் வெளியிடுகிறது.

    ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026 பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து 3வது முறையாக உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

    அதன்படி, சிங்கப்பூர் குடிமக்கள் விசா இல்லாமல் 193 நாடுகளுக்குப் பயணிக்க முடியும்.

    இந்தப் பட்டியலின்படி ஜப்பான், தென்கொரிய பாஸ்போர்ட்டுகள் 2-வது இடத்தில் உள்ளன. 3-ம் இடத்தில் உள்ள டென்மார்க், ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து பாஸ்போர்ட் மூலம் 186 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம். அமெரிக்கா ஒரு புள்ளி சரிந்து 10வது இடத்தில் உள்ளது; அந்நாட்டு பாஸ்போர்ட் மூலம் 179 நாடுகளுக்கு பயணம் செய்யலாம். இந்தப் பட்டியலில் இந்தியா 85-வது இடம் பிடித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏடிபி ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது.
    • ஸ்பெயின் வீரர் அல்காரஸ் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    லண்டன்:

    இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஏடிபி ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது.

    அதன்படி, ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 12,050 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

    இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 11,500 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் 5,105 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4,780 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

    இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி 4,105 புள்ளிகளுடன் 2 நிலைகள் உயர்ந்து 5ம் இடம் பிடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டிமினார் 6வது இடத்தில் தொடர்கிறார். கனடா வீரர் பெலிக்ஸ் அகர் அலிஸியாமே 2 நிலை சரிந்து 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    அமெரிக்காவின் பென் ஷெல்டன், டெய்லர் பிரிட்ஸ், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் புப்லிக் ஆகியோர் 8,9 மற்றும் 10-வது இடத்தில் உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுவீடனைச் சேர்ந்த கிரெட்டா தன்பெர்க் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்காக அறியப்படுபவர்.
    • பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கும் பதாகையை கைகளில் வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீன ஆக்சன் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக கூறி அந்நாட்டு அரசு தடை செய்தது.

    இதற்கிடையே, நாடு முழுவதும் நடந்த முந்தைய போராட்டங்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் விசாரணைக்காக காத்திருக்கும் நிலையில், ஜாமீன் இன்றி தடுத்து வைக்கப்பட்டதைக் கண்டித்து பாலஸ்தீன ஆக்சன் அமைப்பைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் 52 நாட்களாக பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பாலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கும் பதாகையை கைகளில் வைத்திருந்ததற்காக கிரெட்டா தன்பெர்க் லண்டனில் கைது செய்யப்பட்டார்.

    'பிரிசனர்ஸ் ஃபார் பாலஸ்தீன்' என்ற போராட்டக் குழுவானது கிரெட்டா பதாகை வைத்திருக்கும் புகைப்படத்தை ஊடகங்களில் பகிர்ந்தது.

    சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரெட்டா தன்பெர்க் ஒரு இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர். காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்காக உலகம் முழுவதும் அறியப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புத்தாண்டிற்கு பிறகு எனது புற்றுநோய்க்கான சிகிச்சை குறைந்துவிடும்.
    • நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றார் மன்னர் சார்லஸ்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (96), 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டார்.

    மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் கடந்த ஆண்டு மே மாதம் கோலாகலமாக நடைபெற்றது. உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் முடிசூட்டு விழாவில் பங்கேற்றனர்.

    இதற்கிடையே, மன்னர் சார்லசுக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதில் அவருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், பிரிட்டன் மன்னர் சார்லஸ் தனிப்பட்ட காணொளியில் கூறியதாவது:

    புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது அந்நோய் பாதிப்பிலிருந்து எளிதாக மீள்வதற்கு உதவுகிறது.

    புத்தாண்டிற்கு பிறகு எனது புற்றுநோய்க்கான சிகிச்சை குறைந்துவிடும். நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    புற்றுநோய் பாதிப்பை விரைவாக அறிந்து, சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.

    தொடக்கத்திலேயே புற்றுநோயைக் கண்டறிவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை நேரடியாக பெற்றுள்ளேன்.

    சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்ததால்தான், இன்று நான் சிகிச்சையில் இருக்கும்போதும்கூட சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்.

    புற்றுநோயியல் நிபுணர்கள், செவிலியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்களின் தன்னலமற்ற பணிகளுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தத் தொடர் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளது.
    • தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் 6-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடைபெறும் ஒரு தொழில்முறை 100 பந்து போட்டியே தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர். இதில் 8 அணிகள் பங்கேற்கும்.

    இந்தத் தொடரில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளது.

    இந்தத் தொடரின் 6-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான லண்டன் ஸ்பிரிட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தினேஷ் கார்த்திக் ஏற்கனவே ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலும் இதே பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சர்வதேச கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது.
    • மொத்தமுள்ள 169 வாக்குகளில் 154 வாக்குகள் இந்தியாவுக்கு கிடைத்தது.

    லண்டன்:

    சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐ.எம்.ஓ) கடல்சார் தொழிலை ஒழுங்குபடுத்தும் முன்னணி அதிகார அமைப்பாகும். இது உலகளாவிய கடல்சார் வர்த்தகம், போக்குவரத்து மற்றும் அனைத்து கடல்சார் நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

    இந்நிலையில், சர்வதேச கடல்சார் அமைப்பின் நிர்வாகக் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது சர்வதேச கடல்சார் அமைப்பின் (ஐ.எம்.ஓ) கவுன்சிலுக்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. மொத்தமுள்ள 169 வாக்குகளில் 154 வாக்குகள் இந்தியாவுக்கு ஆதரவாகக் கிடைத்தது.

    இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய கடல்சார் களத்தில் தொடர்ந்து சேவை செய்வதற்காக, இந்தியாவிற்கான சர்வதேச கடல்சார் அமைப்பில் சர்வதேச சமூகத்தின் பெரிய அளவிலான ஆதரவை இந்தியா பெற்றுள்ளது என தெரிவித்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவை ஏலத்துக்கு விடப்படுகின்றன.

    லண்டன்:

    இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு 1912-ம் ஆண்டு டைட்டானிக் என்ற கப்பல் புறப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலில் சென்றபோது அந்தக் கப்பல் பனிப்பாறையில் மோதியது.

    உலகையே உலுக்கிய இந்த விபத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து 1997-ம் ஆண்டு டைட்டானிக் என்ற பெயரில் திரைப்படமாக வந்து பலரது கவனத்தையும் ஈர்த்தது.

    இதற்கிடையே, அந்தக் கப்பலில் பயணித்தவர்களின் உடைமைகள் மீட்கப்பட்டு அவ்வப்போது ஏலத்துக்கு விடப்படுகின்றன.

    இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபரான இசிடோர் ஸ்ட்ராஸ் என்ற பயணியின் தங்க கடிகாரம் ஒன்று இங்கிலாந்தின் வில்ட்ஷயர் நகரில் ஏலத்துக்கு விடப்பட்டது. இந்தக் கடிகாரம் சுமார் ரூ.20 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

    இது டைட்டானிக் கப்பல் தொடர்பான நினைவுப் பொருட்களின் அதிகபட்ச ஏலத்தொகை ஆகும். இதன்மூலம் டைட்டானிக் தொடர்பான மொத்த ஏலத்தொகை ரூ.35 கோடியை தாண்டியதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த 66,000 போ கொல்லப்பட்டனர்.
    • காசாவில் சுமார் 20,000 பேர் பசி, பட்டினியால் தவிக்கவிடப்பட்டனர்.

    பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தாக்குதல் நடத்தியது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்தப் போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அங்கு அவ்வப்போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்தப் போரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த 66,000 போ கொல்லப்பட்டனர். சுமார் 20,000 பேர் பசி, பட்டினியால் தவிக்கவிடப்பட்டனர்.

    இந்நிலையில், "ஈரானை விட பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இஸ்ரேல்தான்" என அறிவித்து Oxford Union Society தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    இங்கிலாந்தின் 202 ஆண்டுகள் பழமையான விவாத சங்கமான Oxford Union Society-யில், பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு நடந்த வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேறியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மன்னர் சார்லஸ் பணிமனை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் நகரில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பில் ரெயில் பணிமனை கட்டும் பணி நடந்து வந்தது.

    இதில் 36 புதிய டிராம் வண்டிகள் நிறுத்தப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது.

    இதற்கிடையே, கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

    இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மன்னர் சார்லஸ் பணிமனை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

    அதன்பின் யாரும் எதிர்பாரா வகையில் திடீரென அவரே அந்த டிராம் வண்டியை சிறிது தூரத்துக்கு ஓட்டிச் சென்றார்.

    அதன்பிறகு டிராம் வண்டிக்குள் பொதுமக்களுடன் பயணித்தார். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

    ×