என் மலர்

    ஸ்பெஷல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2025-ம் ஆண்டு உலக புத்தக தினத்திற்கான கருப்பொருள் "உங்கள் வழியைப் படியுங்கள்" என்பதாகும்.
    • புரட்சிப் பாதையில் கைதுப்பாக்கிகளை விட பெரிய ஆயுதம் புத்தகம் மட்டுமே - லெனின்

    புத்தகங்களை விட சிறந்த நண்பன் வேறில்லை என்பதை புத்தக பிரியர்கள் மனமார ஒப்புக்கொள்வார்கள். அத்தகைய புத்தகங்களைக் கொண்டாட ஒரு தினம் அர்ப்பணிக்கப்படுகிறது.

    1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாகக் கொண்டாடி வருகிறது.

    உலக புத்தக தினம் என்றும் இது அழைக்கப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமை மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

    புத்தக தினமாக கொண்டாடப்படும் ஏப்ரல் 23 ம் தேதி, உலகப்புகழ் பெற்ற டான் குவிக்சாட் நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் விலாதிமீர் நொபோகோவ்ம் மவுரீஸ் டூரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் இது அமைகிறது.

    உலக புத்தக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சி, கருத்தரங்கள் உள்ளிட்ட பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    "ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்" என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணைய பக்கம்.

    2025-ம் ஆண்டு உலக புத்தக தினத்திற்கான கருப்பொருள் "உங்கள் வழியைப் படியுங்கள்" என்பதாகும். இந்தக் கருப்பொருள் குழந்தைகள் வாசிப்பை ஒரு வேலையாகப் பார்ப்பதற்குப் பதிலாக, தங்கள் சொந்த பாணியில் அதைக் கண்டறிந்து, அதில் மகிழ்ச்சி காண ஊக்குவிக்கிறது.

    வாசிப்பை ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது.

    மேற்கோள்கள்:

    புரட்சிப் பாதையில் கைதுப்பாக்கிகளை விட பெரிய ஆயுதம் புத்தகம் மட்டுமே - லெனின் 

    ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் - விவேகானந்தர்

    ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? - ஒரு நூலகம் கட்டுவேன் - மகாத்மா காந்தி

    எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சேகுவாரா

    இந்த உலகத்தை ஒழுக்கமற்றது என்று அழைக்கும் புத்தகங்கள்தான் உலகத்தின் அசலான வடிவத்தை நம்மிடையே காட்டுகிறது - ஆஸ்கர் ஒயில்ட்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அவசியமாகும்.நாளைய தலைமுறைக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாது செய்வோம் என உறுதியேற்போம்.

    நீர் இன்றி அமையாது உலகு..என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

    இன்று 'உலக தண்ணீர் தினம்'

    உயிர்களின் அடிப்படை தேவையாக தண்ணீர் அமைந்து உள்ளது.உணவு தயாரிப்பது, குளிப்பது, குடிப்பது மற்றும் விவசாய உற்பத்தி, தொழிற்சாலை உற்பத்தி என மனிதனின் அன்றாட வாழ்வில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறதுஒரு நபருக்கு தினமும்  80 லிட்டர் தண்ணீர் சராசரியாக தேவைப்படுகிறது.

    மக்கள் தொகை பெருக்கம்,தொழிற்சாலைகள் அதிகரிப்பு,உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.உலகில் பல நாடுகளில் பல லட்சம் மக்கள் சுகாதாரமான குடிநீர், தண்ணீர் இல்லாமல் உள்ளனர்.




    பூமியின் மேற்பரப்பில் இருக்கும் நீரில் 97.5 சதவீதம் உப்புத் தன்மையும் 2.5 சதவீதம் மட்டுமே நல்ல தண்ணீரும் உள்ளது.டெல்லி, ஐதராபாத், சென்னை, பெங்களூரு உளிட்ட பல்வேறு நகரங்களில் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    பருவநிலை மாற்றம், மழைப் பொழிவு குறைவு மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு உருவாகிறது.




    1992-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஐ.நா சபை மாநாட்டில் ' உலக தண்ணீர் தினம்' முடிவு செய்யப்பட்டது.அதன்பேரில் 1993 முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 - ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்த. தினத்தில் பொதுமக்களுக்கு தண்ணீர் சேமிப்பு, அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர், நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அவசியமாகும்.

    தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துவோம்...நாளைய தலைமுறைக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாது செய்வோம் என உறுதியேற்போம்.

    ×