என் மலர்

    பிரிட்டன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தை ஒன்று மூன்று ஆணுறுப்புகளுடன் பிறந்தது.
    • வாழ்நாள் முழுக்க தன் நிலையை அறியாமலேயே வாழ்ந்திருக்கலாம்.

    பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அரிய பிறவி குறைபாடு என்ற வகையிலும் இது உலகில் இரண்டாவது நிகழ்வு ஆகும். மருத்துவ உலகில் இது 'டிரிஃபாலியா' என்று அழைக்கப்படுகிறது.

    2020 ஆம் ஆண்டு ஈராக் நாட்டின் டுஹோக்கில் டிரிஃபாலியா குறைபாட்டை மருத்துவர்கள் முதன் முதலில் பதிவு செய்தனர். அப்போது குழந்தை ஒன்று, 3 ஆணுறுப்புகளுடன் பிறந்தது.

    பர்மிங்காம் மருத்துவப் பள்ளியின் மாணவர் ஆராய்ச்சியாளர்கள் 78 வயது முதியவரின் சடலத்தை ஆய்வு செய்தனர். முதியவர் தனது உடலை ஆய்வுக்கு பயன்படுத்த அனுமதி அளித்த நிலையில், அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது. அந்த முதியவர் தன் வாழ்நாள் முழுக்க தன் நிலையை அறியாமலேயே வாழ்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.

    டிஃபாலியா, அல்லது இரண்டு ஆண்குறிகள் கொண்ட நிலை, டிரிபாலியாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் பொதுவான நிகழ்வு ஆகும். உலகில் ஐந்து முதல் ஆறு மில்லியன் மக்களில் ஒருவரை மட்டுமே இது பாதிக்கிறது. இன்றுவரை சுமார் 100 பேருக்கு மட்டுமே  டிஃபாலியா ஏற்பட்டுள்ளது.

    ஜர்னல் ஆஃப் மெடிக்கல் கேஸ் ரிப்போர்ட்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, டிரிஃபாலியாவின் ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மூன்று தனித்தனி ஆண்குறி தண்டுகள் இருப்பதால் வகைப்படுத்தப்படும் ஒரு அரிய பிறவி நிலை என வரையறுக்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூண்டில் உள்ள பறவைகளுக்கு உணவளித்து, வீட்டை துடைத்து, சமையல் செய்து வைத்தார்
    • டாமியன் சிறுவயது முதலே தங்க வீடில்லாமல் பல கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளார்

    பிரிட்டனில் திருடப் போன வீட்டில் கூட்டிப் பெருக்கி, சாப்பாடு சமைத்து, துணிதுவைத்து காயப்போட்டுவிட்டு தப்பிய பலே திருடன் பற்றிய உண்மை வெளிவந்துள்ளது. பிரிட்டனில் கார்டிப் [Cardiff] நகரில் தனியாக வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டில் திருடுவதற்காக டாமியன் வோஜ்னிலோவிச் [Damian Wojnilowicz] என்ற 36 வயது திருடன் உள்ளே நுழைந்துள்ளான்.

     

    பெண் வீட்டில் இல்லாத சமயமாகப் பார்த்து நுழைந்த டாமியன், வீட்டில் சேர்ந்த குப்பைகளை அப்புறப்படுத்தி, சமையலறை, கழிவறையில் உள்ள பொருட்களைச் சீராக அடுக்கி வைத்து, கடையில் வாங்கி வைத்திருந்த பலசரக்கு பொருட்களை பிரிட்ஜில் அடுக்கி வைத்து , கூண்டில் உள்ள பறவைகளுக்கு உணவளித்து, வீட்டை துடைத்து, சமையல் செய்து, துணிகளைத் துவைத்து அதைக் காயப்போட்டு விட்டுச் சென்றுள்ளார்.

     

    வீட்டை விட்டு வரும்போது, 'டோன்ட் வொரி, பி ஹாப்பி, நன்றாக சாப்பிடுங்கள்' என்று எழுதி வைத்துவிட்டும் வந்துள்ளார். வீட்டில் வசித்து வந்த அந்தப்பெண் திரும்பிவைத்தும் இதைப் பார்த்து அதிர்ந்துபோனார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தபின், திருடனின் வினோத செய்கையால் பயந்து தனது வீட்டில் வசிக்காமல் தோழி வீட்டில் தங்கியுள்ளார்.

    இந்த சம்பவம் ஜூலை 16 ஆம் தேதி நடந்த நிலையில் ஒருவாரம் கழித்து ஜூலை 26 ஆம் தேதி மற்றொரு வீட்டில் திருடும்போது டாமியன் பிடிபட்டுள்ளார். டாமியன் சிறுவயது முதலே தங்க வீடில்லாமல் பல கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளார் என்று அவரது வக்கீல் தெரிவித்தார். இதுதொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் அவர் மீது விசாரணை நடந்து வரும் வேலையில் இந்த விசித்திர திருடனின் கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓஷோ ஆசிரமத்தில் உள்ளவர்கள் உடலுறவு வைத்து கொள்வதை குழந்தைகள் தவறாமல் பார்க்க வேண்டும்.
    • எனது 7 முதல் 11 வயதுவரை ஆசிரமத்தில் உள்ள வயது வந்த ஆண்களுடன் பாலியல் செயல்களைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன்.

    இந்தியாவில் பிறந்து, தனது ஆன்மீக சொற்பொழிவுகளால் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்தவர் ஓஷோ.

    இந்தியாவில் ஆசிரமம் தொடங்கி பின்னர் அமெரிக்காவில் உள்ள ஓரேகானில் குடியேறி அங்கேயே ஒரு ஆசிரமத்தையும் அமைத்தார். பாலியல் சுதந்திரம் குறித்து ஓஷோவின் சொற்பொழிவுகள் மிக புகழ்பெற்றவை.

    இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த 54 வயதான பிரேம் சர்கம் என்ற பெண் ஓஷோவின் ஆசிரமத்தில் 50க்கும் மேற்பட்ட முறை பலாத்தகாரம் செய்யப்பட்டேன் என்று பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய பிரேம் சர்கம், 6 வயதில் எனது தந்தையுடன் இங்கிலாந்தில் இருந்து புனேவில் உள்ள ஓஷோவின் ஆசிரமத்தில் சேர்ந்தேன்

    ஆசிரமத்தில் உள்ளவர்கள் உடலுறவு வைத்து கொள்வதை குழந்தைகள் தவறாமல் பார்க்க வேண்டும் என்றும் பெண்கள், பருவமடைந்தவுடன் பாலியல் வழிகாட்டுதலுக்காக வயது வந்த ஆண்களைத் தேட வேண்டும் என்று கற்பிக்கப்பட்டது.

    தன்னுடைய 7 வயதில் முதல்முறையாக பாலியல் தொல்லைகளுக்கு ஆளானேன். எனது 7 முதல் 11 வயதுவரை ஆசிரமத்தில் உள்ள வயது வந்த ஆண்களுடன் பாலியல் செயல்களைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். 12 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்.

    பின்னர் புனேவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்று ஒரேகானில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தாயுடன் சேர்ந்தேன். அங்கு குறைந்தது 50 முறைக்கு மேல் பலாத்காரம் செய்யப்பட்டேன். 16 வயதில் தான் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து எனக்கு புரிந்தது

    ஓஷோ ஆசிரமத்தில் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்ட 2 பிரிட்டிஷ் பெண்களின் கதையுடன் என்னுடைய கதையையும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ள சில்ட்ரன் ஆஃப் தி கல்ட் ஆவணப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. எனக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை உலகம் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த கடைசி அனல் மின் நிலையம் மூடப்பட்டது.
    • தற்போது அங்கு காற்று, சூரிய ஒளி மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை மூலமே பெருமளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

    லண்டன்:

    காலநிலை மாற்றம் என்பது இன்றைய உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதனால் புவி வெப்பமயமாதல், அதீத கனமழை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    எனவே காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கை எடுக்க கோரி உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனால் புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதை குறைத்து, சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த உலக நாடுகள் முயற்சிக்கின்றன.

    அதன்படி வருகிற 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து ஆற்றலையும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து பெற இங்கிலாந்து இலக்கு நிர்ணயித்துள்ளது.

    எனவே தலைநகர் லண்டனில் செயல்படும் ராட்கிளிப் அனல் மின் நிலையத்தை மூட அரசாங்கம் முடிவு செய்தது. இதனையடுத்து 142 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த அனல் மின் நிலையம் நேற்றுடன் அதன் பணியை நிறைவு செய்தது.

    இதன்மூலம் இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த கடைசி அனல் மின் நிலையமும் மூடப்பட்டது. இதுகுறித்து எரிசக்தி துறை மந்திரி மைக்கேல் ஷாங்க்ஸ் கூறுகையில், `2030-க்குள் நாட்டின் அனைத்து ஆற்றல்களும் புதுப்பிக்கத்தக்க ஆதாரத்தில் இருந்து பெறுவதற்கான முயற்சியில் இது ஒரு மைல்கல் ஆகும்' என பாராட்டு தெரிவித்தார்.

    இங்கிலாந்தில் 1990-ம் ஆண்டு நாட்டின் மின் உற்பத்தியில் சுமார் 80 சதவீதம் அனல் மின் நிலையம் மூலமே பெறப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த ஆண்டு மின்சார தேவையில் வெறும் 1 சதவீதம் மட்டுமே அனல் மின் நிலையம் மூலம் பெறப்பட்டது.

    தற்போது அங்கு காற்று, சூரிய ஒளி மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை மூலமே பெருமளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம் நிலக்கரி பயன்பாட்டை ஒழிக்கும் முதல் பெரிய பொருளாதார நாடாக இங்கிலாந்து மாறி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இங்கிலாந்து 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பிரிஸ்டோல்:

    ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றுள்ளன.

    இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி பிரிஸ்டோலில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே அந்த அணி அதிரடியில் இறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் பிலிப் சால்ட் 27 பந்தில் 45 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய வில் ஜாக்ஸ் டக் அவுட்டானார்.

    3வது விக்கெட்டுக்கு இணைந்த பென் டக்கெட், ஹாரி புரூக் ஜோடி அதிரடியில் மிரட்டியது. ஹாரி புரூக் அரை சதம் கடந்தார். இந்த ஜோடி 132 ரன்கள் சேர்த்த நிலையைல ஹாரி புரூக் 72 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட் சதமடித்து அசத்தினார். அவர் 107 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் போராடிய அடில் ரஷித் 36 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா, ஆரோன் ஹார்டி, மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றது.
    • நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகித்தது. இதன்மூலம் தொடர்ச்சியாக 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி சாதனை படைத்துள்ளது.

    இதற்கிடையே, இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா நேற்று டிஎல்எஸ் முறையில் தோல்வி அடைந்தது.

    முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 304 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து டி.எல்.எஸ். முறைப்படி வெற்ரி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தொடர்ந்து 14 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு இங்கிலாந்து நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 304 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து மழை பெய்ததால் டிஎல்எஸ் முறையில் வெற்றி பெற்றது.

    லண்டன்:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி செஸ்டர் லீ-ஸ்டிரீட்டில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 304 ரன்கள் குவித்தது. அலெக்ஸ் கேரி 77 ரன்னும், ஸ்டீவ் சுமித் 60 ரன்னும், ஆரோன் ஹார்டி 44 ரன்னும், கேமரூன் கிரீன் 42 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் டக் அவுட்டானார். பென் டக்கெட் 8 ரன்னில் வெளியேறினார்.

    3-வது விக்கெட்டுக்கு இணைந்த வில் ஜாக்ஸ், ஹாரி புரூக் ஜோடி பொறுப்புடன் ஆடி 156 ரன்களை சேர்த்தது. வில் ஜாக்ஸ் அரை சதம் கடந்து 84 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஹாரி புருக் சிறப்பாக ஆடி சதம் கடந்தார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 37.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டிஎல்எஸ் முறை பின்பற்றப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூல ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 1-2 என பின்தங்கி உள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கன்பூசியஸ் கல்வி நிறுவனங்களை மூடுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
    • இங்கிலாந்து அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சீன ஆதரவு பெற்ற 30 கன்பூசியஸ் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை சீனாவின் கலாசாரத்தை சர்வதேச அளவில் பரப்புவதற்கான பணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கிடையே இந்த கல்வி நிறுவனங்கள் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக செயல்பாடுகளிலும் செல்வாக்கு செலுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே அங்குள்ள கன்பூசியஸ் கல்வி நிறுவனங்களை மூடுவதாக முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தார்.

    இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் கன்பூசியஸ் கல்வி நிறுவனங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக செயல்பாடுகளில் தலையிடுவது நிரூபணமானது. எனவே அந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை முற்றிலும் நிறுத்துவதாக இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. அதே சமயம் கன்பூசியஸ் கல்வி நிறுவனங்களை மூடுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இங்கிலாந்து அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 270 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 44.4 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அலெக்ஸ் கேரி 74 ரன்னும், மிட்செல் மார்ஷ் 60 ரன்னும் எடுத்தனர். மேத்யூ ஷாட், டிராவிஸ் ஹெட் தலா 29 ரன்கள் அடித்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத், ஜேக்கம் பெத்தேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்கியது. ஜேமி ஸ்மித் ஓரளவு தாக்குப் பிடித்து 49 ரன் எடுத்தார். பென் டக்கெட் 32 ரன் சேர்த்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், இங்கிலாந்து 40.2 ஓவரில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், ஹார்டி, மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய இங்கிலாந்து 315 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 44 ஓவரில் வெற்றி பெற்றது.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அதிரடியாக ஆடி 315 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 95 ரன்னிலும், வில் ஜாக்ஸ் 62 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹாரி புரூக் 39 ரன்னும், ஜேமி சுமித் 23 ரன்னும், ஜேக்கப் பெத்தேல் 35 ரன்கள் எடுத்தனர்.

    ஆஸ்திரேலிய சார்பில் மார்னஸ் லாபுசாக்னே, ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் 10 ரன்னிலும், ஸ்மித், கேமரூன் கிரீன் தலா 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதிரடியாக் ஆடிய டிராவிஸ் ஹெட் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவருக்கு லபுசாக்னே ஒத்துழைப்பு கொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 148 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், ஆஸ்திரேலியா 44 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் 129 பந்தில் 5 சிக்சர், 20 பவுண்டரி உள்பட 154 ரன்னும், லபுசாக்னே 61 பந்தில் 77 ரன்னும் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தாண்டு ஜூன் 1 ஆம் தேதி ரோஸி என்ற பூனை தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது.
    • 1991ல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தது.

    உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஸி (33) என்ற பூனை இன்று உயிரிழந்தது

    இந்தாண்டு ஜூன் 1 ஆம் தேதி ரோஸி தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது. 1991ல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இங்கிலாந்தில் உள்ள நார்விச் நகரில் உள்ள அவரது உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்தது.

    33 ஆண்டுகள் வாழ்ந்த ரோஸியின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய சாமர்செட் அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய குளோசெஸ்டர் அணி 15 ஓவரில் வெற்றி பெற்றது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 லீக் தொடரில் டி20 பிளாஸ்ட் தொடரும் ஒன்று.

    இந்நிலையில், டி20 பிளாஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சாமர்செட் மற்றும் குளோசெஸ்டர்ஷைல் அணிகள் மோதின. டாஸ் வென்ற குளோசெஸ்டர்ஷைல் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சாமர்செட் அணி 19.4 ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் லூயிஸ் கிரெகோரி அரை சதமடித்து 53 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குளோசெஸ்டர்ஷைல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதமடித்தனர்.

    இறுதியில், 15 ஓவரில் குளோசெஸ்டர் ஷைல் அணி 129 ரன்கள் எடுத்து வென்றதுடன், கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

    ×