என் மலர்

    ஐக்கிய அரபு அமீரகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 158 ரன்கள் எடுத்தது.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று மற்றும் அரையிறுதி முடிந்துள்ளன.

    இந்நிலையில், துபாயில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அமெலியா கெர் 43 ரன்களும் ப்ரூக் மேரி ஹாலிடே 38 ரன்களும் அடித்தனர்.

    இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் ஓரளவு தாக்குப் பிடித்து 33 ரன்கள் எடுத்தார்.

    முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 128 ரன்கள் எடுத்தது.

    ஷார்ஜா:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற 2வது அரையிறுதியில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜார்ஜியா பிளிம்மர் அதிக பட்சமாக 33 ரன்கள் எடுத்தார். சூஸ் பெட்ஸ் 26 ரன்கள் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் தியேந்திரா டோடின் 4 விக்கெட்டும், பிளெட்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர். அந்த அணியின் தியேந்திரா டோடின் ஓரளவு போராடி 33 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15 முறை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
    • கடந்த ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததற்கு தென் ஆப்பிரிக்கா பழிதீர்த்துக் கொண்டது.

    துபாய்:

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15 வெற்றிகள் பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு தென் ஆப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பழியும் தீர்த்துக் கொண்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்தது.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    லீக் சுற்றுகள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், துபாயில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பெத் மூனி அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். எல்லீஸ் பெரி 31 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க வீராங்கனை டஸ்மின் பிரிட்ஸ் 15 ரன்னில் அவுட்டானார். லாரா வோல்வார்ட் 42 ரன்னில் வெளியேறினார். அனேகே போஸ்ச் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 74 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிக விஷமுள்ள பாம்புகளை கண்டால் மாநகராட்சியிடம் தகவல் அளிக்க வேண்டும்.
    • தேள்களில் தடிமனான வாலுடைய வகை கொடிய விஷமுடையதாகும்.

    துபாய்:

    அமீரக பாலைவனத்தில் முகாமிடும்போது விஷமுள்ள பாம்புகள் மற்றும் தேள் போன்ற பூச்சி வகைகளை கண்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அமீரகத்தில் உள்ள நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    அதன் தொகுப்பு பின்வருமாறு:-

    அமீரக பாலைவன பகுதிகளில் முகாமிடுவது ஒரு புதுமையான அனுபவத்தை தருகிறது. பாலைவன பகுதி வெப்பம், குளிர் கலந்த அழகிய தரிசு நிலப்பரப்பாகும். இங்கு உலாவும் தனித்துவமான வன உயிரினங்கள் மற்றும் இரவு நேரத்தில் மின்னும் நட்சத்திரங்கள் ஆகியவை பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் பாலைவன பகுதிகளில் முகாமிடுபவர்களுக்கு ஆபத்துகளும் காத்திருக்கிறது. குறிப்பாக அமீரக பாலைவனங்களில் ஆபத்தை வரவழைக்கும் விஷமுள்ள பாம்புகள் மற்றும் தேள்கள் இருக்கும் என்பதை அங்கு முகாமிடுபவர்கள் மனதிற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் இதுபோன்ற உயிரினங்கள் இலை குவியல்கள் மற்றும் அடர்ந்த தாவரங்களுடைய நிழலில் ஒளிந்திருக்கும்.

    சரி அவ்வாறு முகாமிடும் பார்வையாளர்கள் விஷமுள்ள பாம்பு அல்லது பூச்சியினங்களை கண்டால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். முதலில் அவற்றை கண்டதும் பயப்பட கூடாது. பெரும்பாலான பாம்புகள் மனிதர்களை தவிர்க்கும். தேவையில்லாமல் மனிதர்களை அவை தாக்குவதில்லை. எனவே பாம்புகளை கண்டால் மெதுவாக அங்கிருந்து விலகி சென்று விட வேண்டும். அவை அங்கிருந்து செல்லும் வரை அமைதியாக இருக்க வேண்டும். அவைகளை கைகளால் பிடிப்பதோ அல்லது தொட முயற்சிப்பதோ கூடாது. அதிக விஷமுள்ள பாம்புகளை கண்டால் மாநகராட்சியிடம் தகவல் அளிக்க வேண்டும்.

    வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பான தொலைவில் விட வேண்டும். உணவு பொருட்களை முகாம் அருகில் வீசக்கூடாது. ஒருவேளை பாம்பு அல்லது தேள் கடித்து விட்டால் வேகமாக செயல்படுவதை அல்லது அசைவதை நிறுத்த வேண்டும். ஐஸ் கட்டிகள், காயத்தை வெட்டி ரத்தத்தை உறிஞ்சி எடுப்பது போன்றவைகளை தவிர்க்க வேண்டும். இது மேலும் தீங்கு விளைவிக்கும். உடனடியாக கடித்த பாம்பு அல்லது தேளை பாதுகாப்பான தொலைவில் இருந்து படம் பிடித்துக்கொண்டு சிகிச்சைக்கு மருத்துவ குழுவின் உதவியை நாட வேண்டும்.

    அவர்களிடம் அந்த பாம்பு புகைப்படத்தை காட்டினால் அதற்கு ஏற்றவாறு விஷ முறிவு சிகிச்சை அளிப்பர். அமீரக பாலைவன பகுதிகளில் அரேபியன் சேன்ட் வைப்பர், அரேபியன் ஹார்ன்டு வைப்பர், சா ஸ்கேல்டு வைப்பர், பிளாக் டெசர்ட் கோப்ரா (பாலைவன கருநாகம்) ஆகிய விஷமுள்ள பாம்புகள் உள்ளன. தேள்களில் தடிமனான வாலுடைய வகை கொடிய விஷமுடையதாகும்.

    எனவே நடக்கும்போது கணுக்கால் வரை மறைக்கும் வகையிலான ஷூ அணிந்து செல்வது கட்டாயமாகும். உறங்கி விட்டு மீண்டும் அணியும் போது உள்ளே பூச்சிகள் உள்ளனவா? என்பதை சோதனை செய்து விட்டு அணிய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 142 ரன்களை மட்டுமே எடுத்தது.

    சார்ஜா:

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    ஏ பிரிவில் இதுவரை நடைபெற்ற 3 லீக் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 3 வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.

    இந்நிலையில், சார்ஜாவில் இன்று நடைபெற்ற 18வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்னும், மெக்ராத் மற்றும் எலிஸ் பெர்ரி தலா 32 ரன்னும் எடுத்தனர்.

    இந்திய அணி சார்பில் ரேணுகா சிங், தீப்தி சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 20 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 6 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    4வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உடன் தீப்தி சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது.

    இருவரும் சேர்ந்து 63 ரன்கள் சேர்த்த நிலையில் தீப்தி சர்மா 29 ரன்னில் அவுட்டானார். ரிச்சா கோஷ் ஒரு ரன்னில் வெளியேறினார்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து, தனி ஆளாகப் போராடினார்.

    54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் இந்திய அணி 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய வங்கதேசம் 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா எளிதில் வெற்றி பெற்றது.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 17.2 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

    நடப்பு தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி பெறும் 3-வது வெற்றி இதுவாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 82 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்றது.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலியா ரியாஸ் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட்டும், அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 11 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    நடப்பு தொடரில் ஆஸ்திரேலியா அணி பெறும் 3-வது வெற்றி இதுவாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய வங்கதேசம் 103 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி பெற்றது.

    ஷார்ஜா:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று ஷார்ஜாவில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிகர் சுல்தானா அதிகமாக 39 ரன்கள் எடுத்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கரீஷ்மா 4 விக்கெட்டும், பிளெட்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 12.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 34 ரன்கள் எடுத்தார்.

    நடப்பு தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய இந்தியா 172 ரன்கள் அடித்தது.
    • ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரித் கவுர் அரை சதம் விளாசினர்.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் அடித்தது.

    தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா-மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய மந்தனா அரை சதம் விளாசினார். ஷபாலி வர்மா 43 ரன்னில் வெளியேறினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுர் 27 பந்தில் அரைசதம் விளாசி 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    தொடர்ந்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 90 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் ஆஷா சோபனா, அருந்ததி ரெட்டி தலா 3 விக்கெட்டும், ரேணுகா தாக்கூர் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    நடப்பு தொடரில் இந்திய மகளிர் அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த அந்த அணி 99 ரன்கள் எடுத்தது.

    ஷார்ஜா:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஸ்காட்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி தடுமாறியது. அந்த அணியின் அலிசா லிஸ்டர் மட்டும் 26 ரன்கள் எடுத்தார் .

    100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணி வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 11.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த இங்கிலாந்து 118 ரன்கள் எடுத்தது.

    ஷார்ஜா:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இன்று நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இலங்கை அணியை வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. அந்த அணியின் டேனியல் வாட் மட்டும் சிறப்பாக விளையாடி 41ரன்கள் எடுத்தார் .

    119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. அந்த அணியின் வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடாமல் விரைவில் அவுட் ஆகினர். சோபனா மோஸ்ட்ரே மட்டும் 44 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வங்கதேசம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    ×