என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இருந்து 11,176 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • இந்த ஆண்டு தாம்பரத்தில் இருந்து பஸ்கள் புறப்படாது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து 14,016 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    * அக்.31-ந்தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் அக்.28 முதல் 30 வரை சிறப்பு பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    * அக்.28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 14,016 பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    * சென்னையில் இருந்து 11,176 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    * கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டும் பஸ்கள் இயக்கப்படும்.

    * கடந்தாண்டு 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு 3 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்.

    * இந்த ஆண்டு தாம்பரத்தில் இருந்து பஸ்கள் புறப்படாது.

    * தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்காக 9,441 பஸ்கள் இயக்கப்படும்.

    * தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து மட்டும் 5 லட்சத்து 83 ஆயிரம் பேர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓலா எலெக்ட்ரிக், பண்டிகைக் காலத்திற்கான மிகப்பெரிய ஓலா சீசன் விற்பனை அறிவிப்பு.
    • இது, எலெக்ட்ரிக் வாகனத்திற்கு மாறுவதற்கான சிறந்த நேரமாகும்.

    இந்தியாவின் மிகப்பெரிய பியூர்-பிளே EV நிறுவனமான Ola Electric, பண்டிகைக் காலத்திற்கான அதன் மிகப்பெரிய Ola சீசன் விற்பனை விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக புதிய 'BOSS' சலுகைகளை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் S1 போர்ட்ஃபோலியோவில் ₹ 20,000 வரையிலான தள்ளுபடியைப் பெறலாம் மற்றும் ஸ்கூட்டர்களில் ₹ 25,000 வரை மதிப்புள்ள கூடுதல் நன்மைகளைப் பெறலாம். இது, EVக்கு மாறுவதற்கான சிறந்த நேரமாகும்.

    'BOSS' விளம்பரப் பிரச்சாரத்தின் கீழ், நிறுவனம் பின்வரும் நன்மைகளை வழங்கும்:

    ● BOSS விலைகள் : Ola S1 போர்ட்ஃபோலியோ வெறும் ரூ. 74,999ல் தொடங்குகிறது.

    ● BOSS தள்ளுபடிகள் : முழு S1 போர்ட் ஃபோலியோவில் ரூ. 20,000 வரை கிடைக்கும்.

    ரூ. 25,000 வரையிலான கூடுதல் BOSS நன்மைகள் :

    'BOSS' உத்தரவாதம் : ரூ.7,000 மதிப்புள்ள இலவச 8 ஆண்டுகள்/80,000 கி.மீ பேட்டரி உத்தரவாதம்.

    'BOSS' ஃபைனான்ஸ் சலுகைகள் : தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு EMIகளில் ரூ.5,000 வரையிலான நிதிச் சலுகைகள்.

    BOSS நன்மைகள் : ரூ.6,000 மதிப்புள்ள இலவச MoveOS+ மேம்படுத்தல்; ரூ.7,000 வரையிலான மதிப்புள்ள இலவச சார்ஜிங் கிரெடிட்கள். 

    Ola Electric ஆனது வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு வரம்புத் தேவைகளைக் கொண்ட கவர்ச்சிகரமான விலைப் புள்ளிகளில் ஆறு சலுகைகளுடன் விரிவான S1 போர்ட்ஃபோலியோவை வழங்குகிறது. பிரீமியம் சலுகைகளான S1 Pro மற்றும் S1 Air ஆகியவை முறையே ரூ.1,34,999 மற்றும் ரூ.1,07,499 விலையில் கிடைக்கின்றன. மாஸ் மார்க்கெட் சலுகைகளில் S1 X போர்ட்ஃபோலியோ (2 kWh, 3 kWh மற்றும் 4 kWh) முறையே ரூ.74,999, ரூ.87,999 மற்றும் ரூ.101,999 விலைகளில் கிடைக்கின்றன.

    Ola Electric சமீபத்தில் #HyperService விளம்பரப் பிரச்சாரத்தை அறிவித்தது. இதன் கீழ், நிறுவனம் தனது சேவை வலையமைப்பை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 1,000 மையங்களாக இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது. கூடுதலாக, இந்தியா முழுவதும் அதன் விற்பனை மற்றும் சேவை நெட்வொர்க்கை விரிவுபடுத்த நெட்வொர்க் பார்ட்னர் திட்டத்தையும் அறிவித்தது. திட்டத்தின் ஒரு பகுதியாக, ஓலா எலெக்ட்ரிக் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் நெட்வொர்க்கை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், ஓலா எலெக்ட்ரிக் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மெக்கானிக்கையும் EV-க்கு தயார்படுத்த ஒரு லட்சம் மூன்றாம் தரப்பு மெக்கானிக்களுக்கு பயிற்சி அளிக்கும்.

    ஆகஸ்ட் 2024 இல் தனது வருடாந்திர 'சங்கல்ப்' நிகழ்வில், Roadster X (2.5 kWh, 3.5 kWh, 4.5 kWh), Roadster (3.5 kWh, 4.5 kWh, 6 kWh) மற்றும் Roadster ஆகியவற்றை உள்ளடக்கிய Roadster புரோ (8 kWh, 16 kWh). மோட்டார் சைக்கிள் தொடரை அறிமுகப்படுத்துவதாக நிறுவனம் அறிவித்தது. மோட்டார்சைக்கிள்கள் பல பிரிவு-முதல் தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் அம்சங்களை வழங்குகின்றன, அவற்றின் விலைகள் முறையே INR 74,999, INR 1,04,999 மற்றும் INR 1,99,999 முதல் தொடங்குகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆவதாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு.
    • சர்வீஸ் மையத்திற்கு சென்றால் சரியாக ரிப்பேர் பார்த்து தரும் சேவையில் அதிருப்தி.

    ஓலா நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அடிக்கடி ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரிப்பேர் ஆகிறது. சர்வீஸ் சென்டர் சென்றால் சரியான பதில் கிடைப்பதில்லை என்ற வாடிக்கையாளர்களின் குமுறல் செய்தியாக வெளிவந்த வண்ணம் உள்ளது. சர்வீஸ் சென்டர் முன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ வைத்து எரிப்பு, ஷோ ரூம்-க்கே தீ வைப்பு போன்ற சம்பவங்கள் விரக்தியான வாடிக்கையாளர்களால் நடந்துள்ளன. பெங்களூரு பெண் ஒருவர் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வேஸ்ட் என பெரிய போர்டு தொங்கவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் சர்வீஸ் சென்டர்களில் ஓலா நிறுவனம் பவுன்சர்களை நிறுத்தியுள்ளதாகவும் பல வாடிக்கையாளர்கள் தங்களது ஆதங்களை வெளிப்படுத்தியுள்ளனர். சில வாடிக்கையாளர்கள் Stand-up காமெடியன் குணால் கம்ராவை டேக் செய்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    அந்த எக்ஸ் தள பதிவுகளை சுட்டிக்காட்டி குணால் கம்ரா ரீ-ட்வீட் ஓலா நிறுவனம் மீது குற்றச்சாட்டை கூறியுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது.

    ஆர்.ஜே. காஷ்யப் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் "ஓலா தற்போது ஒவ்வொரு சர்வீஸ் சென்டருக்கும் 5 முதல் 6 பவுன்சர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஓலா சர்வீஸ் சென்டருக்கு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள பவுன்சர்கள் பெண் வாடிக்கையாளர்கள் உள்பட அனைத்து ஓலா வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்க்க முடியாது. ஆகவே, இதுபோன்ற சர்வீஸைதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதை ரீ-ட்வீட் செய்த குணால் கம்ரா, "தயவு செய்து செய்தியாளர்கள் இதுகுறித்து சரிபார்க்கலாம். இது உண்மையாக இருந்தால் உண்மையிலான தனித்துவமானது. விற்பனை குழு விற்பனைக்கான. விற்பனைக்குப் பிறகு பவுன்சர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பாருங்கள் குணால் கம்ரான் அமோல் சவுத்ரி என்பவர் 20-10-2004 அன்று ஓலா சர்வீஸ்க்காக அப்பாயின்ட்மென்ட் பெற்றிருந்தேன். ஸ்கூட்டரை ரிப்பேர் பார்ப்பதற்கு யாரும் எடுத்துச் செல்லவில்லை. பவுன்சர்கள் மையத்தில் உள்ளனர். அவர்கள் ஆயுதங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு பதில் அனித்தனர் என்றார்.

    இந்த பதிவை ரீ-ட்வீட் செய்த குணால் கம்ரா "ஓலா நிறுவன உரிமையாளர் பவிஷ் அகர்வாலை டேக் செய்து, இதுபோன்ற புதுமையான இந்தியா தயாரிப்பை விற்றுவிட்டீர்கள். ஊழியர்களை பாதுகாக்க பவுன்சர்சளை அமர்த்த வேண்டியிருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

    குணால் கம்ரா முதன்முறையாக ஓலாவை விமர்சிக்கவில்லை. இதற்கு முன்னதாக வாடிக்கையாளர்களின் புகார் குறித்து வெளிப்படைதன்மை இல்லை, தற்போதைய வாடிக்கையாளர்களின் புகார்களை நிவர்த்தி செய்வதற்கான காலக்கெடு இல்லை என விமர்சித்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது
    • ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் இந்த படம் சிறப்பு திரையிடல் செய்யப்படும்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை சொக்கவைத்த படம் விண்ணைத் தாண்டி வருவாயா. பின்னணியில் ஏஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் - ஜெஸியின் காதல் ரசிகர்களைப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் கழித்தும் கட்டிப் போட்டுள்ளது.

    காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் பட்டியலில் விண்ணைத் தாண்டி வருவாயா நிச்சயம் இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் இந்த படம் சிறப்பு திரையிடல் செய்யப்படும். குறிப்பாகச் சென்னை பிவிஆர் விஆர் (pvr vr mall) திரையில் ரீரிலீஸ் ஆகி இப்படம் இன்றுடன் 1000-வது நாளைக் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.

     

    பிவிஆர் திரையில் கடந்த 142 வாரங்களாக [2.75 ஆண்டுகளாக] இப்படம் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வருகிறது. இந்திய அளவில் ரீரிலீசில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் என்ற சாதனையை தனதாகியுள்ளது விண்ணைத் தாண்டி வருவாயா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
    • இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

    பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவ்யூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

    யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தோடு சேர்ந்து சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும்போது, துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்தார். இர்பான், தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார்.

    பாலினத்தை அறிவித்தது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய இருந்த நிலையில், மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

    தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தவறு. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி.
    • சென்னை வந்து ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ரஜினிகாந்த்.

    ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

    படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாக்ராஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார் . அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.

    விசாகபட்டணத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் அதை முடித்துக் கொண்டு சென்னை வந்து ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ரஜினிகாந்த். தற்போதுவரை அவர் ஓய்வெடுத்து வந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    அதன்படி இன்றுமுதல் சென்னையில் நடக்க உள்ள கூலி படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இணையுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர்!
    • மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீர வணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர்!

    தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர்!

    அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீர வணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

    மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீர வணக்க நாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6-வது தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா ஆவார்.
    • வங்கதேசத்துக்கு எதிராக ரபாடா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்ததுள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இந்நிலையில் இந்த போட்டியில் முஷ்பிகுர் ரஹீம் விக்கெட்டை ரபாடா வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் முதல் இடத்தில் டேல் ஸ்டெய்ன் (439) உள்ளார். அவரை தொடர்ந்து 2 முதல் 6 இடங்கள் முறையே ஷான் பொல்லாக் (421), மக்காயா ந்தினி (390), ஆலன் டொனால்ட் (330), மோர்னே மோர்கல் (309), ககிசோ ரபாடா (300) ஆகியோர் உள்ளனர்.

    மேலும் மிகக் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையும் ரபாடா படைத்துள்ளார். அந்த வகையில் முதல் நான்கு இடங்கள் முறையே ரபாடா (11817 பந்துகள்), பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் (12602),

    தென் ஆப்பிரிக்கா வீரர்கள் டேல் ஸ்டெய்ன் (12605), ஆலன் டொனால்ட் (13672) ஆகியோர் உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாடு முழுவதும் இந்த வகையில் 10 லட்சம் கையொப்பங்களை வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் அவர் உள்ளார்.
    • முதல் அதிஷ்டசாலியாக ஜான் டிரெஹர் என்பவருக்கு 1 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    உலக பணக்காரருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளருமானஎலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளார். அமெரிக்காவில் வரும் நவமபர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசு வேட்பாளராக டிரம்ப்பும் களம் காண்கின்றனர்.

    இதில் டிரம்பை ஜெயிக்க வைக்க எலான் மஸ்க் படாதபாடு படுகிறார். டிரம்பின் பிரச்சாரத்துக்கு 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியதோடு மட்டும் நில்லாமல் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அனைவரையும் வாயடைக்கச் செய்யும் மேற்கூறிய அறிவிப்பை மஸ்க் தற்போது வெளியிட்டுள்ளார்.

     

    டிரம்புக்கு குறைந்த வாக்கு வங்கி இருக்கும் மாகாணங்களில் வாக்காளர்களை ஒருங்கிணைத்து, பதிவு செய்வது, அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய அரசியல் நடவடிக்கை அமைப்பு [பிஏசி] என்ற ஒன்றை ஆன்லைன் மூலம் செயல்படுத்தி வருகிறார் எலான் மஸ்க் . இதன்படி துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உள்ளிட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள சில சட்டங்களுக்கு ஆதரவு திரட்டி படிவங்களில் கையொப்பம் வாங்கும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

     

    நாடு முழுவதும் இந்த வகையில் 10 லட்சம் கையொப்பங்களை வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் அவர் உள்ளார். முக்கியமாக பென்சில்வேனியாவில் இந்த திட்டம் தீவிரத்துடன் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த படிவத்தில் கையெழுத்திடும் நபர்களில் தேர்தல் நடக்கும் நவம்பர் 5 வரை தினமும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு 1 மில்லியன் டாலர்கள் [சுமார் 8 கோடி ரூபாய்] பரிசாக வழங்கப்படும் என்று மஸ்க் அறிவித்துள்ளார்.

    அதன்படி முதல் அதிஷ்டசாலியாக பென்சில்வேனியாவை சேர்ந்த ஜான் டிரெஹர் என்பவருக்கு 1 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த திட்டத்துக்கு ஜனநாயகவாதிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரேசன் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
    • ரேசன் கடை திறக்க கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சிவப்பு ரேசன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள் ரேசன்கார்டுக்கு 10 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது இலவச அரிசி வழங்குவதில் ஆளும் அரசுக்கும். அப்போதைய கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதில் உள்துறை அமைச்சகம் தலையிட்டு இலவச அரிசிக்கு பதிலாக நேரடி பணப்பரிமாற்றதிட்டத்தை அமல்படுத்தியது.

    அதன்படி கிலோ அரிசிக்கு ரூ.30 என நிர்ணயம் செய்யப்பட்டு, சிவப்பு நிற அட்டைக்கு 20 கிலோவுக்கு ரூ.600, மஞ்சள் நிற அட்டைக்கு 10 கிலோ அரிசிக்கு ரூ.300 வழங்கப்பட்டு வந்தது.

    வெளி மார்க்கெட்டில் அரிசியின் விலை அதிகரித்து வருவதால், அரசு வழங்கும் மானிய உதவி போதவில்லை என பணத்துக்கு பதிலாக மீண்டும் ரேசன் அரிசி வழங்க வேண்டும் என புதுவை மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வந்தும், ரேசன் கடைகள் திறக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று 3 ஆண்டுகளாகியும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசு ரேசன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில், முதலமைச்சர் ரங்கசாமியிடம் பெண்கள் ரேசன் கடை திறந்து அரிசி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து புதுச்சேரியில் விரைவில் ரேசன் கடைகள் திறக்கப்படும் என ரங்கசாமி உறுதியளித்தார். இருப்பினும் பாராளுமன்ற தேர்தலில் ஆளும்கட்சி தோல்வியை சந்தித்தது.

    இதையடுத்து, ரேசன் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட்டு மாதம் பட்ஜெட் கூட்டத்தில் விரைவில் ரேசன் கடைகள் திறக்கப்படும்' என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    தொடர்ந்து ரேசன்கடை திறக்க கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் வழங்கினார்.

    முதல் கட்டமாக தீபாவளி பரிசாக அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இன்று முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

    இதன்படி இன்று மாலை ரேசன் கடை திறப்பு மற்றும் தீபாவளி இலவச பொருட்கள் வழங்கும் விழா மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை சாலையில் நடைபெற உள்ளது. கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் ரேசன் கடையை திறந்து வைத்து, இலவச அரிசி, சர்க்கரையை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைக்கின்றனர்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் தேனீ.ஜெயக்குமார். திருமுருகன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல். ஏக்கள் ஏ.கே.டி ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், சிவசங்கர், தலைமை செயலர் சரத் சவுகான், குடிமை பொருள் வழங்கல் துறை செயலர் முத்தம்மா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    ×