என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏர் இந்தியா விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.
    • இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.

    குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட் ஏர் இந்தியா விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 242 பேர் பயணம் செய்தனர். விபத்தில் ஒருவரை தவிர்த்து 241 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விமான விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
    • பலரும் ஒவ்வொரு காரணங்களுடன் மகிழ்ச்சியுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகலில் லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஷ்வாஸ் குமார் என்பவரை தவிர 241 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

    இந்த விமானத்தில் பல கனவுகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட டாக்டர், அவரது மனைவி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், லண்டனில் படிக்கும் கணவனை காண புறப்பட்ட புதுப்பெண்ணும், மகளை காண லண்டனுக்கு புறப்பட்ட குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி என பலரும் ஒவ்வொரு காரணங்களுடன் மகிழ்ச்சியுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே விமானம் விபத்து தொடர்பான தகவல்கள் அனைவராலும் உற்று கவனிக்கப்படுகிறது.



    இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானம் குறித்து விசித்திரமான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நேற்று காலை Mid- day ஆங்கில நாளிதழில் முதல் பக்கத்தில் ஏர் இந்தியா விமானம் குறித்து விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. கிட்ஜானியாவின் தந்தையர் தின நிகழ்வை விளம்பரப்படுத்தும் விளம்பரத்தில், ஒரு கட்டிடத்தின் ஓரத்தில் ஒரு அனிமேஷன் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம் கட்டிடத்தில் சிக்கியிருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து பிற்பகலில் நிகழ்ந்த விமான விபத்துக்குப் பிறகு விமானத்தின் முன் பகுதி ஒரு கட்டிடத்தில் சிக்கியது. இதனைக் கண்ட சமூக வலைத்தள பயனர்கள் விளம்பரத்தில் வெளியிடப்பட்ட காட்சியை உண்மையில் நிகழ்ந்திருப்பதாக கூறி வைரலாக்கி வருகின்றனர்.



    விமான விபத்து குறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த தற்செயல் நிகழ்வு வாழ்க்கையின் கணிக்க முடியாத தன்மையை நினைவூட்டுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மெட்ரோ தூண்கள் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
    • மெட்ரோ தூண்களுக்கு இடையே தண்டவாள டிராக் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    சென்னை போரூர் டி.எல்.எப் - எல் அண்ட் டி அருகே மெட்ரோ ரெயில் பணியின்போது இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையே தண்டவாள டிராக் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    மெட்ரோ தூண்கள் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், திட்டத்தின் பொறுப்பாளர் நரேந்திர கிருஷ்ணா, திட்ட மேலாளர் டாடா ராவ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரெயில் பால தூண்கள் விழுந்து உயிரிழந்த ரமேஷ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் நிறுவனம் ரூ.5 லட்சமும், எல் அண்ட் டி நிறுவனம் ரூ.20 லட்சமும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விடுதி அருகில் உள்ள டீக்கடை எரிந்து சாம்பலாகியுள்ளது.
    • டீக்கடை நடத்தி வந்தவரின் மகன் உயிரிழந்த நிலையில், தாய் படுகாயத்துடன் உயிர் பிழைத்துள்ளார்.

    அகமதாபாத் விமான விபத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானம் பி.ஜே. மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், விடுதி மற்றும் விடுதி அருகில் இருந்தவர்களும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

    விடுதியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விடுதி அருகே டீக்கடை நடத்தி வந்த பெண் ஒருவர், படுகாயம் அடைந்த நிலையில், மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்த அவரது 14 வயது மகன் தீயில் கருகி உயிரிழந்துள்ளான். அவரை அடையாளம் காண முடியாததால் டிஎன்ஏ பரிசோதனைக்காக காத்திருக்கிறார்கள்.

    சீதாபான் என்ற அந்த பெண் டீக்கடையில் இருந்துள்ளார். அவரது மகன் ஆகாஷ் படானி (வயது 14) டீக்கடை அருகில் உள்ள மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளான். விமானம் மோதி தீப்பிடித்ததில் டீக்கடையும் எரிந்துள்ளது. இதில் சீதாபென் படுகாயம் அடைந்துள்ளார்.

    அப்போது விமானத்தின் உடைந்த பாகம் ஒன்று ஆகாஷ் படானியின் தலையை பலமாக தாக்கியுள்ளது. அதேவேளையில் சீதாபானுவுக்கு தீக்காயம் ஏற்பட்டதால் மகனை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகாஷ் தலையை தாக்கிய பாகம் எரியத் தொடங்கியுள்ளது. இதில் ஆகாஷ் கரிக்கட்டையாகியுள்ளார். தன் கண்முன்னே மகன் கருகிய நிலையில் காப்பாற்ற முடியவில்லையே என சிகிச்சை பெற்று வரும் சீதாபென் கதறியது பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

    திருமணம் ஆன 2 நாளிலேயே விமானத்தில் பயணம் செய்த நபர் பலியான சோகம்

    பவிக் மகேஷ்வாரி (26) என்பவர் லண்டனில பணிபுரிந்து வந்துள்ளார். இவர் விடுமுறைக்கான வதோதராவிற்கு கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னதாக வந்துள்ளார். விடுமுறைக்கு வந்த பவிக் மகேஷ்வாரிக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

    அவசரமாக பெண் பார்த்துள்ளனர். தற்போது எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம். பின்னர் வரும்போது பெரிய அளவில் வரவேற்பு விழா எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் திருமணம் முடிந்து 2 நாள் கழித்து லண்டனுக்கு சென்றபோது, விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். விமான நிலையத்திற்கு அவருடைய மனைவி வழி அனுப்ப வந்துள்ளார். வழி அனுப்பிவிட்டு வீடு திரும்புவதற்குள் இப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

    பவிக் மகேஷ்வாரி லண்டனில் படித்து அங்கேயே வேலை பார்த்து வந்துள்ளார். வருடத்தில் இரண்டு வாரம் குடும்பத்தினரை சந்திக்க வதோதரா வந்து செல்வாராம். அப்படி இந்த வருடம் வரும்போது கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என குடும்பத்தினர் வற்புறுத்தியதால் திருமணம் செய்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜூன் 10ஆம் தேதி திருமணம் முடிந்து வீடே மகிழ்ச்சியில் திகைத்தது. தற்போது துக்க வீடாக மாறியுள்ளதாக பவிக் மகேஷ்வர் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வானது ஜூன் 15ம் நாள் நடைபெற இருக்கிறது.
    • மாற்றுத் தேதிகள் wwv.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

    சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வானது ஜூன் 15ம் நாள் நடைபெற இருப்பதால், அதே நாளில் நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மாற்றுத் தேதிகள் wwv.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் அணி 3-வது வெற்றியையும், திருப்பூர் அணி 2-வது வெற்றியையும் குறிவைத்து உள்ளன.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. 11-ந்தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தன.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    8 ஆட்டங்கள் முடிவில் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன.

    திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் புள்ளி எதுவும் பெறவில்லை.

    ஒருநாள் ஓய்வுக்கு பிறகு சேலத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் இன்று ஆரம்பமாகிறது. வருகிற 19-ந் தேதி வரை அங்கு 9 ஆட்டங்கள் நடக்கிறது. வாடிப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. சேலம் அணி 3-வது வெற்றியையும், திருப்பூர் அணி 2-வது வெற்றியையும் குறிவைத்து உள்ளன.

    டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு தொடங்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. திருப்பூரை 8 விக்கெட் வித்தியாசத்திலும். நெல்லையை 41 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணியில் கேப்டன் பாபா அபராஜித், ஆஷிக், விஜய் சங்கர், ஆல்-ரவுண்டர்கள் அபிஷேக் தன்வர், ஸ்வப்னில் சிங், பந்துவீச்சாளர் எம். சிலம்பரசன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது.

    ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி தான் மோதியுள்ள 2 ஆட்டங்களிலும் (திண்டுக்கல், மதுரை அணிகளுக்கு எதிராக) தோற்றது. அந்த அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. கோவை அணியில் பி.சச்சின், லோகேஷ்வர், ஆண்ட்ரே சித்தார்த், ரோ கித், எம். சித்தார்த், ஜதவேத் சுப்பிரமணியன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்- சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 2 ஆட்டத்தில் விளையாடி தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளன. அந்த அணிகள் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் 8 போட்டிகள் கோவையில் நடைபெற்ற நிலையில், இந்த போட்டி சேலத்தில் நடக்கிறது.
    • சேலம் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 9ஆவது ஆட்டம் சேலத்தில் இன்று நடக்கிறது. இதில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சேலம் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தெர்வு செய்துள்ளது.

    ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ்:-

    அமித் சாத்விக், துஷார் ராஹேஜா, உதிரசாமி சசிதேவ், டேரில் பெராரியோ, சாய் கிஷோர், முகமது அலி, பிரதோஷ் ரஞ்சன் பால், ஏ. இசக்கி முத்து, எம். மதிவண்ணன், ஆர். சிலம்பரசன், டி. நடராஜன்.

    சேலம் ஸ்பார்டன்ஸ்:-

    எஸ். அபிஷேக், ஹரி நிஷாந்த், ஆர். கவின், பூபதி குமார், நிதிஷ் ராஜகோபால், சன்னி சந்து, எஸ். ஹரிஸ் குமார், எம். முகமது, எம். பொய்யாமொழி, ரஹில் ஷா, எம்.இ. யாஷ் அருண் மொழி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • இன்ஜின் செயல்பாடு உள்ளிட்டவற்றை சோதனை செய்த பிறகே விமானத்தை இயக்க வேண்டும்.

    ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானங்களில் ஆய்வு செய்யுமாறு விமான போக்குவரத்து துறை இயக்குநகரம் உத்தரவிட்டுள்ளது.

    போயிங் 787 விமானங்களில் கூடுதல் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விமானத்தின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

    எரிபொருள் இருப்பு நிலவரம், இன்ஜின் செயல்பாடு உள்ளிட்டவற்றை சோதனை செய்த பிறகே விமானத்தை இயக்க வேண்டும்.

    ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் நேற்று அகமதாபாத்தில் வெடித்து சிதறியதில் 241 பேர் பலியான நிலையில் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்.
    • முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

    காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென ஈரான் மீது வான்தாக்குதல் நடத்தியது. ஈரானிய புரட்சிகர காவல்படை தலைமையகம் மற்றும் தெஹ்ரான் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் தளபதி அமீர் அலி ஹஜிஜதே இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் உறுதி செய்துள்ளது. இவர் ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஏவுகணை திட்டத்தின் தளபதியாக இருந்தார். பாலிஸ்டிக் ஏவுகணை கிடங்குகளை மேற்பார்வையிடும் படைகளின் முக்கிய கமாண்டராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்துள்ளது. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பசில் ஜோசஃப்.
    • மலையாள சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பசில் ஜோசஃப். இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.

    பசில் ஜோசஃப் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவர் நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே, ஜான்.ஈ மேன், ஃபலிமி, நுன்னாகுழி மற்றும் சமீபத்தில் வெளியான சூக்ஷ்மதர்ஷினி மற்றும் பொன்மேன் மாபெரும் வெற்றியை பெற்றது. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மரணமாஸ் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இவர் டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் நடிப்பில் மலையாள சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பசில் ஜோசஃப் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைப்படத்தை இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் தற்போழுது அட்லீ இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×